5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Monday, 23 December 2013

10 ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை மொத்தமாக திருப்பி தர முடிவு

கடந்த 10 ஆண்டுகளாக எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு வழங்கப்படாத கல்விக் கட்டணத்தை மொத்தமாக திருப்பி வழங்க மாநில அரசு 131 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில், சமூக நலத்துறை அமைச்சராக இருப்பவர் எச். ஆஞ்சநேயா. தொழிற்கல்வி படித்த எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு முந்தைய அரசுகள் கல்விக்கட்டணம் வழங்க தவறிவிட்டன. 2004ம் ஆண்டு முதல் அந்த மாணவர்களுக்கு கல்விக் கட்டணங்கள் வழங்கப்படவில்லை. அந்த பிரிவு மாணவர்களுக்கு 10 ஆண்டுகளாகக் கிடைக்காத கல்விக் கட்டணத்தை மொத்தமாக திருப்பிக் கொடுக்க இப்போதைய மாநில அரசு முன்வந்துள்ளது. இதற்காக 131 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment


web stats

web stats