5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Monday, 6 January 2014

ஜனவரி இறுதியில் குரூப்-4 தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி.,

"இம்மாத இறுதியில் குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்" என டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அ.நவநீதகிருஷ்ணன் கூறினார்.
மதுரையில் பதிவுத்துறை அலுவலர் சங்க இணைய தளம் துவக்க விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட நவநீத கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நேர்மையாகவும், வெளிப்படையான நிர்வாகத்துடன் பணிகளை மேற்கொள்கிறது. குரூப்-4 தேர்வை 13 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். இதன் முடிவுகளை வெளியிட மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம்
.
முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி 69 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசுத் துறையில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும். குரூப்-4 தேர்வு முடிவுகள் இம்மாதம் இறுதியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குரூப்-1 தேர்வு குறித்து விளம்பரம் வெளியிட்டோம். ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர். இதன் முதற்கட்ட தேர்வு ஏப்.,26ல் நடக்கும் என்றார்.

No comments:

Post a Comment


web stats

web stats