Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ

WHAT IS NEW? DOWNLOAD LINKS
'ஆல் பாஸ்' திட்டம் ரத்துக்கு தென் மாநிலங்கள் எதிர்ப்பு
டிஜிட்டல் முறையில் கல்வி சான்றிதழ்; பராமரிக்க தேசிய களஞ்சியம்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சென்னை மாவட்ட கிளை பொறுப்பாளர்கள் தொடக்க கல்வி இயக்குனருடன் சந்திப்பு

DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS SOCIAL WELFARE DEFENCE DEPARTMENT - 2016
Dated: 28-10-2016 Member Secretary
FLASH NEWS : TET PAPER I SELECTED CANDIDATES WAITING LIST
Teachers Recruitment Board College Road, Chennai-600006
|
DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS
SOCIAL WELFARE DEFENCE DEPARTMENT - 2016
| |
Dated: 28-10-2016 |
Member Secretary
|
தேசிய திறனாய்வு தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு--
எமிஸ்' பதிவு குளறுபடி : ஆசிரியர்கள் திணறல்
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு; மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 2016 முதல் 2% அகவிலைப்படியை
உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அரசு ஊழியருக்கு ஓய்வூதியம் ரூ.770 : உண்மைதான்... நம்புங்க!
அரசு ஊழியர்களுக்கு உரிமைகளும், ஊதியமும் தருவதில் குழப்பம்
Why the DA from July 2016 is not announced yet?
ஜி.பி.எப்., வட்டி குறைப்பு
அக்., 1 முதல், டிச., 31 வரை, இந்த நிதிக்கு, எட்டு சதவீதம் வட்டி நிர்ணயித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அறிவித்த தேதியில் குரூப் - 4 தேர்வு : டி.என்.பி.எஸ்.சி., உறுதி
அக்டோபர் மாத சம்பளம் 28.10.2016 அன்று கிடைக்காததற்கு காரணம்??
ஆனால் அரசாணை 25.10.2016 மதியத்திற்கு மேல் தான் கிடைக்கப்பெற்றது.
முதன் முதலாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா வாய்ப்பாடு.இம்மாத இறுதிக்குள் வழங்க ஏற்பாடு
8-ம் வகுப்பு ஆல்-பாஸ் திட்டம் ரத்து செய்யப்படாது ? 2020 வரை தகுதி தேர்வு தேர்ச்சி பெறவில்லை என்றாலும் பணியாற்றலாம் ? கல்விக்கொள்கை கூட்டத்தில் முடிவு !!
புதிய கல்விக் கொள்கை - தில்லியில் தமிழக அரசு எதிர்ப்பு!
தனியார் பள்ளிகள் எனும் அதிகார பீடங்கள்
விடைபெற்றது 'சஞ்சாயிகா' : கேள்விக்குறியானது மாணவர்களின் சேமிப்பு பழக்கம் !
புதிய கல்வி கொள்கை தமிழக நிலை என்ன?
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை, ஜூலையில் வெளியானது. அறிக்கை குறித்து பொதுமக்கள், கல்வியாளர்கள் மற்றும் கல்வித் துறையினரிடம் கருத்துக்கள் பெறப்பட்டன. அத்துடன், மாநில அரசுகளும், தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என, மத்திய அரசு கூறியது. கருத்துக் கேட்பு, செப்., 30ல் முடிந்தது.
டைப் ரைட்டிங் தேர்வு: 69,775 பேர் தேர்ச்சி
டைப்ரைட்டிங்' , சுருக்கெழுத்து(சார்ட்ஹேண்ட்), வணிகவியல் தேர்வுகளில் 69 ஆயிரத்து 775 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக அரசு தொழில் நுட்ப கல்வி இயக்கம் மூலம் ஆகஸ்டில் நடந்த டைப்ரைட்டிங், சார்ட்ஹோண்ட் பிரிஜூனியர், இளநிலை, முதுநிலை, சி.இ.ஓ., அக்கவுண்டன்சி உள்பட தொழில் நுட்ப பாடப்பிரிவுகளில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 872 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.
இதில் 69 ஆயிரத்து 775 பேர் வெற்றி பெற்று 63 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு எழுதி, எளிதில் வேலைவாய்ப்பை பெறுவதால் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதனால் ஆண்டுதோறும் இத்தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அரசு பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவு
தொடக்கப் பள்ளிகளில், வகுப்பு வாரியாக மாணவர் விபரங்களை தாக்கல் செய்யும்படி, அனைத்து அரசு பள்ளிகளுக்கும், அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
ஆக., 31 நிலவரப்படி, அரசு பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடந்தது. இதற்கு பின், பல பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர் எண்ணிக்கையை ஆய்வு செய்ய, தொடக்க கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. இதற்கான மாவட்ட வாரியான ஆய்வு, வரும், 31ல் துவங்கி, நவ., 21 வரை நடக்கிறது
உடற்கல்வி ஆசிரியர் ஊக்க ஊதியம் : கல்வி தகுதி நிர்ணயித்தது அரசு
உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான, கல்வி தகுதியை நிர்ணயம் செய்து, அரசு உத்தரவிட்டுள்ளது. 'ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு முன் மற்றும் பின் பெறும் உயர்கல்வி தகுதிகளுக்கு ஏற்ப, இரண்டு ஊக்க ஊதிய உயர்வு வழங்கலாம்' என, அரசு ஆணை உள்ளது. அதே போல், உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் வழங்க, அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
உடற்கல்வி ஆசிரியர்கள், பி.பி.எட்., - பி.பி.எஸ்., - பி.எம்.எஸ்., ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கல்வி தகுதிக்கு, முதலாவது ஊக்க ஊதிய உயர்வும், முதுகலை பட்டம் பெற்றால், இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வும் வழங்கப்படும் இந்த படிப்புகளை முடிந்து, உடற்கல்வி ஆசிரியர்களாக உள்ளோர், முதுகலை பட்டம் பெற்றால், முதலாவது ஊக்க ஊதிய உயர்வும், எம்.பில்., அல்லது பிஎச்.டி., படித்தால், இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வும் வழங்கப்படும் முதுகலை பட்டம் பெற்று, உடற்கல்வி ஆசிரியராக உள்ளோர், எம்.பில்., அல்லது பிஎச்.டி., பட்டம் பெற்றால், தலா, ஒரு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படும்.மேலும், யோகா டிப்ளமோ படிப்பு, உடற்கல்விக்கான படிப்பில் சேர்க்கப்பட்டு, ஊக்க ஊதியம் பெறும் வகையில், அரசாணை ெவளியிடப்பட்டு உள்ளது.
தமிழக ஆசிரியர்களின் கற்பித்தல் முறையில் மாற்றம் தேவை சி.பி.எஸ்.இ. பயிற்சி குழுவினர் பேட்டி
தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் முறையில் மாற்றம் தேவை என்று சி.பி.எஸ்.இ. பயிற்சி குழு நிபுணர் தெரிவித்தார்.
கல்வித்தரம்
உலகத்தரத்திற்கு கல்வித்திட்டங்கள் இருக்கவேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. நிறுவனத்தின் குழு இந்தியாவில் பல்வேறு நகரங்களில் உள்ள சி.பி.எஸ்.இ. மற்றும் மாநில அரசு பள்ளிகள் ஆகியவற்றில் பணியாற்றும் முதல்வர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.
சென்னையிலும் நேற்று இந்த பயிற்சி நடந்தது. அடுத்து கோவை, ஈரோடு, மதுரை ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி குறித்து அந்த குழுவை சேர்ந்த நிபுணர் சித்ரா ரவி கூறியதாவது:-
பதற்றத்தை குறைக்கவேண்டும்
தேர்வுகளால் ஆசிரியர்களும், மாணவர்களும் பதற்றப்படுகிறார்கள். அந்த பதற்றத்தை குறைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் பள்ளிகளில் குறிப்பாக தொடக்கப்பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுத் தேர்வுகளைவிட மாணவர்களின் வளர்ச்சியையும், குறைபாட்டையும் தெரிந்துகொள்வதே ஆசிரியரின் கடமை.
ஆசிரியர்களுக்கு கற்பித்தல் முறையில் மாற்றம் தேவை. வகுப்பறையில் ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கும் பாடத்தினால் மாணவர்கள் அடைய இருக்கும் கற்றல் வெளிப்பாட்டை தெரிந்திருக்க வேண்டும். இது ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, பள்ளிகளுக்கும், பெற்றோருக்கும் பயன்தரும்.
தேர்வு முறையில் மாற்றம்
இதுவரை 123 பள்ளிகளில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. வருங்காலத்தில் கற்றல் முறையை மேம்படுத்தும் தேர்வுகள் இடம்பெற வேண்டும். பருவத்தேர்வுகள் மறைந்து ஒவ்வொரு வகுப்பறையிலும் உருவாக்க தேர்வுகள் நடக்கவேண்டும். பாடத்தை மையப்படுத்தும் தேர்வு முறை ஒழிந்து மாணவர்களின் கற்றல் திறன் வெளிப்பாட்டை மையப்படுத்தும் தேர்வு நடக்கவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பொம்மலாட்டம் ஆடும் ஆசிரியர்கள் : அடிப்படை கல்விக்கு 'டாட்டா!'
அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., சார்பில், ஆசிரியர்களுக்கு, பொம்மலாட்டம் போன்ற நடனப் பயிற்சிகள் தரப்படுவதால், மாணவர்களுக்கான அடிப்படை கல்வி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அடிப்படை கல்வியை வலுப்படுத்த வேண்டிய, எஸ்.எஸ்.ஏ., என்ற, மாநில திட்ட அமைப்பு, மத்திய அரசிடம் பெறும், பல கோடி ரூபாய் நிதியில், ஆசிரியர்களுக்கு பல பயிற்சிகளை அளிக்கிறது.
இதற்காக வரும் ஆசிரியர்களுக்கு, போக்குவரத்து செலவு, உபசாரம், விடுமுறை என, சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. சென்னையில், இரு நாட்களாக, நுாற்றுக்கணக்கான ஆசிரியர்களுக்கு, பொம்மலாட்டம் கற்பித்தல் பயிற்சி நடந்தது. பொம்மலாட்ட பயிற்சி முடித்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்த துவங்கும் முன், அடுத்த பயிற்சிக்கு அழைக்கப்படுகின்றனர்.
'மாணவர்களுக்கு உதவாத, இது போன்ற ஆட்டம் காட்டும் பயிற்சி களை வைத்தே, பல ஆசிரியர்கள் பள்ளிகளில் இருப்பதில்லை' என, தலைமை ஆசிரியர்கள் புலம்புகின்றனர். மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, எஸ்.எஸ்.ஏ., பாடம் நடத்துகிறது. பாடம் கற்க வேண்டிய மாணவர்களோ, வகுப்புகளில், ஆசிரியர்கள் இன்றி தடுமாறுகின்றனர் என, கல்வியாளர்கள் குமுறுகின்றனர்.
இது குறித்து, ஆசிரியர் கள் சிலர் கூறுகையில், 'பாடங்களை முறையாக நடத்த ஆசிரியர்களுக்கு உத்தரவிட வேண்டும். பின், இது போன்ற நடனங்களை கற்று தரலாம்.
'எஸ்.எஸ்.ஏ., நடத்தும் மதிப்பீட்டு தேர்வில், மாணவர்கள் பின்தங்கி உள்ளனர். அதன் பின்னும், இது போன்ற பயிற்சிகள் கைகொடுக்க வில்லை என்பதை, அவர்கள் உணரவில்லை' என்றனர்.
CPS NEWS: மத்திய அரசு பணியில் 18 ஆண்டுகள் தற்காலிக பணியிலும்
......
8ஆண்டுகள் நிரந்தர பணியிலும் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தில் மாத ஓய்வூதியமாக பெறுவது ரூ.770 மட்டுமே.
இந்த ஓய்வூதியம் 20, 30 ஆண்டுகள் ஆனாலும் உயராது.
இதற்காக cps தொகையில் 40%
(₹1,36,033) LIC PENSION FUNDல் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனாதைகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு
முதியோர் மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.1000/- வழங்கப்படுகிறது.
ஆக, புதிய ஓய்வூதிய திட்டம் என்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை அனாதைகளைவிட மோசமான நிலைக்கு இட்டு சென்றுள்ளது.
CPSல் உள்ளோரின்
தூக்கம் களைவது எப்போது?
திண்டுக்கல் எங்கெல்ஸ்