Monday, 13 January 2014

போலியோ இல்லாத நாடாக மாறியது இந்தியா: உலக சுகாதார அமைப்பு பாராட்டு

இந்தியாவை போலியோ எனப்படும் முடக்குவாத நோய் இல்லாத நாடாக உலக சுகாதார அமைப்பு இன்று அறிவிக்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக இந்தியாவில் போலியோ நோயின் பாதிப்பு இல்லையென உறுதி செய்யப்பட்ட பின், இந்த அறிவிப்பை உலக சுகாதார அமைப்பு வெளியிடுகிறது. 2011ம் ஆண்டு மேற்குவங்கத்தில் ருக்சார் என்ற 2 வயது சிறுமிக்கு ஏற்பட்ட போலியோ பாதிப்பே கடைசியானது ஆகும். ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் வரை பாதிக்கப்பட்டு வந்த இந்தியாவில், இந்த வியத்தகு சாதனை எட்டப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலக போலியோ நோயாளிகளின் எண்ணிக்கையில் பாதி பேர் இந்தியர்கள் என்பது நினைவுக் கூறத்தக்கது. கடந்த ஆண்டுகளில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ரூ.1000 கோடி செலவளித்தது.


ஆண்டு ஒன்றுக்கு 5 முதல் 6 தடவை வரை நடத்தப்படும் போலியோ ஒழிப்பு முகாம்களில் 17 கோடி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. போலியோ இல்லாத நாடாக தற்போது மாறியிருந்தாலும், பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இது முற்றிலும் ஒழிக்கப்படாததால் அந்நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு போலியோ பரவ வாய்ப்புள்ளதாக சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சோமாலியா, நைஜீரியா உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளிலும் போலியோவின் தாக்கம் அதிகமாக உள்ளதால், இந்தியா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats