Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ

WHAT IS NEW? DOWNLOAD LINKS
-பள்ளிக் கல்வி - அனைத்து மாவட்டங்கள் - அனைத்து வகைப்பள்ளிகள் LKG, UKG வகுப்பு (Pre-KG உட்பட) மாணாக்கர்கள்மற்றும் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களில் உள்ளஅனைத்து வகைப் பள்ளிகளில் LKG (Pre-KG உட்பட) முதல் 5 வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்கள் - கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல் - 16.03.2020 முதல் 31.03.2020 வரை விடுமுறை அளித்தல் சார்ந்து.*
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் ஐயா செ முத்துசாமி EX.MLC அவர்களின் பயணத்திட்டம் மற்றும் மாவட்ட வாரியான சிறப்பு மாவட்ட பொதுக்குழு கூட்டங்கள் நடத்தப்படும் நாட்கள் விவரம் கீழே அறிவிக்கப்பட்டுள்ளது
1) 14 .03.20 மாலை-நாமக்கல். 2)15.03.20-காலை சேலம்மாவட்டம்-தாரமங்கலம்.
3) 15.03.20-மாலை 3.30. அரூர் (தர்மபுரி மாவட்டம்).
4) 16.03.20-ஊத்தங்கரை சந்திரசேகர் சந்திப்பு.
5) 17,18&19 03.20 சென்னை பணிகள்.
6 )20&21.03.20 நாமக்கல்.
7) 22.03.20 காலை 10-மணி. பெருந்துறை-ஈரோடு மாவட்டம்.
8) பிற்பகல்-அவிநாசி-(திருப்பூர்&கோவை மாவட்டங்கள் இணைந்து).
9) 25.03.20-காலை 10-மணி. முசிறி (திருச்சிமாவட்டம்).
10) 27.03.20 மாலை-பெரியகுளம்(தேனிமாட்டம்).
11). 28.003.20 மாலை 5 மணி தக்கலை(குமரி மாவட்டம்).
12) 29 03.20 ஞாயிறு காலை 10-மணி. இளையான்குடி (சிவகங்கை மாவட்டம்). 13)29.03.20-மாலை4.00மணி. மதுரை.
மேலேகண்டகூட்டங்களில் மாநிலத்தலைவர் செ. மு. மற்றும் மாநிலப்பொறுப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மாநில தலைவர் தெரிவித்துள்ள கூடுதல் தகவல்கள்..
1. கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் நேரத்தினை மாவட்ட செயலாளர்கள் மூலம் உறுதி செய்தி கொண்டு திரளான ஆசிரியர்களை பங்கேற்க செய்ய அனைத்து பொறுப்பாளர்களும் முயற்சி செய்து கலந்து கொள்ளவும்.
2. 2019 உறுப்பினர் சந்தாக்களை முடித்து மாநில பங்கிட்டு தொகையினை செலுத்த கேட்டு கொள்ளப்படுகிறது, உடன் ஒவ்வொரு பொறுப்பாளரும் குறைந்தது ஐந்து பேரணி சந்தாக்களை கொண்டு வருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்
3. மேலும் இக்கூட்டங்களில் ஆசிரியர்கள் தங்கள் குறைகளை மாநில பொறுப்பாளர்களிடம் நேரடியாக கூறி அதற்கு உண்டான தீர்வுக்கான ஆலோசனை கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி..மாநில அமைப்பு.
3) 15.03.20-மாலை 3.30. அரூர் (தர்மபுரி மாவட்டம்).
4) 16.03.20-ஊத்தங்கரை சந்திரசேகர் சந்திப்பு.
5) 17,18&19 03.20 சென்னை பணிகள்.
6 )20&21.03.20 நாமக்கல்.
7) 22.03.20 காலை 10-மணி. பெருந்துறை-ஈரோடு மாவட்டம்.
8) பிற்பகல்-அவிநாசி-(திருப்பூர்&கோவை மாவட்டங்கள் இணைந்து).
9) 25.03.20-காலை 10-மணி. முசிறி (திருச்சிமாவட்டம்).
10) 27.03.20 மாலை-பெரியகுளம்(தேனிமாட்டம்).
11). 28.003.20 மாலை 5 மணி தக்கலை(குமரி மாவட்டம்).
12) 29 03.20 ஞாயிறு காலை 10-மணி. இளையான்குடி (சிவகங்கை மாவட்டம்). 13)29.03.20-மாலை4.00மணி. மதுரை.
மேலேகண்டகூட்டங்களில் மாநிலத்தலைவர் செ. மு. மற்றும் மாநிலப்பொறுப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மாநில தலைவர் தெரிவித்துள்ள கூடுதல் தகவல்கள்..
1. கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் நேரத்தினை மாவட்ட செயலாளர்கள் மூலம் உறுதி செய்தி கொண்டு திரளான ஆசிரியர்களை பங்கேற்க செய்ய அனைத்து பொறுப்பாளர்களும் முயற்சி செய்து கலந்து கொள்ளவும்.
2. 2019 உறுப்பினர் சந்தாக்களை முடித்து மாநில பங்கிட்டு தொகையினை செலுத்த கேட்டு கொள்ளப்படுகிறது, உடன் ஒவ்வொரு பொறுப்பாளரும் குறைந்தது ஐந்து பேரணி சந்தாக்களை கொண்டு வருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்
3. மேலும் இக்கூட்டங்களில் ஆசிரியர்கள் தங்கள் குறைகளை மாநில பொறுப்பாளர்களிடம் நேரடியாக கூறி அதற்கு உண்டான தீர்வுக்கான ஆலோசனை கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி..மாநில அமைப்பு.
10. 3. 2020 இக்கு பின்னர் அனைத்து துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் ரத்து செய்யப்படுகிறது.
10. 3. 2020 இக்கு பின்னர் அனைத்து துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு (ஆசிரியர்களுக்கு அல்ல) வழங்கப்பட்டு வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் ரத்து செய்யப்படுகிறது. எனினும் அரசாணை வெளியிடப்பட்ட தேதிக்கு முன்னர் உயர்கல்வி பெற்றுள்ள, ஆனால் ஊக்க ஊதியம் வழங்கப்படாத நபர்களுக்கு சம்பந்தப்பட்ட துறை தனியே ஆய்வுசெய்து நிதித்துறையின் இசை வினை பெற்றபிறகு ஊக்க ஊதியத்தை அனுமதிக்கலாம்.
CLICK HERE TO DOWN LOAD
திரு பொன்னையன் அவர்கள் மாநில திட்டக்குழு துணைத் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் வரவேற்பும், வாழ்த்துக்களும்.
முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அமைச்சரவையில் கல்வி அமைச்சராகவும், அதன்பின்னர் அதிமுக அரசின் நீண்டகால நிதி அமைச்சராகவும் பணியாற்றி சிறந்த அனுபவமும் ஆற்றலும் தன்னகத்தே பெற்றுள்ள திருமிகு.சி. பொன்னையன் அவர்கள் தமிழ்நாடு அரசின் மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவராக நேற்றையதினம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாநிலத் தலைவர் திரு முத்துசாமி அவர்கள் இன்று செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் திரு . பொன்னையன் அவர்கள் தலைவரிடம் தனது மகிழ்ச்சியையும், தெரிவித்துக் கொண்டு தங்களுடைய ஆலோசனைகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
வருகின்ற 17 18 19 ஆகிய தேதிகளில் சென்னையில் ஏதாவது ஒரு நாளில் நேரடியாக திட்டக்குழு துணைத் தலைவரை மாநிலத் தலைவர் முத்துசாமி ஐயா அவர்கள் தலைமையில் மாநில பொறுப்பாளர்கள் சென்று வாழ்த்துக்களையும் கோரிக்கைகளையும் நேரில் அளிக்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் ஐயா முத்துசாமிஅவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துக் கொண்டுள்ளார்
அரசு பள்ளிகளில் காலி வகுப்பறைகள் உணவுக்கூடமாக மாற்றம்.
பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்ற றிக்கை:
தமிழக அரசின் சத்துணவு திட்டத் தில் பயன்பெறும் மாணவ, மாணவியர் சுகாதார முறையில் மதிய உணவு உட்கொள்ளும் வகையில், அனைத்து பள்ளிகளிலும் காலியாக அல்லது பயன் படுத்தப்படாமல் உள்ள வகுப்பறைகளை சீர் செய்து உணவு அருந்தும் கூடங்களாக மாற்றி அமைப்பது தொடர்பாக கடந்த மார்ச் 4-ம் தேதி சமூகநலத் துறை ஆணையர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.அதன்படி பயன்படாத வகுப்பறை களை சீர் செய்து மாணவர்களின் உணவருந்தும் கூடங்களாக மாற்றித் தர ஏதுவாக, அப்பள்ளிகளின் பெயர்ப் பட்டியல் மற்றும் அதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி களும் விரிவான அறிக்கையாக தயாரித்து, துறை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் அதிகாரப்பூர்வ கட்செவி (வாட்ஸ்அப் குரூப்பில்) www.tntf.in குழுவில்
இனி அரசியல் சார்பான கருத்துக்களையோ, ஜாதி மதம் இனம் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துக்களையோ, சங்கத்தின் கொள்கைக்கு மாறான விதிகளுக்கு முரணான கருத்துக்களையோ இயக்கத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு முடிவு களுக்கு எதிரான கருத்துக்களையோ தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்களுக்குள் கருத்துவேறுபாடுகள் வரும் வகையான கருத்துக்களையோ, புகைப்படங்களையோ, மீம்ஸ்களையோ பதிவிடக்கூடாது
என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை மீறினால் இக்குழுவில் இருந்து உடனடியாக நீக்கப்படுவது டன் இயக்க விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என கண்டிப்புடன் தெரிவிக்கப்படுகிறது..
இப்படிக்கு
மாநில தலைவர்
செ.முத்துசாமி EXMLC
Subscribe to:
Posts (Atom)