rp

Blogging Tips 2017

சில்மிஷ ஆசிரியரை அடித்து துவைத்த பெற்றோர்கள்

சிறுமியரிடம் சில்மிஷம் செய்த ஆசிரியருக்கு, சரமாரியாக அடி உதை விழுந்தது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்து போயம்பள்ளி தண்டா என்ற மலைக் கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 38 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். அதே ஊரைச் சேர்ந்த பசுபதி, 55, என்பவர் ஆசிரியராக உள்ளார். இவர், மாணவியரிடம் ஆபாசமாக பேசி, பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. எதிர்த்த மாணவியரை மிரட்டியதாகவும் தெரிகிறது.


பாலியல் தொந்தரவு எல்லை மீறியதை, தாங்க முடியாத மாணவியர் பெற்றோரிடம் தெரிவித்தனர். ஆத்திரமடைந்த கிராமவாசிகள் திரண்டு, நேற்று காலை பள்ளிக்குள் புகுந்தனர்.

ஆசிரியர் பசுபதியை சரமாரியாக அடித்து உதைத்தனர். செங்கம் போலீசார் மற்றும் கல்வி அதிகாரிகள் விரைந்துச் சென்று, கிராமவாசிகளிடம் சமரசம் பேசினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், அனைவரும் கலைந்துச் சென்றனர். இந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment


web stats

web stats