rp

Blogging Tips 2017

NHIS-சில விளக்கங்கள்


ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள்

* தகுதிகாண் பருவத்தில்
உள்ளவர்கள் EL எடுத்தால்
probation period
தள்ளிப்போகும்.


* பணியில் சேர்ந்து ஒரு வருடம்
முடிந்ததும் ஈட்டிய
விடுப்பினை ஒப்படைத்து பணமாகப்
பெறலாம். ஆண், பெண்
இருவரும்.

* தகுதிகாண் பருவம் முடிக்கும்
முன்பு (பணியில் சேர்ந்து 2
வருடங்களுக்குள்)
மகப்பேறு விடுப்பு எடுத்தால்
அந்த வருடத்திற்கான EL -ஐ
ஒப்படைக்க முடியாது. EL
நாட்கள் மகப்பேறு விடுப்புடன்
சேர்த்துக்கொள்ளப்படும்

100% தேர்ச்சி பெற்றும் முன்னேற்றம் இல்லை - புலம்பும் பெற்றோர்

பத்தாம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற, வஞ்சிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், கூடுதல் கட்டடம் கட்டுமான பணி, நிதியின்றி பாதியில் நிற்கிறது. அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வஞ்சிபாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.

பள்ளிகளில் புதிய சுற்றுச்சூழல் மன்றங்களை உருவாக்க திட்டம்

மரக்கன்று நடுதல், வளாகங்களை துாய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பசுமை பணிகளுக்காக, பள்ளிகளில் புதிய சுற்றுச்சூழல் மன்றங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. பசுமை பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தவும், சமூக சேவையில் பங்கெடுக்கும் விதமாகவும், மாவட்ட சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில், பள்ளிகளில், பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில், துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில், சுற்றுச்சூழல் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் உறுப்பினர்களாக உள்ள மாணவர்கள், வாரத்தில் ஒருநாள், மாலை நேரத்தில் குழு நடத்தி, பசுமைப் பணிகளில் ஈடுபடுவது வழக்கம்.

இந்த மன்றத்தின் வாயிலாக, பள்ளிகளில் மரக்கன்று நடுதல், கழிவுநீரை மரங்களுக்கு பாய்ச்சும் நடைமுறை, மூலிகை தோட்டம் அமைத்தல், காய்கறி தோட்டம் உருவாக்குதல், குடிநீர் தொட்டி பராமரிப்பு, விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட, பல்வேறு பணிகள் நடக்கின்றன.

மாதந்தோறும் வளாக பராமரிப்பு பணிகளில் ஈடுபடுத்துவதால், தன் சுத்தம், கழிவறை துாய்மை உள்ளிட்ட பல்வேறு மதிப்பீடுகள் கற்றுத்தரப்படுகிறது.

TNOU:தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை :2015 -B.Ed., தொலைதூர கல்வி சேர்க்கை அறிவிப்பு.


B.Ed Application OMR & Prospectus CY click here...

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஜனவரி முதல் ஆரம்பமாக உள்ள தொலைதூர கல்வி பி.எட். படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விண்ணப்பிப்பவர் தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் முழு நேரபணியிலுள்ள இரண்டு வருட ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.எட் படிப்பில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதல் தகவல்களுக்கு www.tnou.ac.in என்ற 2015.இணையதளத்தை அணுகலாம்.

10, 12-ம் வகுப்பில் சாதனை படைத்த மாணவ- மாணவிகளுக்கு ஜெயலலிதா பரிசு வழங்கினார்

தமிழகத்தில் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் கல்வியில் சிறந்து விளங்கிடவும், சமுதாயத்தில் உயர்ந்த நிலையை எய்திடவும், கல்வி கற்பதற்கு வறுமை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற உயரிய நோக்கிலும் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு கட்டணமில்லா கல்வி, பேருந்து பயண அட்டைகள், மிதி வண்டிகள், சீருடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், மடிக்கணினி, கல்வி உபகரணப் பொருட்கள், காலணிகள், இடைநிற்றலைக் குறைக்க ஊக்கத் தொகை போன்ற பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

பள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உபரி பட்டதாரி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர்களை பணிநிரவல் மூலம் மாவட்டத்திற்குள் தேவையுள்ள / காலியாக பணியிடத்திற்கு மாற்றம் செய்து ஆணை வெளியிடப்பட்டது சார்பான தெளிவுரை

DSE - SURPLUS SGT / BT REG INSTRUCTIONS CLICK HERE...

பள்ளிக்கல்வி - பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களின் பாதுகாப்பு - பள்ளி வளாகம், சாலை பாதுகாப்பு, மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை - பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மர்றும் அறிவுரைகள் வழங்கி உத்தரவு

DSE - SAFETY & PRE-CAUTIOUS MEASUREMENT REG INSTRUCTIONS CLICK HERE...

10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள 1268 தொடக்கப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு?

பத்து மாணவர்களுக்கும் குறைவாக உள்ள 1268 அரசு தொடக்கப்பள்ளிகளை மூட அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் 23 ஆயிரத்து 815 அரசு தொடக்கப்பள்ளிகள் உள்ளன. தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் இப்பள்ளிகளில் 14 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். தொடக்கப்பள்ளிகளில் மட்டும் சுமார் 60 ஆயிரத்து 980 ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி ஒரு பள்ளிக்கு இரண்டு ஆசிரியர் இருக்கவேண்டும். ஆனால் அரசு தொடக்கப்பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஓராசிரியர் என்ற கணக்கீடு பின்பற்றப்படுகிறது. 200 மாணவர்களுக்கு மேல் இருந்தால் 40 மாணவர்களுக்கு ஓராசிரியர் நியமனம் செய்யப்படுகின்றனர்.

Learn English with Let's Talk - Free English Lessons

Learn English - Free English Lessons

அறிவியல் பாடங்களுக்கான பயிற்சி ஏடுகள் அச்சீடு செய்து வழங்குதல் - DIR PROCEEDINGS

CLICK HERE - HIGHER SEC PRACTICAL BOOKS PRINTING/ISSUING - DIR PROC

ஜூலை 2: நிலவு நாயகன் மயில்சாமி அண்ணாதுரை பிறந்தநாள் சிறப்பு பகிர்வு

நிலவை நோக்கி கனவுகளை முடுக்கிய நாயகன் …இளைஞர்களின் அறிவியல் திசைகாட்டி மயில்சாமி அண்ணாதுரை, பொள்ளாச்சி அருகி ல் உள்ள கோதவாடி கிராமத்தில் ஜூலை 2, 1958-ல் பிறந்தார். தந்தை, மயில்சாமி, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர். மாலையில் தையல் வேலையும் செய்வார். அறிஞர் அண்ணாவின் மீதான ஈடுபாட்டால், தன் பிள்ளைக்கு ‘அண்ணாதுரை’ எனப் பெயர் சூட்டினார்.
மயில்சாமி அண்ணாதுரையின் பள்ளிப் பருவம், அரசுப் பள்ளியிலே அமைந்தது. ஒழுங்கான வகுப்பு அறைகள்கூட கிடையாது. ‘மாட்டுக் கொட்டகையில் ஒரு வருஷம், கோயில் திண்ணையில் மறு வருஷம், கோணிப் பையே குடையாக, செருப்பே இல்லா நடைப் பயணம்’ எனக் கவிதை மூலம் குறிப்பிட்டு இருக்கிறார். ஆறாம் வகுப்பு படிக்க, 5 கிலோ மீட்டர் நடந்து செல்வார்.

உ.தொ.க.அலுவலர்கள் அலுவலக ஊழியர்களிடம் வேலை வாங்க அச்சப்படுகின்றனர்.....

உ.தொ.க.அலுவலர்கள் தங்களது அலுவலகத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர் உள்ளிட்ட எந்த ஊழியரிடமும் வேலை வாங்க மிகவும் அச்சப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

காரணம் அவர்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் பல ஆண்டுகள் பணியாற்றுவதாலும் தன் சொந்த ஒன்றியம் அல்லது தன் சொந்த ஊரிலே பணியாற்றும் வாய்ப்பு கிடைப்பதாலும் அலுவலர்கள் பல்வேறு காரணங்களுக்காக அச்சப்படுகின்றனர் சில ஊழியர்கள் செய்வது தவறு எனத் தெரிந்தும் தட்டிக் கேட்கமுடியாமல் தடுமாறுகின்றனர் அலுவலர்கள்.தன் சொந்த ஒன்றியம் அல்லது ஊரிலே பணியாற்றுவதன் காரணமாக தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு விதிகளுக்கு மாறாக சலுகைகள் வழங்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு ஆசிரியர்கள் மத்தியில் பரவிக்காணப்படுகின்றன.

சிறுபான்மையினர் குழந்தைகளுக்கான Pre/Post Matric கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி- 01.08.2014.

CLICK HERE- TO DOWNLOD -SCHOLARSHIP FORMS

2014-15ஆம் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளுக்கும் கற்றல் அட்டைகள் மீண்டும் வழங்கிட திட்டம்- மாநிலத் திட்ட இயக்குனர்

CLICK HERE-SSA-2014-2015-SPD SEEKS CARD NEED DETAILS

ஏழாவது ஊதியக் குழுவில் குறைந்தபட்சம் ஊதியக் கட்டு ரூ.26000/--உத்தேசப்பட்டியல்(Proposed Pay Structure in the Final Memorandum of NC JCM to 7th CPC )

Table No. 7.1.
Proposed pay scale minimum.
Sl. No. Pay scale No. Present PB PB No. Grade Pay Proposed minimum of the pay scale.
1 S.1 5200-20200 PB.1 1800 26000
2 S-2 5200-20200 PB 1 2000 33000
3 S-3 5200-20200 PB 1 2800 46000
4 S-4 9300-34800 PB 2 4200 56000
5 S-5 9300-34800 PB 2 4800 74000
6 S-6 9300-34800 PB 2 5400 78000
7 S-7 15600-39100 PB 3 5400 88000
8 S-8 15600-39100 PB 3 6600 102000
9 S-9 15600-39100 PB 3 7600 120000
10 S-10 37400-67000 PB 4 8900 148000
11 S-11 37400-67000 PB 4 10000 162000
12 S-12 75500-80000 HAG 0 193000
13 S-13 80000( Fixed ) Apex scale. 0 213000
14 S-14 90000 (Fixed) Cabinet Secy 0 240000
Table 7.2.
New Pay scale minimum
SL.No.    Grade pay of 6thCPC      Minimum of the  new pay scale
1           1800 26000
2 1900 31000
3 2000 33000
4    2400 41000
5    2800 46000
6 4200 56000
7   4600 66000
8     4800 74000
9    5400 78000
10 5400 in PB3 88000
11   6600 102000
12     7600 120000
13  8700 139000
14  8900 148000
15   10000 162000
16    12000 193000
17   75000-80000 202000
18    80000 fixed 213000
19 90000 fixed 240000

ஏழாவது ஊதியக் குழுவில் குறைந்தபட்சம் ஊதியக் கட்டு ரூ.26000/-ல் அமைக்க அகில இந்திய ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை

DOWNLOAD THE FULL MEMORANDUM JCM FOR ALL CENTRAL GOVT EMPLOYEES CLICK HERE...

 


                Proposed Pay Structure in the Final Memorandum of NC JCM to 7th CPC

National Council JCM , Staff Side has finalised its Memorandum to be submitted to 7th Pay Commission and it has been posted in its website NCJCMstaffside.com for all central government employees. The Full Final Memorandum consists 98 pages and the download link is provided below this post    
                                                           Chapter —VII
                                   Proposed Pay Structure and Rate of Increment

In the preceding chapters we have dealt with the various principles of pay determination as was enunciated by the successive Pay Commissions. The 6 CPC introduced the new concept of Pay Band and Grade Pay. We are not able to comprehend any logical methodology having been adopted by the 6th CPC in constructing the Pay Band and Grade Pay. In the ultimate analysis, we found that there had been no uniform multiplication factor. It varied from 2.2 time to 3. The changes effected by the Government while implementing the recommendations of the 6th cpc further compounded the confusion and making t more irrational and arbitrary. The 6 cPC in their report stated that they have upgraded certain pay scales having appreciated the contention made by the employees organizations. They merged certain other pay scales in an effort to delayering the functions. But the new pay that emerged from such upgradation/merger was not equivalent to the higher pay scales in the said group. For instance, the erstwhile pay scales of Rs.5000-8000, 5500-9000 and 6500-10500 were merged. The multiplication factor for pay band construction was 1.86 times of the minimum. Therefore the pay band for the pre merged pay scales was determined to begin at Rs.9300/-. Having merged, the pay band must have begun at 12,090/-, i.e. 1.86 times of 6500/- in which the other pay scales were merged.

சில நிமிட தாமதத்திற்காக மாணவர்களைவீட்டிற்குத் திருப்பி அனுப்பக் கூடாது தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் கண்டிப்பு

சில நிமிடத் தாமதத்துக்காக மாணவர்களை வீட்டுக்குத் திருப்பி அனுப்பும் தனியார் பள்ளிகளின் நடவடிக்கை தவறானது என்று அமைச்சர் ந.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை அருகே இரண்டு நாட்களுக்கு முன்பு தனியார் பள்ளி வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், காயமடைந்த மாணவர்கள் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ந.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எதிர்பாராத விதமாக தாமதமாக வரும், மாணவர்களை வீட்டுக்கு அனுப்பும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அரசுப்பள்ளிகளின் அவலங்களுக்கு தீர்வே இல்லையா?


கிராமப்புறங்களிலுள்ள அரசு துவக்கப்பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து அரசுத்துறைகள் கண்டுகொள்ளாமல் இருப்பதால் மாணவர் எண்ணிக்கை சரிந்து வரும் நிலை தொடர்கதையாக உள்ளது.

அரசுப்பள்ளிகளில், குறிப்பாக துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிந்து வரும் நிலையை மாற்ற வேண்டும் என அரசு பல்வேறு முறைகளை கடந்த இரண்டாண்டுகளாக பின்பற்றி வருகிறது. இருப்பினும், பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவதற்கான காரணத்தை அறிந்து, அதற்கு தீர்வு காண்பதில் கல்வித்துறை மற்றும் இதர அரசுத்துறைகள் எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது. பள்ளிக்கு தேவையான அடிப் படை வசதிகளில் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் மாணவர்களின் முக்கிய தேவைகளாக உள்ளது. கழிப்பறை இல்லாத மற்றும் பழுதடைந்துள்ள பள்ளிகளில் புதிய கழிப்பறைகள் கட்டுவதற்கு தமிழக அரசு சார்பில் ஒரு கழிப்பறை கட்டுவதற்கு ஒரு லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டது.

தேர்வு கட்டணத்தில் முறைகேடு கல்வித்துறை அலுவலர் அதிரடி சஸ்பெண்ட்

கடலூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் உதவி பிரிவு அலுவலராக பணியாற்றி வருபவர் சந்திரசேகரன்(45). கடந்த 2012-13ம் ஆண்டிற்கு தேர்வுத்துறை கட்டணமாக ரூ.15 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈ-பார்ம் (மின்னணு பதிவு) மூலம் மாவட்ட கல்வி அதிகாரி மல்லிகா கையெழுத்திட்டது போன்று தேர்வு கட்டணத்தில் முறைகேடு செய்து சந்திரசேகரன் சென்னை பள்ளி கல்வித்துறைக்கு கணக்கு

தனியார் பள்ளியையும் அரசுப்பள்ளியையும் என்றைக்குமே ஒன்றாகவைத்து ஒப்பீட்டு ஆய்வு செய்யமுடியாது. காரணம்:

1. 10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புப் பாடத்தினை இரு வருடம் தனியார் பள்ளிகள் நடத்தலாம். ஆனால் அரசுப்பள்ளிகளால் அது முடியவே முடியாது (அரசுப் பள்ளியில் பாடமே நட்த்துறது இல்லை,இதுல எங்க 2 வருசப் பாடம் எனத் தாங்கள் நக்கலடிக்கலாம்)
2. தனியார் பள்ளிகள் பாடத்தினை விளக்குவதில்லை.பதிலாக அதனை வரிவரியாக ( தங்கள் மகன் தங்களிடம் குறிப்பிட்டது போல்) மாணவர்களின் மனதில் பதியவைக்கவும் அவ்வாறு பதியவைத்ததைத் தாளுக்கு மாற்றும் வித்தையினையும் கற்றுத் தருகின்றனர். அரசுப் பள்ளிகள் அவ்வாறு நினைத்த நேரத்தில் தேர்வுகள் வைக்கமுடியாது. ஏனெனில் கற்றல்- கற்பித்தலுக்கு மட்டுமே பாடவேளைகளை பயன்படுத்த வேண்டும்

சில நிமிட தாமதத்திற்காக மாணவர்களைவீட்டிற்குத் திருப்பி அனுப்பக் கூடாது தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் கண்டிப்பு

சில நிமிடத் தாமதத்துக்காக மாணவர்களை வீட்டுக்குத் திருப்பி அனுப்பும் தனியார் பள்ளிகளின் நடவடிக்கை தவறானது என்று அமைச்சர் ந.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை அருகே இரண்டு நாட்களுக்கு முன்பு தனியார் பள்ளி வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், காயமடைந்த மாணவர்கள் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ந.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எதிர்பாராத விதமாக தாமதமாக வரும், மாணவர்களை வீட்டுக்கு அனுப்பும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

என்ன தான் ஒரு ஆசிரியர் சிறப்பாக செயல்பட்டாலும் ...


என்ன தான் ஒரு ஆசிரியர் சிறப்பாக செயல்பட்டாலும் ஒரே வகுப்பறையிலுள்ள அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரியான குணங்களுடனோ, ஒரே விதமான கல்வி அறிவுடனுனோ வெளிக்கொணர முடியும் என்ற வார்த்தைகளில் எனக்கு உடன்பாடில்லை. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு திறமை. அந்த திறமையை கூர்மைப்படுத்தினால் மட்டுமே அவனை சாதிக்க வைக்க முடியும்.

1-10ம் வகுப்பு வரையுள்ள சிறுபான்மையின மாணவர்களுக்கு உதவித்தொகை

தமிழ்நாட்டிலுள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிலையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை
வழங்கப்படுகிறது.

கூடுதல் தகவல்களுக்கு www.minorityaffairs.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பவர் அதற்கு முன்பு பயின்ற இறுதித் தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

இன்று பிறந்த நாள் காணும் மயில்சாமி அண்ணாதுரைஅவர்களுக்கு TNTF-N மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அரசுப் பள்ளி பாழல்ல .....அன்னைத் தமிழும் பாழல்ல .....அறியா மனமே பாழென்பேன்....
நிலவு நாயகன் மயில்சாமி அண்ணாதுரை பழகுவதற்கு இனிமையான ,எளிமையான மனிதர் அவர் !அவருடன் உரையாடிய இரவு என்னை ஈர்த்த பிள்ளை என என்னைப்போன்ற எளியவனை எல்லாம் குறித்த பரந்த மனதுக்காரர் !அவரிடம் பேசி அவரைப்பற்றி சுட்டிவிகடனில் வெளியான என் டென் இதோ உங்கள் அனைவருக்கும் !

உஷார்--திருக்கோவிலூர் அருகே பிரிட்ஜ் வெடித்து ஆசிரியர் உள்பட 3 பேர் பலி

திருக்கோவிலூர் அருகே உள்ள விளந்தை கிராமத்தை சேர்ந்தவர் கந்தவேல் (வயது 42). திருக்கோவிலூர் அருகே உள்ள ஆடூர் கொளப்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுகந்தி (38).
இவர்களுக்கு மாலதி (23), அருணா (17), சிந்துஜா (12) ஆகிய 3 மகள்கள் உள்ளனர். மாலதி சென்னையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4–ம் ஆண்டு படித்து வருகிறார். அருணா சேலம் மாவட்டம் தேவியாகுறிச்சியில் பிளஸ்–2 படித்து வருகிறார். சிந்துஜா மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவர் வீட்டில் இருந்து வந்தார். கந்தவேலுவின் தாயார் பார்வதி (70)யும் அவர்களுடன் வசித்து வந்தார்.
சென்னையில் படித்து வரும் மாலதி ஒரு வார விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்தார்.

சேமிப்பை அதிகப்படுத்துவதற்காக 80-சி வரி விலக்கு உச்ச வரம்பை 2 லட்ச ரூபாயாக உயர்த்துவதற்கு நிதி அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.


சேமிப்பை அதிகப்படுத்துவதற்காக 80-சி வரி விலக்கு உச்ச வரம்பை 2 லட்ச ரூபாயாக உயர்த்துவதற்கு நிதி அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது. வருமான வரிச்சட்டம் 80சி, 80 சிசி, 80 சிசிசி ஆகிய பிரிவுகளின் படி ஒரு லட்ச ரூபாய் வரை சேமிக்கப்படுவதற்கு வரிவிலக்கு உண்டு. வரும் ஜூலை 10-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் இந்த வரம்பு ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படலாம் என்று விவரம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும் அஞ்சல் வழியில் M.Ed படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.


கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தை தொடர்ந்து, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும் அஞ்சல் வழியில் எம்.எட். படிப்பை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது.
BHARATHITHASAN M.Ed APPLICATION DOWNLOAD FOR ENTRANCE EXAM

BHARATHIYAR M.Ed PROSPECTUS DOWNLOAD 

BHARATHIYAR M.Ed APPLICATION DOWNLOAD FOR ENTRANCE EXAM


          பி.எட். முடித்துவிட்டு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஆசிரியராக 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவங்கள் பாரதிதாசன்

கீழமை நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கீழமை நீதிமன்றங்கள் தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.உயர் நீதிமன்றத்துக்கு உட்பட்ட கீழமை நீதிமன்றங்களில் பணியாற்றும் தமிழ் தெரியாத நீதிபதிகள் ஆங்கிலத்தில் தீர்ப்பெழுதலாம் என்று உயர் நீதிமன்ற பதிவாளர் 1994ல் சுற்றறிக்கையை வெளியிட்டார். ஆனால் அந்த அனுமதி வழங்கியதில் கால வரம்பு குறிப்பிடாததால் தமிழ் தெரியாத

பிளஸ்டூ பயிலாமல்,ஆசிரியர் பயிற்சி முடித்த பின் பட்டம் பெற்றவர்கள் தமிழாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி உடையவர்

பிளஸ்டூ பயிலாமல்,ஆசிரியர் பயிற்சி முடித்த பின் பட்டம் பெற்றவர்கள் தமிழாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி உடையவர். சென்னை நீதிமன்ற உத்தரவு

அலுவலகத்துக்கு ஆடி, அசைந்து வந்த 40 அரசு ஊழியர்கள்.. வீட்டுக்கு திருப்பியனுப்பிய மத்திய அமைச்சர்

தாமதமாக அலுவலகம் வந்த தகவல் தொடர்பு துறை அமைச்சக அதிகாரிகள், ஊழியர்களை விடுமுறை எடுத்துவிட்டு வீட்டுக்கு செல்லுமாறு அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் உத்தரவிட்டார். தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் அலுவலகம் டெல்லி சாஸ்திரி பவனில் உள்ளது. இவரது அலுவலகத்துக்கு காலை 9 மணிக்கெல்லாம் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வர வேண்டும் என்பது உத்தரவு.

கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் இயந்திரம்: 10-ம் வகுப்பு மாணவர் கண்டுபிடிப்பு

பழைய பொருட்களை கொண்டு கடல் அலையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கி அலகாபாத்தை சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவர் சாதனை படைத்துள்ளார். 
டெல்லி பப்ளிக் ஸ்கூலில் படித்து வரும் சுதான்சு என்ற மாணவர் ரூ.4 ஆயிரம் செலவு செய்து இந்த இயந்திரத்தை தயாரித்துள்ளார். கடல் அலையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் இந்த இயந்திரம் தயாரித்த மின்சாரத்தை சேமிக்கவும் செய்கிறது. 

ஜுனியர் ரெட் கிராஸ் சொசைட்டி,தேசிய பசுமைப்படை லோகோக்கள்

Junior red cross
 தேசிய பசுமைப்படை

National Green Corps

கடிவாளமின்றிச் செயல்படும் தனியார் பள்ளி விடுதிகள்

மதிப்பெண்களை உற்பத்தி செய்யும் போட்டியிலுள்ள தனியார் பள்ளி நிர்வாகங்கள் நடத்தும் மாணவர் விடுதிகள் மீது கல்வித் துறையோ, இதரத் துறை அலுவலர்களோ உரிய கண்காணிப்பு மேற்கொள்ளாததால், விளையாட்டு உள்ளிட்ட பிற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தாமல் அதிகாலை முதல் இரவு வரை படிப்பில் மட்டுமே முழுக் கவனமும் செலுத்த வற்புறுத்துவதால் அந்த விடுதி மாணவர்கள் மத்தியில் மன அழுத்தம் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் கல்வி மாவட்டம் எனப் பெயர் பெற்று விளங்கும் நாமக்கல் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளி மாணவர்கள் ஆண்டுதோறும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்விலும், தொடர்ந்து மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலிலும் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்துக் கொண்டுள்ளனர். இதனால், பல்வேறு வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை நாமக்கல் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வைப்பு நிதி கணக்குகள் 2012-13 ஒத்திசைவு செய்ய உத்தரவு.

பள்ளிக்கல்வி - உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் / பணியாளர்கள் வைப்பு நிதி கணக்குகள் 2012-13 நிதியாண்டிற்குரிய உரிய (BOOK ADJUSTMENT) வட்டி தொகை ரூ.661,07,46,000/-ஐ சரி செய்த விவரம் மற்றும் 2013-14 கணக்குகள் ஒத்திசைவு செய்ய உத்தரவு.
DSE - ASTPF - 2012-13 BOOK ADJUSTMENT & 2013-14 ACCOUNT CLEARANCE REG PROC CLICK HERE...

TET PAPER II பாட வாரியாக,இன வாரியாக தேர்ச்சி பெற்றவர்களது விவரம்.

TNTET:தாள் இரண்டில் பாட வாரியாக,இன வாரியாக தேர்ச்சி தேர்ச்சி பெற்றவர்களின் RTI மூலம் பெறப் பட்ட விவரம்.

2013 ஆம் ஆண்டு TET தேர்வின் இரண்டாம் தாளில் பாட வாரியாக,இன வாரியாக தேர்ச்சி பெற்றவர்களது விவரம்.

முதல்வர் ஜெயலலிதா வழங்குகிறார் பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்தவர்களுக்கு பரிசு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு 4ம் தேதி முதல்வர் ஜெயலலிதா பரிசுகள் வழங்குகிறார். கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்த பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு தமிழக அரசு ஆண்டு தோறும் பரிசுகள் வழங்கி பாராட்டி வருகிறது. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் ஊத்தங்கரை மாணவி 1193 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலாவது இடத்தை பிடித்தார். தர்மபுரி மாணவி 1192 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடத்தை பிடித்தார். நாமக்கல் துளசிராஜன், சென்னை நித்யா ஆகியோர் 1191 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 3ம் இடத்தை பிடித்தனர்.

புதிய மருத்துவ காப்பீட்டில் சேர ஓய்வூதியதாரர்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர ஓய்வூதியதாரர்களுக்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: 1-7-2014 முதல் ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களது விபரங்கள் அடங்கிய படிவத்தை ஜூன் 30க்குள் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது இதற்கான காலக்கெடு இம்மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, படிவங்களை இதுவரை அளிக்காத ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் 31ம் தேதிக்குள் ஓய்வூதியம் பெறும் அலுவலகத் தில் பொதுத்துறை வங்கி கிளையில் அளித்து, அதன் ஒரு நகலை ஓய்வூதியம் வழங்கும் அலுவலரின் கையொப்பத்துடன் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த நகலை, அடையாள அட்டை வழங்கப்படும் வரை பணம் செலவின்றி மருத்துவச் சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏழில் (7-ல்) அடங்கிய வாழ்க்கை தத்துவம்:-


நன்மை தரும் ஏழு…

1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்ச்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செல்வத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு

வழிகாட்டும் ஏழு

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு சுப்ரீம் கோர்ட் உத்தரவ ப்படி டிஸ்மிஸ்' எளிதல்ல:

கடந்த, 2005ல், தமிழக அரசு பணியாளர்தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், குரூப் -1 தேர்வு நடந்தது. இந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த ஐகோர்ட், அந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற, 83 பேரின் தேர்வை ரத்து செய்ததுடன், முறைகேடு நடந்ததையும் உறுதி செய்தது. இதையடுத்து, தேர்ச்சி பெற்றவர்கள் சார்பில்,

2005 ஆம் ஆண்டு குரூப் 1 இல் தேர்ச்சி பெற்ற 83 பேரின் தேர்ச்சி செல்லாது: உச்ச நீதிமன்றம்

கடந்த 2005 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக நடராஜன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

 இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்  2005 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில்  83 பேர் தேர்ச்சி பெற்றது செல்லாது என்று, சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும் TNPSC, மற்றும் தேர்வில் பெற்றவர்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.

பள்ளி மாணவ, மாணவிகளின் படிப்பு பாழாவதற்கு ஊர்வலங்கள் எந்த வகையிலும் காரணமாக அமைந்து விடக்கூடாது.

விழிப்புணர்வு ஊர்வலங்கள் எனும் பெயரில் பள்ளி மாணவ, மாணவிகளை விளம்பரப் பதாகைகளை கையில் ஏந்த வைத்து பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வெய்யிலில் நடக்க வைப்பதை அடிக்கடி ஊடகங்கள் மூலம் அறிகிறோம்.

தேர்தலில் வாக்களிப்பது, மது ஒழிப்பு, புகையிலை ஒழிப்பு, சாலைப் பாதுகாப்பு, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, எய்ட்ஸ் நோய், ரத்த தானம், காச நோய், பேரிடர்களான புயல், வெள்ளம், நில அதிர்வு, தீத்தடுப்பு உள்பட இன்னும் எத்தனை பிரிவுகள் உள்ளனவோ அத்தனைக்கும் விழிப்புணர்வை உருவாக்குவதற்காக பேரணிகள், மனிதச் சங்கிலி, மாரத்தான் போன்றவற்றை அரசு நடத்துகிறது.

'நூற்றுக்கு நூறு' திட்டம் ஆசிரியர்களுக்கு உத்தரவு.

மதுரை கல்வித் துறையில், 'நுாற்றுக்கு நுாறு' என்ற திட்டம் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், நுாறு சதவீதம் தேர்ச்சி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில், அரசு பொதுத் தேர்வுகளில், மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை ஆய்வு செய்ததில், தமிழ், ஆங்கில பாடங்களில் மாணவர்கள் அதிகம் தோல்வியுற்றதும், ஒரு பாடத்தில் மாணவர்கள் தோல்வியும் அதிகரித்திருந்தது. ஒரு பாடம் தோல்வி மட்டும் தவிர்க்கப்பட்டிருந்தால், மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் மூன்றாக உயர்ந்திருக்கும் என்பது தெரியவந்தது.இதன் விளைவாக வரும் அரசு பொதுத் தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சியை இலக்காக கொண்டு, 'நுாற்றுக்கு நுாறு' என்ற திட்டத்தை, முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி மீண்டும் துவக்கியுள்ளார்.

16 உண்டு உறைவிடப் பள்ளிகள் மூடல்: இணை இயக்குனர் அதிரடி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்உள்ள 16 உண்டு உறைவிட பள்ளிகளில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அனைவருக்கும் கல்வி இயக்க இணை இயக்குனர் உத்தரவின்படி பள்ளிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

GENUINESS FEE DETAILS FOR ALL UNIVERSITIES

CLICK HERE-GENUINESS FEE DETAILS

அரசுப்பள்ளி-சித்ரா ராஜ்


இலவசமாய் கிடைப்பதினாலே
கல்வியின் அருமை
புரிவதில்லை
கிராமப் புற பிள்ளைகட்கு...


ஆடு மேய்க்க லீவு போட்டு
தம்பி பார்த்துக்க லீவு போட்டு
கழனி வேலைக்கு லீவு போட்டு
ரேஷனில் அரிசி, சக்கரை வாங்க
அனுமதி பெற்று....
வாழ்வாதாரமே போராட்டத்தில்....!
கல்வி என்பது இரண்டாம் பட்சம்
ஐந்தாம் வகுப்பு
ஆர்த்திக்கு
அ,ஆ, தெரியாது
ஏ,பி,சி,டி தெரியாது
தவறாமல் பள்ளிக்கு வருவாள்
தினம் ஒரு முட்டைக்காக

TNPSC - GROUP - IIA - TENTATIVE ANSWER KEYS FOR TAMIL & GENEREL KNOWLEDGE

TNPSC GROUP - IIA - TAMIL ANSWER KEYS CLICK HERE...
TNPSC GROUP - IIA - GK ANSWER KEYS CLICK HERE...

2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்; அதிகாரப்பூர்வ தகவல்

ஆசிரியர் தேர்வு வாரியம் துணை இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.811/TET/2014, நாள்.17.06.2014ன் படி  TNTETல்தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்
தமிழ் - 9853 
ஆங்கிலம் - 10716
கணிதம் - 9074
தாவரவியல் - 295
வேதியியல் - 2667
விலங்கியல் - 405
இயற்பியல் - 2337
வரலாறு - 6211
புவியியல் - 526
மொத்தம் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் : 42084

01.07.2014 முதல் அகவிலைப்படி உயர்வு எவ்வளவு?


மே'2014 மாத விலைவாசி உயர்வுக் குறியீட்டு எண் இன்று (ஜூன் 30) வெளியிடப்பட்டது.

இதன் படி அகவிலைப்படி உயர்வு 106.17% ஆக உள்ளது. ஜூன் மாத விலைவாசி உயர்வுக் குறியீட்டு எண் ஜூலை 31 ஆம் தேதி வெளியிடப்படும்.

அதன்பிறகே அகவிலைப்படி உயர்வு எவ்வளவு என்பது துல்லியமாக தெரிய வரும்.

இதன்பிறகு அகவிலைப்படி உயர்வு பற்றிய நடைமுறைகள் தொடங்கும்.

பிளஸ் 2 படிக்காமல் தலைமை ஆசிரியரான பெண்- உயர்நீதிமன்ற உத்தரவுப்படி

பிளஸ் 2 படிக்காமல் இரண்டு ஆண்டுகள் இடைநிலை ஆசிரியர்பயிற்சி பெற்ற பெண், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நடுநிலைப்பள்ளி பட்டதாரி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் யூனியனுக்கு உட்பட்ட சின்னபேள கொண்டப்பள்ளி துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சுகுணா. 1985ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.ஸி. தேர்ச்சி பெற்ற இவர், பிளஸ் 2 படிக்காமல் 1987ம்ஆண்டு இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தார்.பின் இடைநிலை ஆசிரியராக நியமனம் செய்யப்பட்ட சுகுணா, ஓசூர் அடுத்த கெலமங்கலம் யூனியனுக்கு உட்பட்ட துவக்கப்பள்ளியில் தெலுங்கு ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.அதை தொடர்ந்து 1995ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி இடமாறுதல் கவுன்சலிங் மூலம் ஓசூர் அருகே நல்லூர் டவுன் பஞ்சாயத்து துவக்கப்பள்ளிக்கு சென்றார்.அங்கிருந்து 2003ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று, ஓசூர் அருகே உள்ள பூதினத்தம் துவக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டார்.

2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் இனவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்; அதிகாரப்பூர்வ தகவல்

ஆசிரியர் தேர்வு வாரியம் துணை இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.811/TET/2014, நாள்.17.06.2014ன் படி  TNTETல் இனவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்
 
OC - 508
BC - 22172
BCM - 777

தினமும் மாலையில் பள்ளியில் சிறப்பு வகுப்புகள்: பள்ளிக் கல்வித்துறை


அரசு பள்ளிகளின் தேர்ச்சியை அதிகரிக்க கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு மாலை நேரம் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடைபெறும். அதில் முக்கிய பாடங்களை படிக்க மற்றும் எழுத கற்பிக்கப்படும்.

Bharathidasan -M.Ed. ADMISSION NOTIFICATION FOR 2014 – 2015-Distance Education

M.Ed. Advertisement (2014-2015) 


M.Ed. Application & Prospectus

இணையவழி கலந்தாய்வு தகவல்கள்...

இணையவழி கலந்தாய்வு குறித்து சில ஆலோசனைகள்


1.ஒவ்வொரு மண்டலத்திலும் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களின் படி அந்த மண்டலத்திற்கு தகுந்தவாறு முன்னுரிமை பட்டியல் தனித்தனியாக தயார் செய்யப்படும்.



2.ஒரு மண்டலத்தை தேர்ந்தெடுத்த பிறகு வேறு ஒரு மண்டலத்தை எக்காரணம் கொண்டும் தேர்வு செய்ய முடியாது.


3.கலந்தாய்வு தங்களது மாவட்டத்தில் எந்த இடத்தில் நடைபெறுகின்றது என அறிந்து ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே செல்ல வேண்டும்.தாமதமாக செல்ல வேண்டாம்.

New Health Insurance Scheme, 2014 for Pensioners (including spouse) / Family Pensioners - Form

CLICK HERE- NHIS-PENSIONER FORM

Guide to Pensioners on Retirement Benefits

CLICK HERE-DIRECTORATE OF PENSION

தொடக்கக் கல்வித் துறையில் மாவட்ட மாறுதல் இணையதளவழி கலந்தாய்வு நடைபெறும் இடங்கள்

திருவண்ணாமலை மாவட்டம்
*********************************************
டேனிஷ் மிஷின் மேல்நிலைப் பள்ளி,
பெரியார் சிலை அருகில், திருவண்ணாமலை
ஈரோடு மாவட்டம்
*****************************
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம்,
ஈரோடு
விருதுநகர் மாவட்டம்
*********************************
கே.வி.எஸ். மெட்ரிக் பள்ளி, சூளகிரி, விருதுநகர்
காஞ்சிபுரம் மாவட்டம்
*******************************
ராணி அண்ணாதுரை பள்ளி, காஞ்சிபுரம்

மாநில பொதுக்குழு அழைப்பு


தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு அழைப்பு-


அரசின் கல்வித்துறைவெளியிட்டஜூலை மாத நாட்காட்டி- அனைத்துவகை அரசுபள்ளிகளுக்கும் பொதுவானது

திருவண்ணாமலை மாவட்ட செயற்குழு கூட்டம்-நடவடிக்கைகள் மற்றும் தீர்மானங்கள்

 தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழுக்கூட்டம் காலை 11. மணியளவில் திருவண்ணாமலை டவுன் ஹால் நடுநிலைப்பள்ளி மையக்கூட்ட அரங்கில் நடைபெற்றது.கூட்டத்திற்கு போளுர்வட்டாரக்கிளைத்தலைவர் திரு அண்ணாமலை தலைமை தாங்கினார்.மேலும் முன்னாள் மாநில  பொருளாளர்  திரு.அ.அப்துல் காதர் அவர்கள் முன்னிலை வகித்தார்.மாவட்டச்செயலரும்,மாநில துணைத்தலைவருமான திரு கே.பி.ரக்‌ஷித் அனைவரையும் வரவேற்று தீர்மானங்களினை முன் மொழிந்தார். 20.07.2014 அன்று நடைபெற உள்ள மாநில பொதுக்குழுவினை எவ்வாறு சிறப்பாக நடத்தலாம் என கருத்து கேட்கப்பட்டு விவாதிக்கப்பட்டு ஆலோசனை நடத்தப்பட்டது.மாநில பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி அவர்கள்கலந்து கொண்டு மாநில பொதுக்குழுவினை சிறப்பாக நடத்தும் விதமான சில ஆலோசனைகளை வாழங்கினார். மாவட்டக்கிளை மற்றும் வட்டாரக்கிளை செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து பொருப்பாளர்களை உடன் உறுப்பினர் சேர்க்கையை முடிக்கவும்,பின்னர் இவ்வாண்டு  வட்டாரத்தேர்தல்கள் நடத்தி முடிக்கவும் கேட்டுக்கொண்டார்.

            திருவண்ணாமலை யில் நடைபெறும் மாநில பொதுக்குழு சங்கத்திற்கு திருப்புமுனை தருவது போல அமையவேண்டும் என்று கூறியதுடன் ”””அனைத்து வட்டார ,மாவட்ட ,மாநில பொறுப்பாளர்கள் அனைவரும்  இயக்க இதழ்”ஆசிரியர் பேரணி”யின் ஆயுள் உறுப்பினராகச் சேர்த்தல்”””””” என்ற இயக்கத்தினை இம்மாவட்டத்தில்  முதன் முதலில் துவங்குவதாக அறிவித்தார்

            அதன்படி 20.07.2014 அன்று நடைபெறும் பொதுக்குழுவில் மாவட்டம் சார்பில்  பெருமளவிலான பேரணி இதழ் ஆயுள்சந்தாக்கள் தருவதென  செயற்குழு முடிவாற்றியது.
           மாவட்ட பொருளாளர் அர்ச்சுனன் நன்றியுரையுடன் கூட்டம் முடிவடைந்தது

மாணவர்கள் சேர்க்கை இல்லை; 2 அரசு துவக்க பள்ளிகள் மூடல்

பள்ளிக்கல்வித்துறையில் நாளை நடைபெறவுள்ள இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு கலந்தாய்வில் மொத்தம் 530 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது; பதவி உயர்வு பெற உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை (பாடவாரியாக) வெளியீடு

இதுகுறித்து பதவிஉயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் சார்பில் நமது "TNKALVI"க்கு அளித்த அறிக்கையில், 2014-15ம் கல்வியாண்டின் பள்ளிக்கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை பின்வருமாறு:
தமிழ் : 171
ஆங்கிலம் : 42
கணிதம் : 81

பிளஸ் 2 கணித விடைத்தாள் நகல் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்': ஐகோர்ட் உத்தரவு

பிளஸ் 2 கணித பாடத்தில் மதிப்பெண் குறைந்ததால், விடைத்தாள் நகல் வழங்கியதில், 4 பக்கங்களை காணவில்லை; மறு மதிப்பீடு செய்ய தாக்கலான வழக்கில், அரசுத் தேர்வுகள் இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் பொன்னுச்சாமி தாக்கல் செய்த மனு: எனது மகன் பிரகாஷ், பிளஸ் 2 தேர்வில் 1200 க்கு 1080 மதிப்பெண் பெற்றார். ஆங்கிலம், கணிதம், வேதியியல், கம்ப்யூட்டர் அறிவியல் விடைத்தாள் நகல்கள் கோரி, அரசுத் தேர்வுகள் துறைக்கு விண்ணப்பித்தார். இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்ததில், கணிதம் தவிர பிற பாடங்களுக்கு நகல்கள் கிடைத்தன. கணித விடைத்தாள் நகல் கோரி

1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம்: ஜெயலலிதா ஆய்வு!

சென்னை: ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரையில் தமிழை கட்டாயப் பாடமாக அனைத்து மாநில வாரிய பள்ளிகளும் கடைபிடிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆய்வு கூட்டம் நடத்தி்னார்.

2006ஆம் ஆண்டைய தமிழ்நாடு தமிழ் கற்பதற்கான சட்டத்தின்படி, ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பகுதி ஒன்றில் தமிழை கட்டாயப் பாடமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாநில வாரிய பள்ளிகளும் கடைபிடிப்பது குறித்த ஆய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சபிதா, சட்டத்துறை செயலாளர் கோ.ஜெயச்சந்திரன் மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நான்காண்டு பட்டப் படிப்புத் திட்டம் வாபஸ்: யுஜிசி உத்தரவுக்கு பணிந்தது தில்லி பல்கலைக்கழகம்


தில்லி பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நான்காண்டு இளங்கலை பட்டப் படிப்புத் திட்டம் திரும்பப் பெறப்படுகிறது என்று அப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தினேஷ் சிங் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "யுஜிசி பிறப்பித்துள்ள உத்தரவை ஏற்று 2013-14 கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட நான்காண்டு இளங்கலை பட்டப் படிப்புத் திட்டத்தை தில்லி பல்கலைக்கழகம் திரும்பப் பெற்றுக் கொள்கிறது. கடந்த கல்வியாண்டில் நான்காண்டு பட்டப்படிப்பில் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் 2012-13 கல்வியாண்டில் அமலில் இருந்த மூன்றாண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களாகக் கருதப்படுவர். நிகழ் கல்வியாண்டில் பழைய முறைப்படியே மூன்றாண்டு இளங்கலை பட்டப் படிப்புத் திட்டத்தின்படி மாணவர் சேர்க்கை நடைபெறும்' என்று கூறியுள்ளார்.

தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணி-திருவண்ணாமலை மாவட்ட செயற்குழு கூட்டம்


web stats

web stats