Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CM CELL REPLY
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- Pay Detail download
- pedagogy
- PENTION
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRB
- UGC
- university news
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ

WHAT IS NEW? DOWNLOAD LINKS
ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் விதிகள் அரசாணை தயாராகியும் வெளியிட தயக்கம்.
ஆசிரியர்கள் இடமாறுதல் தொடர்பான விதிகளை, தமிழக பள்ளிக்கல்வித் துறை இறுதி செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் விதிமுறையை, அரசு உருவாக்கியுள்ளது. இதற்கான அரசாணை, ஜூலை, 6ல் தயாராகி உள்ளது. ஆனாலும்,அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
அதே நேரத்தில் இதுபற்றிய தகவல்கள், இணையதளங்கள்,ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்களின், 'வாட்ஸ் ஆப்'களில் வலம் வருகின்றன.
அரசாணை அம்சங்கள்
பெருந்தலைவர் காமராஜர்
தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், ‘பெருந்தலைவர் காமராஜர்’. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது. பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார்
மருத்துவ நுழைவுத் தேர்வு: மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
மருத்துவ நுழைவுத் தேர்வு தொடர்பாக மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு கிடையாது என மத்திய அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தை எதிர்த்து ஆனந்தராஜ் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில், மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
தமிழ்ப் பல்கலை.யில் ஜூலை 20-ல் பி.எட்., எம்.எட். நேரடிச் சேர்க்கை...!
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான நேரடிச் சேர்க்கை வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) தெ. விஞ்ஞானம் தெரிவித்திருப்பது:
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையின் வழியாக தேசிய ஆசிரியர்
காலங்கள் மறக்காத பெயர் 'காமராஜர்!' : இன்று காமராஜர் பிறந்த நாள்
“படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு...”
இந்த வரிகள், நிச்சயமாக, மறைந்த, முன்னாள் முதல்வர் காமராஜருக்கு பொருந்தும். பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வரலாற்றின் பக்கங்களில், காமராஜருக்கு, எப்போதுமே தனியிடம் உண்டு. பல்வேறு அணைகட்டுகள், தொழிற்சாலைகள், இவரின் பெயரை, இன்னும் நினைவூட்ட, இவர் மேற்கொண்ட செயல்பாடுகள் தான் காரணம்.
G.O. No. 258 dated 6.7.16 -Transfer Norms-முக்கிய அம்சங்கள்
- 01.06.2016 நாளை கணக்கிட்டு காலிப்பணியிடம் பட்டியல் தயாரிப்பு.
- உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் செய்தபின் பொது மாறுதல் கலந்தாய்வு.
- பொது மாறுதல் கலந்தாய்விற்கு முன்னர் நிர்வாக மாறுதல் & மனமொத்த மாறுதல் முடிக்கப்பட வேண்டும்.
- மனமொத்த மாறுதல் 01.06.2015 க்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே. .
- அலகு விட்டு அலகு மாநகராட்சி பள்ளிகளுக்கு மட்டுமே. . தொடக்கக் கல்வித்துறை யில் இருந்து பள்ளிக் கல்வித்துறைக்கு இல்லை.
- 01.06.2015 பணியேற்பில் இருந்து விலக்கு பெறுவதில் சென்ற ஆண்டு பின்பற்றபடியே...
- 1. Total blind.
- 2.Physically challenged
- 3.Army working person's spouse
- 4.Critically operated persons .
- 5.Cancer patients
- 6.Widow
- 7.Having Special children.
- 8.Spouse
- 01.6.2015 க்கு பின்னர் கணவன் / மனைவி இறந்து இருப்பீன் சிறப்பு நிகழ்வாக மாறுதல் வழங்கப்பட வேண்டும். .
பெண்கள் பள்ளியில் ராகிங்: மாணவி தற்கொலை முயற்சி: மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் விசாரணை
கரூரில் தனியார் பெண்கள் பள்ளியில் பிளஸ் 1 மாணவியை மற்ற மாணவிகள் ராகிங் செய்ததால் அம்மாணவி புதன்கிழமை தற்கொலைக்கு முயன்றார்.கரூர் மண்மங்கலத்தில் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சரஸ்வதி வித்யாமந்திர் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நிகழாண்டு பிளஸ்-1 வகுப்பில் கரூர் காகிதபுரத்தைச் சேர்ந்த டிஎன்பிஎல் தொழிலாளி பட்டாபியின் மகள் ஜனனி (16) சேர்ந்தார். பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்த இவர் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று பள்ளியில் சேர்ந்தாராம்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஇ, பிஎஸ்சி வேளாண்மைபடிப்புகளுக்கான சமவாய்ப்பு எண் வெளியீடு.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளநிலை பொறியியல்(B.E.), இளநிலை அறிவியல் வேளாண்மை (B.Sc. Agriculture), தோட்டக்கலை (B.Sc. Horticulture), இளநிலைஅறிவியல் செவிலியர் (B.Sc. Nursing), மற்றும் இளநிலை மருந்தாக்கியல்(B.Pharm.) படிப்புகளில் சேருவதற்கான சமவாய்ப்பு எண் (Random Number) புதன்கிழமை வெளியிடப்பட்டது.
தமிழ்ப் பல்கலை.யில் ஜூலை 20-ல் பி.எட்., எம்.எட். நேரடிச் சேர்க்கை
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான நேரடிச் சேர்க்கை வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) தெ. விஞ்ஞானம் தெரிவித்திருப்பது:
அறிமுகம் - `அம்மா வை-பை?`
தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இலவச வைபை திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி இலவச வை-பை வசதி திட்டத்தை மாவட்ட தலைநகரங்களில் அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களைத் தொடர்ந்து மாணவர்களுக்கும் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து விடுப்பு எடுத்து பள்ளி செல்லாத குழந்தைகளை நல்வழிப்படுத்த முடியும் என ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
வகுப்பறைக்குள் புகுந்த நாய்: 3 பேர் காயம்
வகுப்பறைக்குள் புகுந்த தெருநாய் மாணவர்களை கடித்து குதறியதில் படுகாயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காவாகுளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு 100 மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு மாணவர்கள் வந்திருந்தனர். பள்ளியில் துப்புரவு பணியாற்றும் பெண் ஒருவர் நேற்று காலை 9.30 மணிக்கு குடிநீர் தொட்டியில் கிருமிநாசினி மருந்து தெளிக்க வந்தார்.
புரிதலை மேம்படுத்த 23-இல் புத்தாக்கப் பயிற்சி
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், புரிதலை மேம்படுத்த புத்தாக்கப் பயிற்சி குறு வள மைய அளவில் ஜூலை 23-இல் நடைபெறவுள்ளது.
தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்குக் குறு, வள மைய அளவில் ஒருநாள் பயிற்சியாக புரிதலை மேம்படுத்த மாநில, மாவட்ட, வட்டார அளவில் கருத்தாளர் பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டது.
தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்குக் குறு, வள மைய அளவில் ஒருநாள் பயிற்சியாக புரிதலை மேம்படுத்த மாநில, மாவட்ட, வட்டார அளவில் கருத்தாளர் பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டது.
5 மாதத்தில் யாரையும் சந்திக்காத புதிய பென்ஷன் திட்ட ஆய்வு குழு : அரசு ஊழியர்கள் அதிர்ச்சி
திய பென்ஷன் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுனர் குழு, 5 மாதங்களில் யாரையும் சந்திக்கவில்லை என்பது தகவல் உரிமைச் சட்டத்தில் தெரிய வந்தது.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.தமிழகத்தில் 2003 ஏப்.,1ல் புதிய பென்ஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
பி.எட். கலந்தாய்வை முன்கூட்டியே நடத்தத் திட்டம்?
பி.எட். சேர்க்கைக்கு ஜூலை 4-ஆம் வாரத்தில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு, செப்டம்பர் 2-ஆவது வாரத்துக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்கப்படலாம் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் பஸ் பாஸ்:
நிகழ் கல்வியாண்டில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவிட்டார்.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள அனைத்து மேலாண் இயக்குநர்களுடனான ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் பஸ் பாஸ்:
இதில். அமைச்சர் பேசியதாவது:- வருவாயைப் பெருக்கிட அனைத்துப் பேருந்துகளையும் சிறப்பாகப் பராமரித்து சரியான நேரத்தில், பயணிகளின் தேவைக்கேற்பஇயக்க வேண்டும்.வழித்தட முறிவு இல்லாமல் அனைத்து பேருந்துகளையும் இயக்க வேண்டும்.நிகழ் கல்வி ஆண்டுக்கான இலவச பயண அட்டையை ஆகஸ்ட் 31-க்குள் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும்.
2 ஆசிரியர்களின் நல்லாசிரியர் விருது பறிப்பா?
இரண்டு ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கியது தொடர்பாக புகார்எழுந்துள்ளதால், வழங்கப்பட்ட விருதுகள் பறிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் நினைவாக, ஆண்டுதோறும் பள்ளிஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
புதுவை அரசு ஊழியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறை: நாராயணசாமி அறிவிப்பு
புதுவையில் அரசு ஊழியர்கள் சரியான நேரத்தில் வருவதை உறுதி செய்ய அனைத்து துறைகளிலும் பயோ மெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
இன்று காலை மின்துறை அலுவலகத்துக்கு காலையில் சென்ற போது 50 சத ஊழியர்கள் வரவில்லை. பின்னர் ஆய்வின்போது 25சதவீத ஊழியர்கள் வந்ததை நேரில் பார்த்தார்.புதுச்சேரி மாநில முதல்வராக நாராயணசாமி பதவியேற்றது முதல் தொடர் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்
தினமும் காலை, மாலை வேளைகளில் வகுப்பறைகளை கண்காணிக்க வேண்டும், என, தலைமை ஆசிரியர்களுக்கு,கல்வித்துறை அட்வைஸ்
வகுப்பறை கண்காணிப்பு; கல்வித்துறை அட்வைஸ்தினமும் காலை,மாலை வேளைகளில் வகுப்பறைகளை கண்காணிக்க வேண்டும்,என,தலைமை ஆசிரியர்களுக்கு,கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
அரசு அலுவலர் ஓய்வூதியத் திட்டம் என்னவாயிற்று? : கலைஞர்
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கை:
’’ தமிழகத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தியேட்டர்களில் பள்ளி மாணவர்களுக்கு இலவச திரைப்படம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் தியேட்டர்களில் பள்ளி மாணவர்களுக்கு இலவச திரைப்படம் காண்பிக்கப்படும் என்று கலெக்டர் ஞானசேகரன் தெரிவித்தார்.ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில்இந்திய குழந்தைகள் திரைப்பட சங்கத்தின் சார்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில்
கலந்தாய்வுப் பற்றி வாட்டப்பில் வலம் வரும் செய்திகள் அனைத்தும் தொலைகாட்சி செய்திகளே
கலந்தாய்வுப் பற்றி வாட்டப்பில் வலம் வரும் செய்திகள் அனைத்தும் தொலைகாட்சி செய்திகளே
- இதுவரை அரசாணை வெளியாகவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே
- குழப்பங்கள் வேண்டாம
- அதிகாரபூர்வ அறிவிப்பு வராதநிலையில் பல ஆசிரியர்கள் கற்பனையானவிதிகளை பதிவிடுவதும் அவைகள் பல்வேறு தனியார் கல்வி இணைய தளங்களில் வெளியாவதும் அதனை தொலைக்காட்சிகளும் செய்திகளாக உலா வருவதுமாக உள்ளது.
- சற்று பொறுமை அவசியம்!✍
தேசிய திறனாய்வு தேர்வு 9ம் வகுப்பு மாணவர்கள் ஆக.1 முதல் விண்ணப்பிக்கலாம்
அரசுத் தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளதமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வுக்கு ஆக.1முதல்8வரை விண்ணப்பிக்கலாம்.
கிராமப்புற பஞ்சாயத்து,நகர பஞ்சாயத்து மற்றும் டவுன்ஷிப் பகுதிகளில் இருக்கும் அரசு அங்கீகாரம்
வரும் 29ம் தேதி அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு
வங்கிகள் இணைப்பு மற்றும் தனியார் மயத்தை கண்டித்து வரும் 29ம் தேதி அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
இதனால், வங்கிச் சேவை கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் வெங்கடாசலம் கூறியதாவது: -
வேலைநிறுத்த போராட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கியைத் தவிர்த்து பிற தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் 10 தனியார் வங்கிகளின் அதிகாரிகள், ஊழியர்கள் என 3 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். அன்றைய தினம் நாடு முழுவதும் 80,000 கிளைகள் மூடப்பட்டிருக்கும்.
GPF and Other Provident Funds interest Rates fixed at 8.1%
GPF & similar funds will carry Interest rate @8.1% from July, 2016 to Sep, 2016 – Finance Ministry Resolution
Department of Economic Affairs approves 8.1% interest rate for GPF and other related funds w.e.f. 1st July, 2016 to 30th September, 2016. This rate will be in force w.e.f. 1st July, 2016
(PUBLISHED IN PART I SECTION 1 OF GAZETTE OF INDIA)
F.No. No.5(l)-B(PD)/2016
Government of India
Ministry of Finance
Department of Economic Affairs
(Budget Division)
New Delhi, Dated the 30th June, 2016.
It is announced for general information that during the year 2016-17, accumulations at the credit of subscribers to the General Provident Fund and other similar funds shall carry interest at the rate of 8.1% (Eight point one per cent) w.e.f. 1st July, 2016 to 30th September, 2016. This rate will be in force w.e.f. 1st July, 2016. The funds concerned are:
1. The General Provident Fund (Central Services).
2. The Contributory Provident Fund (India).
3. The All India Services Provident Fund.
4. The State Railway Provident Fund.
5. The General Provident Fund (Defence Services).
6. The India Ordinance Department Provident Fund.
7. The Indian Ordinance Factories Workmen’s Provident Fund.
8. The Indian Naval Dockyard Workmen’s Provident Fund.
9. The Defence Services Officers Provident Fund.
10. The Armed Forces Personnel Provident Fund.
2. Ordered that the Resolution be published in Gazette of India.
(H.K. Srivastav)
Director (Budget)
தூய்மைப் பள்ளிகள் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் வழங்கப்படும் "தூய்மைப் பள்ளிகள்' விருதுக்கு ஜூலை 31-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டையைத் தரவிறக்கம் செய்ய...
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2016
பழைய காப்பீட்டு எண்ணைப் பயன்படுத்தி கீழுள்ள இணைப்பில் புதிய அடையாள அட்டையைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
http://tnnhis2016.com/TNEMPLOYEE/EmpECard.aspx
பயனர்எண்
பழைய காப்பீட்டு அடையாள அட்டை எண். (எண் & எழுத்துகள் அடங்கிய 23 உறுப்புகள் உடையது)
கடவுச்சொல்
பிறந்த தேதி
பழைய காப்பீட்டு எண்ணைப் பயன்படுத்தி கீழுள்ள இணைப்பில் புதிய அடையாள அட்டையைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
http://tnnhis2016.com/TNEMPLOYEE/EmpECard.aspx
பயனர்எண்
பழைய காப்பீட்டு அடையாள அட்டை எண். (எண் & எழுத்துகள் அடங்கிய 23 உறுப்புகள் உடையது)
கடவுச்சொல்
பிறந்த தேதி
அங்கீகாரம், பாதுகாப்பில்லாமல் 6,000 ’பிளே ஸ்கூல்’
தமிழகத்தில் எந்த அங்கீகாரமும் இல்லாமல், பாதுகாப்பற்ற முறையில், 6,000 பிளே ஸ்கூல்கள் எனப்படும், முன்பருவ பள்ளிகள் இயங்கி வருகின்றன.
பல கார்ப்பரேட் நிறுவனங்கள் எந்த அனுமதியும் பெறாமல் நடத்தும் இப்பள்ளிகளுக்கு, கல்வித்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகள் உடந்தையாக உள்ள, பகீர் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் பல இடங்களில் பள்ளிகள், நர்சிங் பள்ளிகள், காப்பகங்கள் போன்றவை அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவது அதிகரித்துள்ளது. ஒவ்வொரு முறையும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின்னரே, அங்கீகாரம் மற்றும் பாதுகாப்பு விதிகள் பற்றி, கல்வித்துறையும், சமூக நலத்துறையும் யோசிக்கும் நிலை உள்ளது.
ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வில் கடுமையான விதிகள் அமல்??????????????????
- ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வில் கடுமையான விதிகள் அமல் படுத்தப்பட்டுள்ளதாக தகவல்.
- *கலந்தாய்வு அரசாணை மற்றும் விதிமுறைகள் தயார்நிலையில் உள்ள நிலையில் இன்று மாலை அல்லது நாளை முறையான அறிவிப்பு வெளியிடப்படும் எனத்தெரிகிறது.
- வேலூர்,திருவண்ணாமலை,விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு மாறுதல் செய்யப்படும் ஆசிரியர்கள் அங்கு 6 ஆண்டுகள் கட்டாயம் பணி புரிய வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல்
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு.
நாளையும், நாளை மறுநாளும் நடைபெறவிருந்த வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 12- ஆம் தேதி ஸ்டேட் வங்கி தவிர அதன் துணை வங்கிகளும், ஜூலை 13 ஆம் தேதி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ள இருப்பதாக வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் தெரிவித்திருந்தன.இதற்கு தில்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதையடுத்து வங்கிகள் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அகில இந்திய வங்கிகள்சம்மேளனம் அறிவித்துள்ளது.
மாணவனுக்கு வாசிக்க தெரியவில்லை என்றால் ஆசிரியருக்கு "மெமோ" - இணை இயக்குனர் எச்சரிக்கை
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் சரியாக படிக்காவிட்டால், புத்தகத்தில் உள்ளதை வாசிக்கத் தெரியாவிட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு மெமோ கொடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து கல்வித் துறை இணை இயக்குநர் பாலமுருகன் கூறியதாவது:
இசை தொகுப்பில் பள்ளி மனப்பாடப் பாடல்கள் : எஸ்.சி.இ.ஆர்.டி., தயாரிப்பு
தமிழகத்தில் அரசு துவக்கப் பள்ளி மனப்பாடப் பாடல்களை மாணவர்கள் எளிதில் கற்கும் வகையில், ஆடியோ- வீடியோ வடிவிலான பாடல்களின் இசை தொகுப்பை, மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) தயாரித்துள்ளது. இத்தொகுப்புசி.டி.,க்களை முதல்வர் ஜெயலலிதா அடுத்த மாதம் வெளியிட ஏற்பாடு செய்யப்படுகிறது.
ஜூலை 15-இல் காமராஜர் பிறந்த நாள்: கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட உத்தரவு
முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
வரவிருக்கும் தேசிய கல்விக் கொள்கையில்...இனி 6-ம் வகுப்பில் இருந்துஆங்கிலக் கல்விதான்!'
மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் தேசிய கல்விக் கொள்கை குறித்து, பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டுள்ளது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம். 'வருகிற 31-ம் தேதிக்குள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் எனச் சொல்லியிருக்கிறது மத்திய அரசு. இதுகுறித்து மாநில அரசு மௌனமாக இருப்பது வேதனையளிக்கிறது' என்கின்றனர் கல்வியாளர்கள்.
மாணவர்களை வைத்து குடிநீர் தொட்டி சுத்தம்: ஆசிரியர் சஸ்பெண்ட்
தர்மபுரி மாவட்டம், வத்தல் மலை பெரியூர் அரசு துவக்கப்பள்ளி கட்டடத்தின் முன் தரைக்கு கீழ் பாதாள குடிநீர் தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டியை கடந்த சில தினங்களுக்கு முன், இந்த பள்ளி ஆசிரியர், மாணவர்களை வைத்து சுத்தம் செய்ய வற்புறுத்தியுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)