Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இவ்வாண்டு துறை மாறுதல் வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்-பள்ளிக்கல்வி இயக்குனர்

                                                   12.05.2014 அன்று மதியம் 1.30 மணியளவில்தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலபொறுப்பாளர்கள் பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி Ex.M.L.C தலைமையில் பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களை சந்தித்து தொடக்கக்கல்வி துறையில் உள்ள நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2008 ஆம் ஆண்டு வழங்கப்பட்டதைப்போன்று துறை மாறுதல் மூலம் விருப்பமுள்ளவர்கள் உயர்நிலை/ மேல் நிலைப்பள்ளிகளுக்கு மாறுதல் வாய்ப்பு வழங்க வேண்டி மனு அளிக்கப்பட்டது.

               அம்மனுவில் இவ்வாய்ப்பினால் விருப்பமுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு மாறுதல் பெற்றுசெல்லவர் என்றும் அதனால் ஏற்படும் காலிப்பணியிடங்களில் பிஎட் படித்த இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவிஉயர்வு கிடைக்க வாய்ப்புள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டது

                       மேலும் பணி நிரவலால் ஆசிரியர் இடமாறுதல் தவிர்க்கலாம் எனவும் கருத்து கூறப்பட்டது.
அதற்கு பள்ளிக்கல்வி இயக்குனர் திரு.இராமேச்வர முருகன் இக்கல்வி யாண்டில் துறை மாறுதல் வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
        சந்திப்பின் போது மாநிலத்தலைவர்  கு.சி.மணி,     மற்றும் மாநில துணைத்தலைவர்கள் கே.பி.ரக்‌ஷித் ,முருகேசன்,மாநில துணைப் பொதுச்செயலர் விஜயகுமார் மற்றும் தலைமை நிலையச்செயலர் க.சாந்தகுமார்,பொதுச்செயலரின் நேர்முக உதவியாளர் வடிவேலு ஆகியோர் பங்கேற்றனர்

No comments:

Post a Comment


web stats

web stats