Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ
WHAT IS NEW? DOWNLOAD LINKS
மாவட்ட கல்வி அலுவலர்கள் மாறுதல் விவரம்
பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலர் அருப்புக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலராக மாறுதல்.
குழித்துறை( கன்னியாகுமரி மாவட்ட) கல்வி அலுவலர் கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலராக மாறுதல்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் மதுரை மாவட்டம் மேலூர் மாவட்டக் கல்வி அலுவலராக மாறுதல்.
விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலர் திரு பாண்டி துரை அவர்கள் பழனி மாவட்டக் கல்வி அலுவலராக மாறுதல்
திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலராக திரு. நரேந்திரன் நியமனம்
தமிழ் நாடு பள்ளிக்கல்வி பணி - அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அதனையொத்த நிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு /பணி மாறுதல் அளித்தல் சார்ந்து- பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்
உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு தொடர்பாக பெறப்பட்ட -RTI LETTER!
கோரப்படும் தகவல்கள் :
1. M.SC. , மற்றும் M.PHIL . , கல்வித்தகுதியின் மூலம் பள்ளிக்கல்வி துறையின் கீழ் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியும் ஒருவர் M.SC. , பட்டப்படிப்பிற்க்கு ஒரு உயர் கல்வி ஊக்க ஊதியம் பெற்றுள்ள நிலையில் M.PHIL . , பட்டப்படிப்பை பயின்றமைக்கு இரண்டாம் உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் பெறுவதற்க்கு தகுதியுண்டா என்பதனையும் அதன் அரசாணை எண் மற்றும் அரசாணை நகலினை அனுப்பும் படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
2. பார்வை 1. ல் கண்ட அரசாணையின் படி பள்ளிக்கல்வி துறையின் கீழ் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட M.PHIL . , பட்டப்படிப்பை பயின்றமைக்கு இரண்டாம் உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் பெற தடையாணை ஏதேனும் பெறப்பட்டுள்ளதா அதற்க்கான ஆணையின் நகலினை அனுப்பும் படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
3. பள்ளிக்கல்வி துறையின் கீழ் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியும் ஆசிரியர் பார்வை 1 ல் கண்ட அரசாணை வெளியிடுவதற்க்கு முன்பாக உயர் கல்வி முடித்த ஒருவர் தற்போது M.PHIL . , பட்டப்படிப்பை பயின்றமைக்கு இரண்டாம் உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் பெறுவதற்க்கு தகுதியுண்டா என்பதனை தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நான் கேட்கும் தகவல்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் விதிவிலக்கு பிரிவு 6 ( 1 ) ன் கீழ் கோரவில்லை தமிழ் நாடு அரசின் அரசுப்பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் அரசாணை எண்.114 , நள் 02.03.2006 ன் கீழ் மேற்கண்ட தகவல்களை பொதுத் தகவல் அலுவலர் அவர்களே நேரடியாக எனக்கு அளிக்கும்படி மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இந்திய தூதரகப் பள்ளியில் பணியாற்ற 2 தமிழக ஆசிரியைகள் தேர்வாகிச் சாதனை:
இந்திய தூதரகப் பள்ளியில் பணியாற்ற தமிழக ஆசிரியைகள் இருவர் தேர்வு செய்யப்பட்டு, ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கோவையை அடுத்த சூலூர் விமானப்படை வளாகத்தில், மத்தியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 'கேந்திரிய வித்யாலயா' பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கீதா சீனிவாசன் என்பவர் தொடக்கக் கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ரஷ்ய நாட்டின் மாஸ்கோ நகரில் செயல்படும் இந்திய தூதரகப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்ற மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டு, கடந்த ஆக. 22-ம் தேதி விமானம் மூலமாகப் புறப்பட்டுச் சென்ற அவர், இன்று அப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியில் சேர்ந்தார்.
ரஷ்யாவில் உள்ள ஆசிரியை கீதா சீனிவாசனை, வாட்ஸ்அப் அழைப்பு வழியாகத் தொடர்பு கொண்ட போது அவர் கூறியதாவது:
''வெளிநாடுகளில் இந்திய அரசுடைய தூதரகவாசிகளின் குழந்தைகள் படித்துப் பயன்பெறுவதற்காகப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டு, அவற்றில் மத்திய அரசின் பாடத்திட்டங்கள் மாணவர்களுக்குப் போதிக்கப்பட்டு வருகின்றன. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, வெளிநாட்டுப் பள்ளிகளில் பணியாற்ற அனுப்பப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் இருந்து 12 ஆசிரியர்கள் மற்றும் 1 முதல்வர் என 13 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளோம்.
முன்னதாக வெளிநாட்டுப் பள்ளிகளில் பணியாற்ற விருப்பமுள்ள ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் மத்திய அரசு எங்களைத் தேர்வு செய்தது.
கோவை சூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இருந்து நானும், சென்னை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இருந்து தந்தரா ரெட்டி ஆகிய இருவர் மட்டுமே தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளோம். நான் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியை தந்தரா ரெட்டி 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கும் பாடம் நடத்த உள்ளோம். இவ்வாறு வெளிநாட்டுப் பள்ளிகளுக்கு தேர்வு செய்து அனுப்பப்படுவது மிகப்பெரிய கவுரவம்.
நான் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படித்து இங்கே ஆசிரியையாகப் பணியாற்றி வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது வெளிநாட்டிலும் பணியாற்றத் தொடங்கியுள்ளது பெருமையாக உள்ளது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கோவை திரும்புவேன்''.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆசிரியை கீதா சீனிவாசனுக்கு சூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் வி.மேகநாதன் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஆன்லைன் வகுப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத பள்ளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
ஆன்லைன் வகுப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத பள்ளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளது.