Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

அரசு பள்ளிகளில் காணப்படும் பிரச்னைகள் தொடர்பாக, தமிழக அரசிடம், 20 கேள்விகளை சரமாரியாக எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம், அதற்கு பதிலளிக்க வேண்டும் என்றும், உத்தரவிட்டுள்ளது.

 அரசு பள்ளி, செயல்பாடு,கோர்ட், கேள்வி
தற்போதைய கல்வி நிலையை கருத்தில் கொண்டு, அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்படுத்த, கீழ்கண்ட கேள்விகளுக்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
* அரசு எடுத்த கொள்கை முடிவின்படி, ஆங்கில வழி வகுப்புகள் துவங்க, எத்தனை பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது

* தமிழகம் முழுவதும், ஆங்கில வழி வகுப்புகளில், எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர். 2012 - 13 முதல், ஆண்டு வாரியாக விபரங்கள் அளிக்க வேண்டும்
* தமிழ் வழி கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் தான், ஆங்கில வழி கல்வியையும் கற்பிக்கின்றனரா?
* ஆங்கில வழி கல்வி கற்பிக்க, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா; அவ்வாறு எத்தனை பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்
* ஆங்கில வழி கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தகுதி என்ன?
* அரசு பள்ளிகளை விட, கிராமப்புறங்களில் தனியார் பள்ளிகளை, பெற்றோர் நாடுவது ஏன்?
* அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை, அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என, அரசு ஏன் கட்டாயப்படுத்தக் கூடாது?
* சரியான நேரத்தில் பணிக்கு வர தவறிய ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
* ஆசிரியர்களின் வருகை பதிவேட்டை சரிபார்க்க, பணி நேரத்தில் அவர்கள் பணியில் இருக்கின்றனரா என்பதை பரிசோதிக்க, பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளதா?
* அரசு பள்ளிகளில், குறிப்பாக கிராமப்புறம், மலை பகுதிகளில் உள்ள பள்ளிகளில், 'பயோமெட்ரிக்' முறையை ஏன் அறிமுகப்படுத்தக் கூடாது?
* பள்ளி நேரங்களில், மொபைல் போன் பயன்படுத்த, ஆசிரியர்களுக்கு ஏன் தடை விதிக்க கூடாது?
* ஆசிரியர்களின் வருகை, கற்பித்தலை சரிபார்க்க, பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த சாத்தியம் உள்ளதா?
* ஆசிரியர்களின் பணிமூப்பை, மாநில அல்லது மாவட்ட வாரியாக கொண்டு வருவதன் மூலம், அவர்களை சொந்த இடத்துக்கு வெளியில் பணியாற்ற ஏற்பாடு செய்வது உகந்ததாக இருக்காதா?
* மாறி வரும் நிலைக்கு ஏற்ப, ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி அளிக்கப்படுகிறதா?
* கடந்த, 10 ஆண்டுகளில், அரசு உயர்நிலை பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை; கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை என்ன?
* அரசு பள்ளிகளில், தனியார் பள்ளிகளில், 10 ஆண்டுகளில், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம் எவ்வளவு?
* கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் என்ன?
* போலீசாருக்கு இருப்பது போல், சங்கம் துவங்க, ஆசிரியர்களுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது; கல்வி பெறுவது அடிப்படை உரிமை என்பதால், எதிர்கால மாணவர்களை உருவாக்குவது ஆசிரியர்கள் என்பதால், தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்க, சங்கத்தை பயன்படுத்துவதால், அதை துவங்க, அரசு ஏன் தடை விதிக்க கூடாது?
* கிராமப்புறங்களில் கல்வி தரத்தை மேம்படுத்த, அரசு பள்ளிகளை நிர்வகிக்க, தன்னார்வ அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் தனியாரை ஏன் ஈடுபடுத்தக் கூடாது?
இந்த வழக்கு விசாரணை, ஜூலை, 14க்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment


web stats

web stats