rp

Blogging Tips 2017

FLASH NEWS : G.O Ms - 303 - 7th PAY COMMISSION G.O PUBLISHED

click here to download

ஊதியக்குழு அறிவிப்பு உண்மையான உயர்வு எவ்வளவு

அரசாணை எண் 300 நிதித்துறை நாள் 10.10.17- அகவிலைப்படி 3%- 01.07.2017 முதல் உயர்த்தி (136% to 139% ) ஆணை வெளியிடப்படுகிறது

அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை: பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வு அறிவிக்கப் பட்டுள்ளது. 


தமிழக பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன், அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, அரையாண்டு தேர்வை, டிச., 7ல், துவங்கி, 23ல் முடிக்க வேண்டும். 10ம் வகுப்புக்கு, டிச., 11ல் தேர்வு துவங்கப்படும். பிளஸ் 1, பிளஸ் 2க்கு, டிச., 7ல் தேர்வுகள் துவங்கும்.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1க்கான தேர்வு, காலை, 10 மணி முதல், பகல், 12.15 மணி வரையும், பிளஸ் 2க்கு, காலை, 10 மணி முதல் பகல், 1.15 வரையும் நடைபெறும். 24ம் தேதி முதல் விடுமுறை விடப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

NMMS EXAM | 2017 REG - DIRECTOR PROCEEDINGS!


7th PC-இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களையப்படவில்லை


pay different for starting scales of school education

தமிழக அரசின் 7 வது ஊதியக்குழு முக்கிய அம்சங்கள் ஒரே இடத்தில்












ஊதியக்குழு அறிக்கை தொடர்பான முதல்வர் அவர்களின் அறிவிப்பு குறித்து பரிசீலனை செய்ய ஜாக்டோ-ஜியோ- வின் அவசரக்கூட்டம் 13.10.17(

வணக்கம். ஊதியக்குழு அறிக்கை தொடர்பான முதல்வர் அவர்களின் அறிவிப்பு குறித்து பரிசீலனை செய்ய  ஜாக்டோ-ஜியோ- வின் அவசரக்கூட்டம் 13.10.17(வெள்ளிக்கிழமை) மதியம்  சரியாக 2.00 மணிக்கு சென் னை அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே ஜாக்டோ- ஜியோ உயர்மட்டக்குழவில் இடம் அனைத்து துறைவாரி சங்க தலைவர்கள் (சங்கத்திற்கு ஒருவர் மட்டும்) தவறாது பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

மு.சுப்பிரமணியன்,மாயவன்,மீனாட்சி சுந்தரம்,தாஸ்,அன்பரசு,வெங்கடேசன்.                                     ஒருங்கிணைப்பாளர்கள்,
மோசஸ்-நிதிக்காப்பாளர், 
 தியாகராஜன்- செய்திதொடர்பாளர்.

TN 7th PC- ஆண்டு ஊதிய உயர்வு 3% தொடரும்


TN-7th PC- அகவிலைப்படி மத்திய அரசை பின்பற்றி வழங்கப்படும் ( அப்படியானால் DA 5%)


சிறப்பு காலமுறை ஊதிய விகிதம்


தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய அட்டவணை


புதிய ஊதிய விகிதம் அமுலுக்கு வரும் நாள் விவரம்


DCRG -20லட்சமாக உயர்வு,கம்முயுடேஷன்-1/3 ஆக தொடரும்


உடல் ஊனமுற்றோர் ஊர்திப்படி விவரம் (2500ஆக உயர்வு)


மருத்துவப்படி 300 ஆக உயர்வு & பிற படிகள் விவரம்


வீட்டு வாடகைப்படி உயர்வு விவரம்



இடைநிலை ஆசிரியர் ஊதியம் 2800 கிரேடு பே மாற்றம் இல்லை


புதிய ஊதியத்தில் தேர்வுநிலை சிறப்புநிலை


EXCULSIVE-7th PAY COMMISSION - New Pay Fixation Table Published

click here to download

பி.எஃப்.-ல் ஊழியர்களின் பங்களிப்பு ரத்தா? அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்

வழக்கம் போல், எதிர்பார்ப்புகள் யூகங்களுக்கு விடை தரப்போகும் 2016 - 2017-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில்  ‘வந்தே தீரும்’ என நம்பப்படும் தகவல் ஒன்று உள்ளது. வருங்கால வைப்பு நிதியில் ஊழியர்களின் பங்களிப்பு பற்றிய சீரமைப்புதான் அந்த தகவல். வரவிருக்கும் இந்த ‘சீரமைப்பில்’ இரண்டு அம்சங்கள் சொல்லப்படுகின்றன.

ஊழியர்கள் பெறும் ஊதியத்தில் 12% என்று உள்ள வைப்பு நிதி சந்தாவை வருமானத்துக்கு ஏற்றாற்போல் திருத்தி அமைப்பது முதலாவது அம்சம். ரூ.15,000 ஊதியம் பெறுவோருக்கு வருங்கால வைப்பு நிதிக்கு மாதாந்திர சந்தா செலுத்துவதிலிருந்து ‘விலக்கு அளிப்பது’  மற்றொரு அம்சம். இந்த இரண்டாவது அமசம் பற்றி அதாவது, ரூ.15,000 ரூபாய் ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு வைப்பு நிதி செலுத்துவதிலிருந்து விலக்குப் பற்றி ஓர் அலசல்.
தமிழ்நாடு அரசு ஊழியர்களை உதாரணமாகக் கொள்வோம். இவர்களுக்கான ‘வருங்கால வைப்பு நிதி’ (general provident fund) இது 01.04.1935 முதல் அமலில் உள்ளது. முறையான அரசுப் பணியில் உள்ள அனைவரும் வருங்கால வைப்பு நிதி (general provident) சந்தாதாரர் ஆவது கட்டாயம். எவருக்கும் விதிவிலக்கு கிடையாது.
அரசுப் பணியில் சேர்ந்தது முதல் ஓய்வு பெறுவதற்கு நான்கு மாதங்கள் முன்பு வரை, வைப்பு நிதிக்கான சந்தா தொகையானது அந்தந்த மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டு அவரவர் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும்.

1976-ல் குறைந்தபட்சம் ரூ.15-ஆகவும் அதிகபட்சமாக ரூ.250-ஆகவும் இருந்தது. 1992-ல் குறைந்தபட்சமாக இருந்த சந்தா வீதம் ரூ.90-ஆகவும், அதிகபட்சம் ரூ.800-ஆகவும் இருந்தது. 2001-ல் குறைந்தபட்சமாக ரூ.360-ஆகவும் அதிகபட்சமாக ரூ.3,120-ஆகவும் இருந்தது. தற்போதைய குறைந்தபட்ச சந்தா தொகை ரூ.1,610-ஆகவும் அதாவது, இன்றைய தேதியில் அமலில் உள்ள சந்தா தொகை 12%. இதன்படி குறைந்தபட்ச ஊதியமான ரூ.6100 மற்றும் இதற்கான 119 சதவிகித அகவிலைப்படி மீது 12% என ரூ.1,610 கிடைக்கும்.
12% கணக்கீடு  என்பது, ஊழியர் பெறும் அடிப்படை ஊதியம் (Basic pay), தர ஊதியம் (grade pay), தனி ஊதியம் (personal pay), சிறப்பு ஊதியம் (Special Pay) மற்றும் அந்தந்த தேதியில் தரப்படும் அக விலைப்படி ஆகியவற்றின் கூட்டுத் தொகையில் 12% ஆகும்.

எப்போதெல்லாம் ஊதிய உயர்வு மற்றும் அகவிலைப்படி உயர்வு தரப்படுகிறதோ, அப்போது சந்தா தொகை, அதற்கேற்ப 12% பிடித்தம் செய்யப்படும். ஊழியர் விருப்பம் தெரிவித்தால், 12 சதவிகிதத்துக்கும் அதிகமான தொகையை வைப்பு நிதி சந்தாவாக செலுத்தலாம். மொத்த ஊதியம் அத்தனையையும்கூட சந்தா தொகை ஆக்கி சேமிக்கலாம், தடை இல்லை. ஆக எல்லா காலகட்டத்திலும் வருங்கால வைப்பு நிதிக்கான சந்தா தொகையானது ஊதியத்தின் அடிப்படையிலேயே நிர்ணயம் செய்யப்பட்டு மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது.

வட்டி!
1976-ல் வருங்கால வைப்பு நிதியில் செலுத்தப்படும் ஊடியர்களின் சந்தா தொகைக்கு தரப்பட்ட வட்டி விகிதம் 8%. இந்த 8 சதவிகித வட்டி விகிதமானது மெல்ல மெல்ல ஊர்ந்து, உயர்ந்து தொண்ணூறுகளில் 12 சதவிகிதமாக நிலைகொண்டது, அது மட்டுமன்றி செலுத்தப்பட்ட சந்தா தொகை இருப்பில் கடன் பெறாத - அதாவது, தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கடன் வாங்காத - கணக்குகளுக்கு ஒரு சதவிகிதம் போனஸ் வட்டி வழங்கப்பட்டு அதிகபட்ச வட்டி விகிதம் 13 சதவிகிதமாக இருந்தது.

2000 மாவது ஆண்டு வரை 12% சதவிகிதமாக இருந்த வட்டி, 2001-ல் 11% ஆக இறங்கி, 2002-ல் 9.5 சதவிகிதமாக குறைந்து 2003-ல் 9 சதவிகிதமாக சுருங்கி, 2004-ல் 8 சதவிகிதமாக குறைந்துவிட்டது. மறுபிறவி எடுத்தது போல் 2011-ல் 8.6 சதவிகிதமாக உயர்ந்து 1.4.2012-ல் 8.8 சதவிகிதமாக வளர்ந்த வட்டி விகிதம், 1.4.2013 முதல் மீண்டும் சரிந்து 8.7 சதவிகிதமாக உள்ளது. இந்த வட்டியை அரசுதான் வழங்குகிறது.

வட்டி சிறப்பு!

வேறு எந்த சேமிப்பு முறைக்கும் இல்லாத வட்டி சிறப்பு (Interest speciality) இந்த வருங்கால வைப்பு நிதி சேமிப்புக்கு உண்டு. அதாவது, ஓர் ஊழியரின் ஜனவரி மாதம், பிப்ரவரி மாதம் அல்லது ஆண்டின் ஏதோ ஒரு மாதத்துக்கான ஊதியமானது, அவர் விடுப்பில் இருந்ததாலோ அல்லது வேறு ஏதாவதொரு காரணத்தாலோ ஓரிரு மாதங்கள் தாமதமாக வழங்கப்படலாம். ஊதியம் வரைவு செய்யும்போதுதான் வைப்பு நிதிக்கான சந்தா தொகை பிடித்தம் செய்யப்படும். என்றாலும், ஊதியம் எந்த மாதத்துக்கு உரியதோ அந்த மாதத்திலிருந்தே இந்த சந்தா தொகைக்கு வட்டி கணக்கிடப்படும். இது வருங்கால வைப்பு நிதி வட்டி கணக்கீட்டின் மீதான சிறப்பம்சம்.
 

ஊழியர் பங்களிப்பை ரத்து செய்யலாமா?

‘ரூ.15,000/- ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு, வருங்கால வைப்பு நிதிக்கு சந்தா செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கலாமா’ என்பது தற்போதைய பரிசீலனை. ‘அப்படி ரத்து செய்தால், அந்த குறைந்த சம்பளத்தினர் ரூ.1,800 சதவிகிதத்தை (அதாவது, இன்றைய நிலையில்) கூடுதலாக வீட்டுக்கு எடுத்துச் செல்வர்’ என்பது இந்தப் பரிசீலனைக்கான உபாயம். வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளத்தை உயர்த்துவதற்காக  இந்த நடைமுறை பரிசீலனைக்கு உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால், நடைமுறை சித்தாந்தம் எதிர்மறையாகத்தான் உள்ளது. அதாவது, குறைந்த சம்பளக்காரர்களின் சம்பளமானது அவ்வப்போது அளவு கூடினாலும், விளைவு கூடுவதில்லை என்பதே நிதர்சனம். எனவே, இந்த 1,800 ரூபாயை வீட்டுக்கு எடுத்துச் சென்று விளையப் போவது அதிகமில்லை, ரூ.15,000 சம்பளம் வாங்குகிறவர்களுக்கு!

காணும் பொருள் யாவும் தேவையானதாகத் தோன்றும் கடை வீதியில் கண நேரம் நடந்து சென்றால், ரூ.1,800 அர்த்தமற்று கரைந்து போகலாம். இதைவிட பேரபாயம் ஒன்றும் உண்டு. செல்ஃப் ஃபைனான்சியர்!
வருங்கால வைப்பு நிதியின்  இருப்பில் உள்ள தொகையில் 75% வரை கடன் பெற்றுக்கொள்ளலாம். நீண்ட கால, நிலையான சேமிப்பை இலக்காகக் கொண்டதுதான் வருங்கால வைப்பு நிதி என்றாலும், அவசர பணத் தேவைக்கு அடமானம் ஏதுமின்றி ஆறு மாதத்துக்கு ஒருமுறை கடன் பெற அபயமளிக்கும் செல்ஃப் ஃபைனான்சியர் இந்த வருங்கால வைப்பு நிதிதான். குறைந்த சம்பளத்தினருக்கு வருங்கால வைப்பு நிதியில் விலக்கு அளிக்கப் பட்டால் இந்த செல்ஃப் ஃபைனான்சியர் செத்துப் போய்விடுவார்.

சம்பளத்துக்கு ஏற்ப சந்தா சதவிகிதம்!

இது ஏற்புடைய ஒன்றுதான். ஏனெனில், அகவிலைப்படி (Dearness Allowance) வழங்குவதில் இப்படி ஓர் இரட்டை அணுகுமுறை ஆறாவது சம்பளக்குழு வரை அமலில் இருந்தது. அதாவது, கூடுதல் சம்பளம் பெறுவோருக்கு குறைந்த (சதவிகித) அகவிலைப்படியும், குறைந்த சம்பளத்தினருக்கு கூடுதல் (சதவிகித) அகவிலைப்படியும் தரப்பட்டது. 01.01.1996 முதல் அமலுக்கு வந்த ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைக்குப்பின் அனைவருக்கும் ஒரே சதவிகித அகவிலைப்படி என்றானது.

கூடுதல் சம்பளம் பெறுவோருக்கு வருங்கால வைப்பு நிதியின் சந்தா தொகையில் சதவிகித அளவை அதிகரிப்பதால், அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடாது. ஏனெனில் அவர்கள் ஏனைய சேமிப்பு முறைகளில் செய்யும் முதலீட்டை வருங்கால வைப்பு நிதிக்கே கூடுதல் சந்தா செலுத்தி பிரிவு 80சி-யின் கீழ் அனுமதிக்கப்படும் வரிக்கழிவை பெற்றுக் கொள்ளலாம்.

ஆனால், குறைந்தபட்ச ஊதியமான ரூ.15,000 வரை சம்பளம் பெறுபவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி பங்களிப்பில் இருந்து விலக்கு அளிக்க முற்பட்டால், சேமிக்கவும் சேமிப்பில் கடன் பெறவும் அவர்களுக்கு உள்ள ஒரே வழியும் அடைபட்டுப் போகும். சந்தா தொகையை ரத்து செய்து வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளத்தை அதிகரிக்கலாம் என்கிற கொள்கை முடிவு ரூ.15,000 சம்பளம் பெறும் ஊதியத்தினரை பொறுத்தமட்டில் பாதகத்தையே ஏற்படுத்தும். குறைந்த சம்பளம் வாங்குகிற அரசு ஊழியர்களை நோகடிப்பதில் என்னதான் இன்பமோ!


ப.முகைதீன் சேக்தாவுது

EMIS வலை தளம் மேம்படுத்தப்படவேண்டி தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் விண்ணப்பம்

e-mail    கோரிக்கை மனு அனுப்பப்பட்டது

RMSA - 3 DAYS TRAINING FOR BT TEACHERS - DIR PROC

CM CELL - விநாயக மிஷன் பல்கலை கழக B.Ed பட்டம் தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக B.Ed பட்டத்திற்கு இணையானதா? பள்ளிக்கல்வி விளக்கம்.


SIF 2017-18 : Child Friendly Toilet அமைப்பதற்கான பள்ளிகளைத் தேர்வு செய்தல் - தொ.க.இ செயல்முறைகள்.

மாநிலப் புதுமை நிதி திட்டத்தின்கீழ் 2017-18-ம் கல்வி ஆண்டிற்கான குழந்தை நேயக் கழிவறைகள் அமைப்பதற்கான பள்ளிகளைத் தேர்வு செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு

PBL-ற்கான நடுநிலைப் பள்ளிகள் தெரிவு செய்தல் - தொ.க.இ செயல்முறைகள்!!

தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள் திட்டத்தின்கீழ் 2017-18-ம் கல்வி ஆண்டிற்கான செயல்திட்ட வழிக்கற்றலுக்கு, திறன்மிகு அறிவியல் ஆசிரியர்களுடைய நடுநிலைப் பள்ளிகளைத் தேர்வு செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு!!

முதல் வகுப்பு.... யானைவருது யானை வருது பாடல்


இந்திய குடியுரிமை பணியில் சேர்வதற்கான போட்டித்தேர்வில் கலந்துகொள்வதற்கு மீனவர்களின் வாரிசுகள் தேர்வு செய்யப்பட்டு அகில இந்திய குடிமை பணிகளுக்கான பயிற்சி நிலையம் மூலம் அளிக்கப்படும் சிறப்பு பயிற்சி வகுப்பிற்கு அனுமதி கோரும் விண்ணப்ப படிவம்!!

NAS EXAM OMR SHEET AVAILABLE

G.O No. 293 Dt: October 05, 2017-MEDICAL AID – New Health Insurance Scheme, 2014 for Pensioners (including spouse) / Family Pensioners – List of Approved Hospitals – Addition of Hospitals and inclusion of additional Specialities in the hospitals – Orders – Issued

G.O No. 293 Dt: October 05, 2017-MEDICAL AID – New Health Insurance Scheme, 2014 for Pensioners (including spouse) / Family Pensioners – List of Approved Hospitals – Addition of Hospitals and inclusion of additional Specialities in the hospitals – Orders – Issued

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் அறிவிப்பு


2018 Government Holidays

7வது ஊதியக்குழு பரிந்துரை அமலுக்கு வருமா? - நாளை மறுநாள் தெரியும்! தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள்.

⭐நாளை மறுநாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.  
⭐ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒரு பகுதியினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
⭐இதையடுத்து வழக்கு தொடருவும் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இதைதொடர்ந்து, 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த அறிக்கையை  நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார். 

DSE PROCEEDINGS-அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களைக் கொண்டு நியமனம் செய்தல் குறித்து- பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்

நாமக்கல் மாவட்ட தமிழ் நாடு ஆசிரியர் செயற்குழு கூட்டம்- அகவிலைப்படியை உடனே அறிவிக்க அரசுக்கு கோரிக்கை


தூய்மை பள்ளி' விருது : அக்., 31 வரை அவகாசம்

மத்திய அரசின், 'துாய்மை பள்ளி' திட்டத்துக்கு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் விண்ணப்பிக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. இத்திட்டத்தில், துாய்மையை பராமரிக்கும் பள்ளிகளுக்கு விருதுகள்
வழங்கப்படும். நடப்பு கல்வியாண்டில், துாய்மை பள்ளி விருது பெற, செப்., 1ல், 'ஆன் - லைன்' பதிவு துவங்கியது. அக்., 31 வரை, பதிவு செய்யலாம் என,அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, 'அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், துாய்மை பள்ளி விருதுக்கு, புகைப்பட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்' என, அனைவருக்கும் கல்வி இயக்கக திட்ட இயக்குனர், நந்தகுமார் அறிவுறுத்தி உள்ளார்.

521 அரசுப் பள்ளிகட்டிடங்கள் இடிப்பதற்கு இயக்குனர் மற்றும் கலெக்டர்களிடம் பரிந்துரைக்கடிதம்!!

பள்ளி,கல்லூரிகளுக்கு ஓரு வாரம் விடுமுறை அளித்து டெங்கு தடுப்பு நடவடிக்கைக்கு கோரிக்கை-டாக்டர்கள் வலியுறுத்தல்!!!

ஆசிரியர்,அமைச்சு பணியாளர்களின் மதிப்பெண் சான்று உண்மைத்தன்மையை ஆன்லைனில் சரி பார்க்கலாம்: அரசு தேர்வுகள் துறை உத்தரவு

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர்களே சரி பார்த்துக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் ஆசிரியர் பணிக்கு சேர்ந்தவர்கள் எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 மதிப்பெண் பட்டியல் போலியாக அளித்தது கடந்த 2004ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. எனவே 2004ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்கள் அனைவருக்கும் அவர்களது சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை பரிசோதிப்பதற்காக அரசுத் தேர்வுகள் துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.

முதல் வகுப்பு..... வண்ண வண்ணப்பூக்கள் பாடல்

Click Here

வாக்காளர் சேர்ப்பு இன்று சிறப்பு முகாம்

தமிழகத்தில் உள்ள, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், இன்று, வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.அடுத்த ஆண்டு, ஜன., 1ம் தேதியை, தகுதி நாளாக கொண்டு, வாக்காளர்பட்டியல் திருத்தப் பணி, தமிழகம் முழுவதும், இம்மாதம் துவக்கப்பட்டது.

வாக்காளர்களுக்காக, தமிழகத்தில் உள்ள, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், இன்று, வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இலவச, 'செட் - டாப் பாக்ஸ்' ரூ.1,200க்கு விற்பனை

தமிழக அரசு, இலவசமாக வழங்குவதாக அறிவித்த, 'செட் - டாப் பாக்ஸ்'களை, சில ஆப்பரேட்டர்கள், 500 - 1,200 ரூபாய் வரை விற்பதாக, வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர்.
'தமிழகத்தில், 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில் கேபிள், 'டிவி' ஒளிபரப்புக்காக, 'செட் - டாப் பாக்ஸ்' இலவசமாக வழங்கப்படும்' என, சட்டசபை தேர்தல் அறிக்கையில், ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

பிரதமர் புகைப்படங்களை பள்ளியில் வைக்க உத்தரவு

'பள்ளிகளில், ஜனாதிபதி பிரதமர் புகைப்படங்களை வைத்திருக்க வேண்டும்' என கோவா அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவாவில், முதல்வர் மனோகர் பரீக்கர் தலைமையிலான பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. 
பனாஜியில் மாநில கல்வித்துறை உயரதிகாரிஒருவர் கூறியதாவது:

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் பள்ளிகளில், மகாத்மா காந்தி, அம்பேத்கர், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரது புகைப்படங்களை கண்டிப்பாக வைத்திருக்கும் படி உத்தர விட்டுள்ளது. இவர்களை பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் -2018-அக்டோபர் 3 முதல் அக்டோபர் 31 2017 வரை நடைபெறுகிறது


web stats

web stats