Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ
WHAT IS NEW? DOWNLOAD LINKS
தேசிய திறனாய்வு தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
பள்ளிகளில் கடந்த ஆண்டு 9ம் வகுப்பு படித்து முடித்து அடுத்தகட்டமாக 10ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேசிய திறனாய்வு தேர்வு நவம்பர் 3ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வில் பங்கேற்க விரும்பும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் www.dge.tn.gov.in இணைய தளம் மூலம் இன்று முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவற்றை பூர்த்தி செய்து, அத்துடன் தேர்வுக் கட்டணமாக ₹50 சேர்த்து அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செப்டம்பர் 7ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரம் வேண்டுவோர் மேற்கண்ட இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஆபத்து : உபரி பணியிடங்கள் கணக்கெடுப்பு
தொடக்க, நடுநிலைப்பள்ளிகளிலும் உபரி ஆசிரியர் கணக்கெடுப்பை அரசு கையில் எடுத்துள்ளது. அதன்படி, 1.08.2019ம் தேதி நிலவரப்படி 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பணியிடம் உபரி பணியிடமாக கருத்தில் கொள்ள அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல் பள்ளிகளில் 75 மாணவர்கள் இருந்தால் மட்டுமே 3 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். 105 மாணவர்களும், அதற்கு மேலும் இருந்தால் மட்டுமே 4ம் பணியிடம் கருத்தில் கொள்ளப்படும் என்றும் தொடக்கக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கான முறையான அறிவிப்பு வெளியானதும் உபரி ஆசிரியர்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு பணி நிரவல் மூலம் வேறு பள்ளிகளுக்கு நியமனம் செய்யப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் நிலை குறித்து வேறு முடிவு எடுக்கப்படலாம். இந்த தகவல் இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10,000 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிறக்கத்தையடுத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஆபத்து : உபரி பணியிடங்கள் கணக்கெடுப்பு
தமிழகத்தில் 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிறக்கத்தை தொடர்ந்து உபரியாக இருக்கும் இடைநிலை ஆசிரியர்களை காலி செய்யும் நடவடிக்கையில் தொடக்கக்கல்வித்துறை இறங்கியுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை நாடு முழுவதும் கல்வித்துறையில் ஏற்படும் அநாவசிய செலவினங்களை குறைக்கும்படி மாநில அரசுகளை வலியுறுத்தி வருவதுடன், கல்வித்துறைக்காக செலவிடப்படும் செலவினங்களையும் கண்காணிக்க தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ள தமிழக அரசு, மத்திய அரசின் அழுத்தம் காரணமாக செலவினங்களை குறைக்கும் வழிவகைகளை கண்டறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளை ஒன்றுடன் ஒன்று இணைப்பது, காலியாகும் அரசுப்பள்ளி கட்டிடங்களை நூலகங்களாக மாற்றுவது என பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசாணை-145 -அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள டிட்டோ-ஜாக் கூட்டத்தை கூட்ட நடவடிக்கை-செ.மு அமெரிக்காவிலிருந்து
அரசாணை 145 ன்படி உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகள் செயல்படும் வளாகத்தில் இயங்கும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளை அப்பள்ளிகளோடு இணைத்து, அதன் தலைமையாசிரியர் தொடக்க நடுநிலைப் பள்ளிகளை நிர்வாகிக்கும் அரசின் முடிவை அடுத்து செய்யப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்து தொடக்கக் கல்வித் துறையின் சங்கங்கள் அடங்கிய டிட்டோஜாக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்குமாறு நமது மாநில தலைவர் திரு செ. முத்துசாமிEX.MLC அய்யா அவர்கள் அமெரிக்காவில் இருந்து நமது பொதுச்செயலாளர் திரு.செல்வராஜ், பொருளாளர் திரு ரக்க்ஷித் ஆகியோருடன் தொடர்பு கொண்டது,,,,
மட்டுமல்லாமல் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளர் திரு.மீனாட்சி சுந்தரம் அவர்களிடமும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் திரு ரங்கராஜன் அவர்களிடமும், தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் திரு. வின்சென்ட் பால்ராஜ் அவர்களிடமும், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் திரு. தாஸ் அவர்களிடமும் இன்று மாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்... டிட்டோஜாக் கூட்டம் கூட்டப்பட வேண்டியது அவசியம் என்றும் அதன் மூலம் அரசாணை 145 ந்படி அரசின் நடவடிக்கைகளுக்கு ஏற்ப அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து கலந்தாலோசனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இது சார்ந்த தொடர் நடவடிக்கைகளை மாநில பொதுச்செயலாளர் திரு. செல்வராஜ் அவர்கள் எடுத்து வருகிறார் என்பதை தகவலுக்கு தெரிவித்து கொள்கிறோம்......
தகவல்
கே.பி.ரக்ஷித்
மாநிலப்பொருளாளர்.
ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் முடிவு - ஏராளமானோர் தோல்வி அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்
கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகள் நடைபெற்றன. இடைநிலை ஆசிரியர் பணிக்கான இந்த தேர்வின் முதல் தாள் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
தேர்வு எழுதிய 1 புள்ளி 63 லட்சம் பேரில் மிக குறைந்த எண்ணிக்கையிலானவர்களே தேர்ச்சி அடைந்துள்ளதாகவும் , பெரும்பாலனவர்கள் தோல்வி அடைந்துள்ளதாகவும் ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வேலைவாய்ப்பு அலுவலகங்கள் பெயர் மாற்றம்...
தமிழகத்தில் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. மாவட்ட ''வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையம்'' என்ற பெயரில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு மையங்களில் பதிவு செய்தோருக்கு பயிற்சி அளிக்க 89 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
skilltraining.tn.gov.in
skilltraining.tn.gov.in
*பள்ளிக் கல்வித்துறை* பள்ளிக்கல்வி ஒரே வளாகத்தில் செயல்படும் *அரசு/ மாநகராட்சி/நகராட்சி/ஊராசி ஒன்றிய தொடக்க/நடுநிலைப்பள்ளிகளின்* மாணக்கர்களின் நலன் மற்றும் நிர்வாக மேம்பாடு கருதி இப்பள்ளிகளின் கல்வி செயல்பாடுகளை ஆய்வு செய்யும் அதிகாரத்தை அதே வளாகத்தில் செயல்படும் *அரசு/ உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு* வழங்குதல் சார்பு *ஆணை* வெளியிடப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் நூலக வாசிப்புக்கு வாரம்தோறும் இரு பாடவேளைகள் ஒதுக்கீடு: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
அரசுப் பள்ளிகளில் புத்தகங்கள் படிப்பதற்காக மாணவர்களுக்கு வாரம்தோறும் 2 பாடவேளைகள் ஒதுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநர் இரா.சுடலைக் கண்ணன், அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: அரசுப் பள்ளி மாணவர்கள் இடையே வாசிப்புத் திறனை மேம்படுத்த பள்ளி வளாகத்தில் நூலகப் பயன்பாடு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை மேலும் பலப்படுத்தும் வகையில், நூலகங்களில் புத்தகங்கள் படிக்க ஏதுவாக, மாணவர்களுக்கு வாரம்தோறும் 2 பாடவேளைகள் ஒதுக்க வேண்டும். நூலகங்களை மேற்பார்வையிட சிறப்பு ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். அந்த ஆசிரியருக்கு குறைந்த பாடவேளைகள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். புத்தகங்கள் கிழிக்கப்பட்டால் பொறுப்பாசிரியர் மற்றும் மாணவருக்கு எவ்வித அபராதமும் விதிக்கக் கூடாது. அதற்கு மாறாக சேதமடைந்த புத்தகங்களைச் சரிசெய்ய பள்ளி மானிய நிதியைப் பயன்படுத்த வேண்டும். தினசரி நாளிதழ்கள் வாங்க இந்த நிதியைப் பயன்படுத்தக் கூடாது.
எம்.பில் எப்பொழுது முடித்திருந்தாலும் அப்பொழுதிருந்தே நிலுவை வாங்கிகொள்ளலாம் - Court Order!
எம்.பில் எப்பொழுதுமுடித்திருந்தாலும்அப்பொழுதிருந்தே நிலுவைவாங்கிகொள்ளலாம்என்றும்,மேலும் வாங்கியநிலுவை திருப்பிசெலுத்திருந்தால் அந்ததொகையினையும் திருப்பிவழங்குவதற்கும் மற்றும்நிலுவை தொகையினைவாங்காமல் இருந்திருந்தால்அவர்களுக்கும்முன்தேதியிட்டு நிலுவைதொகையினைவழங்குவதற்கு அரசாங்கம்பரிந்துரை செய்யவேண்டும்என்று நீதிமன்ற ஆணைவழங்கிவுள்ளது!
CLICK HERE
CLICK HERE
Subscribe to:
Posts (Atom)