Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ

WHAT IS NEW? DOWNLOAD LINKS
சென்னை ராஜிய பிரதமர் டாக்டர் ப. சுப்புராயன் சுதந்திரப் போராட்ட தியாகி வ உ சிதம்பரனார் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் மதிப்புமிகு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகியவர்களின் முழு திருவுருவப்படத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையில் திறப்பதாக அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பாராட்டு மற்றும் நன்றி தெரிவித்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் செ முத்துசாமி அவர்கள் எழுதிய கடிதம்
Shaala Siddhi பதிவேற்றம் செய்யத் தயார் செய்ய வேண்டிய தகவல்கள்.
1. Students Profiles
இந்த பகுதில் நாம் 2020-2021 நடப்பு கல்வியாண்டின் மாணவர்கள் விவரத்தை பதிய வேண்டும். இனவாரியாக SC, ST, OBC, General, Minority, Total.
இதில் Minority பகுதியில் BCM, BCC மாணவர்களை பதிய வேண்டும் . இவர்களை தவிர்த்து மற்றவர்களை OBC ல் பதிய வேண்டும் .
2. Classwise Annual attendance rate
இந்த பகுதியில் 2019-2020 கல்வி ஆண்டின் மாணவர்களின் ஆண்டு சராசரி வருகை சதவீதத்தை பதிவிட வேண்டும் . வகுப்புவாரியாக ஆண் பெண் தனிதனியாக கணக்கிட வேண்டும் . இதனை கணக்கிடும் முறையை பற்றி பார்ப்போம் . உதாரணமாக ஒன்றாம் வகுப்பில் 5 ஆண் மாணவர்கள் எனில் அவர்களின் மொத்த வருகை நாட்கள் 206, 210, 207, 200, 198 எனில், மொத்த கூடுதல் 1021/1050*100=வருகை சதவீதம் .
இது போன்று அனைத்து வகுப்புகளும் ஆண் பெண் என்று தனி தனியாக கணக்கிட்டு தயார் செய்ய வேண்டும் .
3. Learning outcomes Annual report பகுதி.
இங்கு 2019-2020 கல்வி ஆண்டின் விவரத்தை பதிவு செய்ய வேண்டும்.மாணவர்களின் ஆண்டின் ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதத்தை கணக்கிட்டு பதிவு செய்ய வேண்டும் . உதாரணமாக ஒன்றாம் மாணவன் முதல் பருவம் 350/400 இரண்டாம் பருவம் 370/400 மூன்றாம் பருவம் 360/400 எனில் 1080/1200*100= என்ற படி கணக்கிட்டு கொள்ள வேண்டும் . இவ்வாறு வகுப்புவாரியாக தயார் செய்து கொண்டு கீழ்கண்ட இடைவெளியில் <33, 33-40, 41-50, 51-60,61-70, 71-80, 81-90, 91-100 குறித்து கொண்டு பதிவேற்றம் செய்ய வேண்டும்.
4. Teachers Profiles
இதில் 2020-2021 நடப்பு கல்வியாண்டின் பணிபுரியும் ஆசிரியர் விவரம் ஆண் பெண் வாரியாக பதிவிட வேண்டும். இந்த பகுதியில் trained , untrained என பிரிக்கப்பட்டுள்ளது . நமது பள்ளியில் அனைவரும் trained teacher . நடுநிலை பள்ளியில் part-time teachers இருந்தால் அவர்களை untrained பகுதியில் காட்டக்கூடாது . Only subject teachers மட்டும். Untrained teacher's எனபது High , Higher secondary level PTA staff -ஐ குறிக்கும்.
5. Teachers Attendance
இந்த பகுதியில் 2019-2020 கல்வியாண்டில் ஆசிரியர்கள் விடுப்பு விவரம் பதிய வேண்டும் . விடுப்பை கணக்கிடும் போது ஒரு மாதத்திற்கு மேல் விடுப்பு எடுத்தவர்கள் , ஒரு வாரத்திற்க்குள்ளாக விடுப்பு எடுத்தவர்கள் என தனி தனியாக கணக்கிட்டு குறித்து கொண்டு பதிவேற்றம் செய்ய வேண்டும். CL தவிர பிற விடுப்புகள்.
School Safety & Security தொடர்பான பயிற்ச்சியினை அனைத்து ஆசிரியர்களும் தற்போது TN DIKSHA - ன் மூலமாகவும்மேற்க்கொள்ளலாம்
School Safety & Security தொடர்பான பயிற்சியினை அனைத்து ஆசிரியர்களும் தற்போது TN DIKSHA - ன் மூலமாகவும் கீழே உள்ள link - ன் உதவியுடன் கணினி மற்றும் கைப்பேசியின் மூலமாக இந்த பயிற்சியினை மேற்க்கொள்ளலாம்.
https://diksha.gov.in/explore-course/course/do_31317353196282675213194
இந்த பயிற்ச்சியை DIKSHA -ன் மூலமாக எவ்வாறு மேற்க்கொள்வது என்பதை கீழே உள்ள link -ஐ click செய்து தெரிந்து கொள்ளலாம்.
PENSION மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு புதிய வசதி!
கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்
கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்
தமிழகத்தில் அடுத்தகட்ட தளர்வுகள் தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியானது. அதில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மாநில அரசு மற்றும் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக தமிழக அரசு சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. அதன்படி,
* பள்ளிகளில் நுழையும் போது ஒவ்வொருவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும்.
* வகுப்பறைகளில் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். குறைந்தபட்சம் 6 அடி இடைவெளி கடைபிடிக்க வேண்டும். இதற்காக வெவ்வேறு கால அட்டவணைகள் பின்பற்றப்பட வேண்டும்.
* வரிசையில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அப்பகுதிகளில் தரையில் வட்டங்கள் வரைந்திருக்க வேண்டும். அதில் மாணவர்கள் இடைவெளி விட்டு நிற்க வேண்டும்.
* காலை வழிபாட்டுக் கூட்டம், மாணவர்கள் கூடுதல், விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை தவிர்க்கப்பட வேண்டும். நீச்சல் குளங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
* பள்ளி ஆய்வகம், வகுப்பறை, பொதுப் பயன்பாட்டு இடங்களை 1 சதவீதம் சோடியம் ஹைப்போ குளோரைட் கரைசல் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
* மாணவர்கள் கைகழுவுவதற்கு சோப்பு, சானிடைசர்கள் உள்ளிட்டவை வைத்திருக்க வேண்டும். உரிய தண்ணீர் வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
* பள்ளிகளில் பயோமெட்ரிக் பதிவேட்டிற்கு பதில் தொடுதல் இல்லாத வகையில் வருகைப் பதிவேடு வைத்திருக்க வேண்டும்.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் டைரி தயாரிப்புக் குழு மற்றும் இயக்க செயல்பாடுகள் குறித்தான கூட்டம்

அரசுப்பள்ளி கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் நலன் கருதி எளிதாக பாடம் கற்க இலவச செயலி..
சிறுபான்மை இன மாணவர் கல்வி உதவித்தொகை குறித்த ஒரு முக்கிய தகவல்....
தங்களது பள்ளிகளில் சென்ற ஆண்டு கல்வி உதவித்தொகை விண்ணப்பித்து உதவித்தொகை பெற்று இருக்கும் மாணவர்கள்.....🌹🌹
இந்த ஆண்டு வேறு பள்ளிக்கு சென்று இருப்பார்கள்....🍊🍊
உயர்கல்வி பயில..அந்த மாணவர்களை அவர்களுடைய login id password பயன்படுத்தி அவர்களுடைய விண்ணப்பத்தை withdraw option தேர்வு செய்து அவர்களின் பழைய எண்ணை தங்கள் பள்ளியில் இருந்து நீக்கிவிட வேண்டும்...🍑🍑
withdraw செய்யும்போது reason கேட்கும் அதில் ...... apply for fresh entry due to existing school course completed . என பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும்....🎄🎄
இவ்வாறு செய்தால் மட்டுமே உங்களது பள்ளியில் புதுப்பித்தல் மாணவர்கள் விபரம் சரியாக இருக்கும்.....🌿🌿
எனவே பள்ளிகளை கல்வி நிலை முடித்து வேறு உயர் கல்விக்கு சென்ற மாணவர்களின் விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி உடன் withdraw செய்யவும்....🌺🌺
நன்றி தகவலுக்காக...🌻🌻
மேலும் ஒரு மாணவருக்கு கல்வி உதவித்தொகைக்காக சிறுபான்மை இணையதளத்தில் பெற புதியதாக விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்....🍎🍎
1).ஆதார் எண்,
2) தேசிய வங்கி ஒன்றில் சம்பந்தப்பட்ட மாணவரின் பெற்றோருடன் இணைத்து துவக்கப்பட்டுள்ள ஒரு வங்கி கணக்கு எண்,
3) IFsc code(வங்கி புத்தகத்தில் இருக்கும்
4) பெற்றோரின் மொபைல் எண்....
(முதல்முறை விண்ணப்பிக்கும்போது otp password வரும் அதற்காக....💐💐
முடிந்த வரை புதியதாய் விண்ணப்பிக்கும்போது அந்த mobile no அருகில் வைத்துக்கொண்டு விண்ணப்பித்தல் நலம்)
5). மாணவரின் சென்ற ஆண்டு பெற்ற மதிப்பெண் சதவீதம் (குறைந்தது 75 சதவீதத்திற்கு மேல் பதிவு செய்யுங்கள்.)
6) மாணவரின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும்.....👏👏
இவ்வளவு தான் தேவை....🍊🍊
இந்த விபரங்கள் இருந்தால் அந்த மாணவருக்கு புதியதாக பதிவு செய்யலாம்...🍒🍒
குறிப்பாக மாணவரின் ஆதார் எண் அல்லது.வங்கி கணக்கு எண் வைத்து எளிதாக ஆரம்பித்து விடலாம்.
அரசாணை எண்: 37, நாள்: 10-3-2020-க்கு தெளிவுரையாக வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்: 116, நாள்: 15-10-2020ல் அளிக்கப்பட்டுள்ள முக்கியமான விளக்கங்கள்...
அரசாணை 37-ஆனது வெளியிடப்பட்ட நாளான 10-03-2020 முதல் நடைமுறைக்கு வருகிறது.
💥 10-03-2020 க்கு பின்னர் பணியில் சேரும் அரசு ஊழியருக்கு ஊக்க ஊதிய உயர்வு அல்லது முன் ஊதிய உயர்வு கிடையாது.
💥 10-03-2020க்கு முன் உயர்கல்வி அல்லது துறைத் தேர்வுகள் தேர்ச்சி பெற்று, நிர்வாக காரணங்களுக்காக அல்லது தனிநபரின் தாமதமான கோரிக்கை காரணமாக ஆணை வழங்கப்படாத நிலையில், அவர்களுக்கு அரசாணை 37ல் பத்தி 6 உட்பிரிவு vi இல் கூறப்பட்டுள்ள நடைமுறையின்படி 31.03.2021க்கு முன் ஆணை வழங்கப்பட வேண்டும்.
💥 அரசாணை 37 ஆனது ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு துறையில் பணிபுரியும் அரசு பணியாளர்களுக்கும் பொருந்தும்.
💥 முன் ஊதிய உயர்வும், ஊக்க ஊதிய உயர்வும் ஒன்றுதான்.
💥 ஊக்க ஊதிய உயர்வு/ முன் ஊதிய உயர்வு தொடர்பாக 10-03-2020க்கு முன் பிற துறைகளில் வெளியிடப்பட்ட அரசாணைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது ஊதியப் பட்டியல் ஒப்பளிக்கும் அலுவலர் உயர்கல்வி தகுதியும், அதற்கான ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கும் ஆணையும் குறிப்பிட்ட தேதிக்கு (10-03-2020) முன்னர் பெறப்பட்டுள்ளதா என்பதையும், அரசாணை 37ல் பத்தி 6 உட்பிரிவு vi இல் கூறப்பட்டுள்ள நடைமுறையின்படி சரியானதுதானா என்பதையும் உறுதி செய்து கொண்டு ஊதியப்பட்டியல் அனுமதிக்கலாம்...
💥இந்த அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என்பதை மட்டும் மேலோட்டமாக பார்த்து விட்டு கடந்து செல்லாமல், 10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி பெற்றவர்கள், தற்போதைய அரசாணையில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளின்படி, ஊக்க ஊதியம் பெற முயற்சிக்க வேண்டும். அநற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள தேதி 31.03.2021.
தெளிவுரை வரிசை எண்: 7 மற்றும் 9 ஐ கவனிக்கவும்.
G.O 116-DATE- 15.10.2020-உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ரத்து -ஆசிரியர்கள் , மருத்துவர்கள் ,பொறியாளர்கள் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்- பணியாளர்கள் மற்றும் சீர்திருத்த துறை விளக்கம்
தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றிய ஆசிரியர்கள் அனைவரும் இனி வரும் காலங்களில் பள்ளி கல்வித்துறை பணியாளர்கள் என (Tamilnadu school education subordinate services) மாற்றம் செய்து அரசாணை பிறப்பிப்பு .
இதுவரை தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றிவந்த.(Tamilnadu elementary education subordinate service) வட்டார கல்வி அலுவலர்கள் ,நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், தொடக்கக்கல்வி துறையில் பணியாற்றிய உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் கைத்தொழில் ஆசிரியர்கள் அனைவரும்
இனி வரும் காலங்களில் பள்ளி கல்வித்துறை பணியாளர்கள் என (Tamilnadu school education subordinate services) மாற்றம் செய்து அரசாணை பிறப்பிப்புஅந்தந்த பதவிகளுக்கு உண்டான கல்வித்தகுதி மற்றும் தேர்ந்தெடுக்கும் முறை குறித்தான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு மேலும் ஆசிரியர் பணிக்கு நேரடி நியமனத்திற்கு 40 வயதினை வயது வரம்பாக நிர்ணயித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .தொடக்க கல்வித்துறையின் கீழ் எந்த ஒரு பதவியும் வரவில்லை
மாணவர் சேர்க்கை நாளை மாலையுடன் நிறைவு -நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2020-21-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்கியது. செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகபட்சமாக 1-ம் வகுப்பில் 3 லட்சத்து 8 ஆயிரம் மாணவர்களும், 6-ம் வகுப்பில் 3 லட்சத்து 66 ஆயிரம் மாணவர்களும், 9-ம் வகுப்பில் 1 லட்சத்து 4 ஆயிரம் மாணவர்களும், 11-ம் வகுப்பில் 4 லட்சத்து 14 ஆயிரம் மாணவர்களும் புதிதாக சேர்ந்துள்ளனர்.
ஒரு ஆசிரியர் அரசு பணியில் சேருவதற்கு முன்பு உயர்கல்வி பயின்று தோல்வியுற்ற நிலையில், அரசுப் பணியில் சேர்ந்த பிறகு அதனை எழுதி தேர்ச்சி பெற தடையின்மை சான்று வாங்க வேண்டியது இல்லை. தேர்வுகள் எழுத சிறு விடுப்பிற்கு விண்ணப்பித்துவிட்டு எழுதலாம். - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்ககம் துணை இயக்குனர் (மின் ஆளுமை) அவர்களின் தகவல் அறியும் உரிமைச்சட்ட கடிதத்திற்கான பதில்...
பென்ஷன் எவ்வளவு வருகிறது என இருந்த இடத்தில் இருந்து பார்த்துக் கொள்ளும் புதிய வசதி!
click here to visit the web...................
TRB நேரடி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணிவரன்முறை செய்யப்படுமா ? RTI Letter!
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 - பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் (மின்ஆளுமை) அவர்களின் செயல்முறைகள் - ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணிவரன்முறை செய்யப்படுவதில்லை. பணியில் சேர்ந்த நாளையே பணிவரன்முறை செய்யப்பட்ட நாளாக கருதப்படும்...