5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Friday, 10 January 2014

11 ஆம் வகுப்பு பாடத்தைப் படிக்காமல் 12 ஆம் வகுப்பு பாடத்தை இரு ஆண்டுகளுக்கு படிக்கும் மோசமான வழக்கத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும்.

2013 - 14 ஆம் கல்வியாண்டில் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.டி) சேர்ந்த மாணவர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற தமிழக
பாடத்திட்ட மாணவர்களின் எண்ணிக்கை மிகுந்த கவலையளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.மேலும், ஐ.ஐ.டி.க்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற சுமார் 20 ஆயிரம் பேரில் 11,693 பேர் நடுவண் இடைநிலைக்கல்வி வாரிய பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் ஆவர். அவர்களுக்கு அடுத்தபடியாக ஆந்திர மாநில கல்வி வாரிய பாடத்திட்ட மாணவர்கள் 3538பேரும், ராஜஸ்தான் மாநில பாடத்திட்ட மாணவர்கள் 1376 பேரும், மராட்டிய பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் 1210 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களில் 31 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சென்னையில் உள்ள ஐ.ஐ.டி.யில் சேர்ந்துள்ள 828 மாணவர்களில் 1% கூட தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் இல்லை .தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ளுவதற்கு மிகவும் அவசியமான 11 ஆம் வகுப்பில், அவ்வகுப்புக்கான பாடத்தைப் படிக்காமல் 12 ஆம் வகுப்பு பாடத்தை இரு ஆண்டுகளுக்கு படிக்கும் வழக்கம் ஊக்குவிக்கப்படுகிறது. இந்த மோசமான வழக்கத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும்.நடுவன் இடைநிலை கல்வி வாரிய பாடத் திட்டத்திற்கு இணையாக சமச்சீர் கல்விப்
பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும். கூடுதலாக, ஆந்திரா, ராஜஸ்தான் மாநில பாடத்திட்டங்களில் உள்ள சாதகமான அம்சங்கள் என்ன? என்பதை நமது கல்வியாளர்களை அனுப்பி ஆய்வு செய்து அவற்றையும் நமது கல்வித் திட்டத்தில் சேர்க்க வேண்டும். இன்னொருபுறம் சமூகநீதி கோட்பாடுகளின்படி, ஐ.ஐ.டி.க்களில் தமிழக மாணவர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்ய, ஐ.ஐ.டி. உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு கல்வி நிறுவனங்களிலும் மக்கள்தொகையின் அடிப்படையில் மாநிலவாரி இட ஒதுக்கீடு வழங்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment


web stats

web stats