Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

போராட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம்

தொடக்க கல்வி ஆசிரியர் சங்கங்கள் நடத்திய, அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின், சம்பளம் பிடித்தம் செய்ய, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் (டிட்டோஜாக்), கடந்த, பிப்., 26 மற்றும் மார்ச் 6ம் தேதிகளில், அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
'இதில் ஈடுபட்டவர்களின், சம்பளம் பிடித்தம் செய்யப்படும்' என, தொடக்க கல்வி இயக்குனரகம் அறிவித்தது. தேர்தல் வருவதால், அரசு இந்த நடவடிக்கையை, 'வாபஸ்' பெறும் என, தொடக்க கல்வி ஆசிரியர்கள் நம்பினர். ஆனால், சம்பளம் பிடித்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை, தொடக்க கல்வி இயக்குனரகம் எடுத்து வருகிறது. இதற்காக, சம்பந்தப்பட்ட ஆசிரியர், பணிபுரியும் ஒன்றியம், மாவட்டம், அவரது சம்பளத் தொகை, பெயர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய சான்றுகளை சமர்ப்பிக்க, உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment


web stats

web stats