rp

Blogging Tips 2017

பிச்சை எடுத்த குழந்தைகளை பள்ளியில் சேர்த்த மாவட்ட ஆட்சியர் !!!

தெருவில் பிச்சை எடுத்து திரிந்த 6 குழந்தைகளை மீட்டு உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்த்துள்ளார். மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கைக்கு பொது பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அகமது

 மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெண்பாவூர் கிராமத்தில் நேற்று முன்தினம் 6 குழந்தைகள் தெருவில் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதாக மாவட்ட
ஆட்சியர் தரேஸ் அகமதுவிற்கு தகவல் கிடைத்தது இதனை தொடர்ந்து மாவட்ட உத்தரவின் பேரில் மாவட்ட சமூக நல அலுவலர் ஆர்.ஐ ,
வி.ஏ.ஒ மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட பணியாளர்கள் வெண்பாவூர் கிராமத்தில் சென்று விசாரணை செய்தனர் .அவர்கள் அனைவரும்  பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்  என தெரிய வந்தது. அந்த 6 குழந்தைகளையும் உறைவிடப் பள்ளியில் சேர்த்து அவர்களின் படிப்பிறகு வழி வகைச் செய்தார்.

No comments:

Post a Comment


web stats

web stats