*ஆசிரியர் தகுதி தேர்வு முடிக்காத ஆசிரியர்களை தகுதி நீக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும் என கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்,* தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது.
*அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு முடிக்காத ஆசிரியர்களுக்கு கருணை காட்டக் கூடாது.*
தகுதி தேர்வு முடிக்காத ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம். நோட்டீசுக்கு பதிலளிக்க இருவார காலம் அவகாசம் தந்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம்.
*தகுதி தேர்வு எழுதி 60 ஆயிரம் பேர் வேலைக்கு காத்திருக்கும் நிலையில், தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க எந்த காரணமும் இல்லை. 8 ஆண்டுகள் அவகாசம் வழங்கியும் தகுதி தேர்வு முடிக்காதவர்களுக்கு கருணை காட்ட வேண்டிய அவசியம் இல்லை”* என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Source: தினத்தந்தி
No comments:
Post a Comment