rp

Blogging Tips 2017

சத்துணவு பணியாளர்களின் வேலை நேரம்,மற்றும் சனிக்கிழமைகளில் சத்துணவு வழங்குவது சார்பான RTI கடிதம்

ஏ. பி. ஜே. அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு !

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர்,  ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.

பிறப்பு: அக்டோபர் 15, 1931

மரணம்: ஜூலை 27, 2015

இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)

பிறப்பு:

1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.

மாணவர்களுக்கு கூற அப்துல் கலாம் பற்றி 50 சுவாரசிய தகவல்கள்

1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.

2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.

இனி தமிழில் 'இக்னோ' பல்கலை படிப்புகள் : துணைவேந்தர் தகவல்

மதுரை இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலையின் (இக்னோ) மண்டல மையத்தில் தென்மண்டல இயக்குனர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது.  இதில் பல்கலையின் துணைவேந்தர் ரவிந்தரகுமார் பங்கேற்றார். அவர் கூறியதாவது: 

இனி தமிழில் 'இக்னோ' பல்கலை படிப்புகள் : துணைவேந்தர் தகவல்

மதுரை இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலையின் (இக்னோ) மண்டல மையத்தில் தென்மண்டல இயக்குனர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது.  இதில் பல்கலையின் துணைவேந்தர் ரவிந்தரகுமார் பங்கேற்றார். அவர் கூறியதாவது: 

பணியிட மாறுதல் கிடைத்தும் பயனில்லை : விடுவிப்பு உத்தரவு கிடைக்காமல் காத்திருக்கும் 5 மாவட்ட ஆசிரியர்கள்

தமிழக அரசுப் தொடக்கப் பள்ளி, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பணியிட மாறுதல் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பணியிட மாறுதல் கவுன்சலிங் ஆகஸ்ட் மாதம் நடந்தது. தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 21ம் தேதி கவுன்சலிங் நடந்தது. ஆன்லைன் மூலம் நடந்த இந்த கவுன்சலிங்கில் பங்கேற்று விரும்பிய  இடங்களுக்கு மாறுதல் கேட்ட ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 22ம் தேதியே பணியிட மாறுதல் உத்தரவுகள் வழங்கப்பட்டன.

ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை கண்காணிக்க... 'மொபைல் ஆப்!':தலைமை ஆசிரியர்கள் பயன்படுத்த முடிவு

அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை கண்காணிக்க, 'மொபைல் போன் ஆப்' கொண்டு வரப்பட உள்ளது. ஒவ்வொரு தலைமை ஆசிரியரும், தினமும், ஏதாவது ஒரு வகுப்பில், மாணவர்களுடன் அமர்ந்து, ஆசிரியர் பாடம் நடத்துவதை கண்காணிக்க வேண்டும். மாணவர்களின் செயல்பாடு, ஆர்வம் ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும். பின், அது பற்றிய குறிப்புகளை, அதற்கான பதிவேட்டில் எழுத வேண்டும். 

இன்று உலக கை கழுவும் தினம்

"சுத்தம் சுகம் தரும், சுகாதாரம் நாட்டைக் காக்கும்" என்பது நம் முன்னோர்களின் வாக்கு. நோயில்லா மக்களைக் கொண்ட நாடே வல்லரசாகும். ஒரு நாட்டின் ஆரோக்கியமே அந்நாட்டின் வளம். அதனால்தான் "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்கிறது பழமொழி.

செல்வங்களில் எல்லாம் முதன்மையான செல்வம்நோயற்ற வாழ்வுதான்.

அப்துல் கலாம் அவர்கள் பிறந்த நாளில் ஆசிரியர்கள், மாணவர்கள் எடுக்க வேண்டிய உறுதி மொழிகள்...


easy english writing method-2

தேசியக்கொடி மற்றும் சின்னங்கள் பயன்ப்டுத்துவது குறித்தான அர்சின் வழிகாட்டு நெரிமுறைகளை கடைபிடிக்க தொடக்கக்கல்வி இணை இயக்குனர் சுற்றறிக்கை


click here to download full Detailed Letter



தபால் நிலையங்களில் மானிய விலையில் பருப்பு விற்பனை: மத்திய அரசு முடிவு

தீபாவளி பண்டிகை நெருங்குவதால், பொதுமக்களுக்கு பற்றாக்குறை இல்லாமல் பருப்புவகைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, மத்திய அரசு புதிய முடிவை எடுத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் மூலம் மானிய விலையில் பருப்பு விற்பதே அந்த முடிவு. மத்திய நுகர்வோர் விவகார செயலாளர் ஹேம் பாண்டே தலைமையில்  டெல்லியில் நடைபெற்ற அமைச்சகங்களுக்கிடையிலான குழு கூட்டத்தில்

Tiruvannamalai மாவட்ட DEEO அலுவலக தகவல்.மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க/நடுநிலைப்பள்ளிகளுக்கு 15-10-2016 சனிக்கிழமை தொடக்கக்கல்வி இயக்குநர் உத்திரவின்படி பள்ளி வேலைநாள் ஆகும்.


CCE 2nd TERM WEEKLY SYLLABUS - I std to VIII STD

  • CLICK HERE TO DOWNLOAD CCE II TERM SYLLABUS FOR I TO VIII STD

2016-17 "EMIS UPDATION" பணிகளை 30.10.2016 குள் முடிக்க இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்


RTI - நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விடுப்பில் செல்லும்போது பள்ளியின் பொறுப்புகளை எந்த ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது குறித்த தகவல்


Easy English Writing Method

மாணவர்களின் வருகைப் பதிவு, வீட்டுப் பாட விவரத்தை எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் வசதி: 44 அரசு மாதிரி பள்ளிகளில் விரைவில் அறிமுகம்.

 மாணவர்களின் வருகைப் பதிவு, வீட்டுப் பாடம், கல்வி நிலை ஆகிய விவரங்களை அவர்களின் பெற்றோருக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் வசதி 44 அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி களில் விரைவில் அறிமுகப்படுத் தப்பட ஆர்எம்எஸ்ஏ திட்ட மிட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு விரைவில் புதிய கவர்னர்: மத்திய அரசு முடிவு

தமிழகத்துக்கு பொறுப்பு கவர்னராக மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவை மத்திய அரசு நியமனம் செய்தது. இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு விரைவில் புதிய கவர்னரை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டின் கவர்னராக ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி கே.ரோசய்யா, 2011-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதி முதல் இருந்து வந்தார். 2014-ம் ஆண்டு மத்தியில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்ற பின்னர், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட பல கவர்னர்கள் பதவி விலகினர். சிலர் பதவி விலகுமாறு வைக்கப்பட்டனர். ஆனால் ரோசய்யா, பதவியில் தொடர அனுமதிக்கப்பட்டார்

அரசுப்பள்ளி மாணவியருக்கு கராத்தே : இந்த மாதமே துவங்க உத்தரவு

அரசுப் பள்ளி மாணவியருக்கு, தற்காப்பு கலை பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வளரிளம் பருவத்தில், மாணவியருக்கு தன்னம்பிக்கையை வளர்க்கவும், பாதுகாப்பை பேணும் வகையிலும், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வகையில், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் அரசுப்பள்ளி மாணவியருக்கு, நடப்பாண்டில் இருந்து தற்காப்பு கலை பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகள் தனி அலுவலர்களிடம்... கைமாறுகிறது!மொத்த அதிகாரமும் மாவட்ட ஆட்சியர் வசம் செல்கிறது!!!

உள்ளாட்சி அமைப்புகளில், 24ம் தேதிக்கு பிறகு, தனி அலுவலர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதால், அனைத்து அதிகாரங்கள், மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்து, தனி அலுவலர்களிடம் வழங்கப்படவுள்ளது. இதனால், உள்ளாட்சி அமைப்பின் ஒட்டுமொத்த கண்காணிப்பும் மாவட்ட ஆட்சியர் வசம் செல்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் அனைத்து தொடக்கப் பள்ளிகளும் வரும் oct 15 சனிக்கிழமை வேலை நாளாக அறிவிப்பு

15.10.2016(சனிக்கிழமை) பள்ளி வேலை நாள் (வேலூர் மாவட்டம்)


SSLC Special Supplementary Exam June 2016 - Mark Certificate Distribution - Information

15.10.2016(சனிக்கிழமை) பள்ளி வேலை நாள் (கோயமுத்தூர் வருவாய் மாவட்டம்)


RTI - Aided School Deployment விதிகள்-

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் தேதி அடுத்தவாரம் அறிவிப்பு.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

"பள்ளிக்கல்வி" -15.10.2016-சனிக்கிழமை பள்ளி வேலை நாள்-திருவண்ணாமலை மாவட்ட CEO


தொடக்கக்கல்வி செயல்முறைகள்- நாள்:13/10/16-பாரத ரத்னா APJ அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளான அக்டோபர் 15-ஐ இளைஞர் எழுச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாடுதல் சார்பு


நூல்- தமிழ்நாட்டு ஆசிரியர் இயக்க வரலாறு -ஆசிரியர் செ.முத்துசாமி.இந்நூலுக்கு சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களின் அணிந்துரை

எளீய முறையில் வாய்ப்பாடு கற்பித்தல் வீடியோ


ரூ.130க்கு 100 சேனல்கள்: டிராய் பரிந்துரை

துடில்லி : ரூ.130க்கு 100 சேனல்களை வழங்க வேண்டும் என தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்(டிராய்) பரிந்துரை செய்துள்ளது.

துறை அறிமுகம்: ஆன்லைன் ஆசிரியர் ஆகலாமே!

அடுத்த தலைமுறையை வளர்த்தெடுக்கும் உன்னதப் பணியை ஏற்றுக்கொள்பவர்கள் ஆசிரியர்கள். ‘வரலாற்றைப் படைப்பவர் ஆசிரியர்தான்’ என்றார் ‘அறிவியல் புனைகதைகளின் தந்தை’ என்றழைக்கப்படும் எச்.ஜி. வெல்ஸ். எப்போதுமே ஆசிரியர்களுக்கு உலக அளவில் தனி மதிப்புண்டு. இப்படியெல்லாம் ஆசிரியர் பணியை எப்போதுமே சிலாகித்தாலும் பெரும்பாலான சிறந்த மாணவர்கள் ஆசிரியர்கள் ஆக விரும்புவதில்லை. பள்ளி, கல்லூரிப் படிப்பில் உச்சபட்ச மதிப்பெண்களும் தனித்திறமையும் வெளிப்படுத்தும் மாணவர்களில் எத்தனை பேர் ஆசிரியராகக் கனவு காண்கிறார்கள்? தலைசிறந்த பொறியாளர்களும் மருத்துவர்களும் வியாபாரிகளும் அரசியல்வாதிகளும் சமூக ஆர்வலர்களும் எப்படி அவசியமோ அதே போல திறமைவாய்ந்த ஆசிரியர்கள் இன்றைய முக்கியத் தேவைகளில் ஒன்று.

இரண்டாம் பருவம் -- ஆங்கில வார்த்தைகள்

2nd Term 6th std English              2nd Term 5th std English

2nd Term 7th std English             2nd term 4th std English

2nd Term 8th std English              2nd Term 3rd std English


செல்போன் எண் இலக்கம் இனி 11 ஆக மாறும்!

நாடு முழுவதும் செல்பேசி பயன்பாடு அதிகரித்துள்ளது. மேலும் செல்பேசி மூலம் அரசிடம் இருந்து பொதுமக்களுக்கு தேவைப்படும் சேவைகளுக்கான விண்ணப்பங்கள் செல்பேசி மூலம் பெறமுடிகிறது. மேலும் பேருந்துச் சீட்டு, தங்குமிட முன்பதிவு, திரையரங்கச் சீட்டு,செல்பேசிகளுக்கான பயன்பாட்டு கட்டண முறை, உணவு விற்பனை என அனைத்தையும் மக்கள் செல்பேசிமூலம் பயன்படுத்துகின்றனர். இந்த செல்பேசிகளுக்கு நாடுமுழுவதும் 10 இலக்க எண்கள் வழங்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பத்தில் புதிய கற்பித்தல் முறை கிராமப்புற மாணவர்கள் ஆர்வம்

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த புதுமை கற்பித்தலுக்கான முறை யில், கிராமப்புற மாணவர்கள் கல்வி பயில துவங்கியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் ஆசிரியர்களுக்கான தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில் நுட்பம் சார்ந்த புதுமை கற்பித்தல் போட்டி நடத்தப்படுகிறது. 

இதில் வெற்றி பெறுபவர்கள், தேசிய அளவிலான, தொழில் நுட்ப கற்பித்தல் தேசிய விருது வழங்கி கவுரவிக்கப்படுவார்கள்.இந்தாண்டு, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த கற்பித்தல் தேசிய விருதுக்கு நாடு முழுக்க இருந்து, 11 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்;

பணியின்போது ஊனம்; மத்திய அரசு ஊழியர் விதிகளில் மாற்றம்

மத்திய அரசு பணியில் இருக்கும் போது ஊனம் ஏற்பட்டால், அந்த ஊழியரை பணியில் இருந்து நீக்குவதோ, பதவி குறைப்போ செய்யக் கூடாது' என, மத்திய அரசு அறிவித்து உள்ளது.

'நெட்' தேர்வுக்கு அக்.17 முதல் விண்ணப்பிக்கலாம்

'நெட்' தேர்வுக்கு அக்.17 முதல் நவ.16 வரை ஆப்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

மொழி மற்றும் கலைப்பிரிவு பாடங்களில் உதவி பேராசிரியர் பணிக்கான 'நெட்' தகுதித்தேர்வை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தி வருகிறது. இத்தேர்வு ஆண்டுக்கு 2 தடவை (ஜுன், டிசம்பர்) நடத்தப்படும்.

விரைவில் புது கல்வி கொள்கை : அமைச்சர் ஆலோசனை

மேம்படுத்தப்பட்ட, புதிய கல்விக் கொள்கையை அறிவிக்க, மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. இதற்காக, இரண்டு உயர்மட்டக் குழுக்களுடன், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு உள்ளார். 

விஐடி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது

சமுதாய சீர்கேடுகளுக்கு கல்விதான் தீர்வு : கவர்னர் சதாசிவம் பேச்சு

மதுரை: ''உயர் கல்வி நிறுவனங்கள் திறன் மேம்பாட்டு கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சமுதாய சீர்கேடுகளுக்கு கல்வி தான் தீர்வு,'' என கேரள கவர்னர் சதாசிவம் வலியுறுத்தினார்.

மதுரையில் அகில இந்திய கிறிஸ்தவ உயர்கல்வி கழக பொன்விழா நிறைவு விழா அமெரிக்கன் கல்லுாரியில் நேற்று நடந்தது. சென்னை கிறிஸ்தவ கல்லுாரி முதல்வர் அலெக்சாண்டர் ஜேசுதாஸ், அமெரிக்கன் கல்லுாரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் வரவேற்றனர்.

இதில் கவர்னர் சதாசிவம் பேசியதாவது: கேரள கவர்னராக பொறுப்பேற்றவுடன் அங்குள்ள 14 பல்கலை துணைவேந்தர்களை அழைத்து தரமான கல்வி அளிப்பது தொடர்பாக ஆலோசித்தேன். இந்தாண்டு முதல் சிறந்த பல்கலைக்கான விருது அறிவிக்கப்பட்டு, மாநில அரசால் 5 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படவுள்ளது. சமுதாய சீர்கேடுகளுக்கு கல்வி தான் தீர்வு. தற்போது திறன் மேம்பாட்டு கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உயர் கல்வியில் பெரிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது. மாணவர்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டால் தான் வேலைவாய்ப்பு கிடைக்கும், என்றார்.

ராஜ்யசபா துணைத் தலைவர் குரியன் பேசியதாவது:அன்றைய காலத்தில் தரமான கல்வியை நோக்கமாக கொண்டு செயல்பட்டன. ஆனால் இன்று வணிக ரீதியாக மாறிவிட்டன. மருத்துவ இடங்கள் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஏலம் விடப்படுகின்றன. சிறுபான்மையினருக்கு அரசு வழங்கும் சலுகைகளை வியாபார நோக்கத்திற்கு பயன்படுத்தக்கூடாது, என்றார்.

வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விஸ்வநாதன், மதுரை பிஷப் அந்தோணி பாப்புசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

பஞ்சப்படி இழுத்தடிப்பு : ஆசிரியர்கள் புலம்பல்

அடிப்படை ஊதியத்தில் இருந்து வழங்கப்படும் அகவிலைப்படி தொகை, மூன்று மாதங்களுக்கு மேலாகியும், வழங்காமல் இழுத்தடிப்பதாக, ஆசிரியர்கள் புலம்புகின்றனர். தமிழகத்தில், 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி பள்ளிகள் உள்ளன.

இதில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, மாதச் சம்பளம் அல்லாமல், போனஸ், பயணப்படி உள்ளிட்ட, சில சலுகைகள் வழங்கப்படும். இதில், அகவிலைப்படியாக, அடிப்படை ஊதியத்தில் இருந்து, குறிப்பிட்ட சதவீத தொகை, ஜூன் மற்றும் ஜனவரி மாதங்களில் வழங்கப்படும். நடப்பு கல்வியாண்டு துவங்கி, நான்கு மாதங்களுக்கு மேலாகியும், அகவிலைப்படி தொகை தராமல் இழுத்தடிப்பதாக, ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

இதுகுறித்து, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் வைக்கும் கோரிக்கை:ஆசிரியர்களுக்கு, தீபாவளி போனஸ் வழங்கப்படுவதில்லை; ஆண்டுக்கு இருமுறை, 6 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும். இந்த தொகையைத் தந்தால், பண்டிகைக்கால செலவுகளுக்கு உதவியாக இருக்கும். இத்தொகையை விரைவில் தர, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

தீபாவளிக்கு முன்பணம் : ஊழியர்கள் எதிர்பார்ப்பு

தீபாவளிக்கு, குறைந்த நாட்களே உள்ளதால், முன்பணத்தை விரைவில் வழங்க வேண்டும் என, போக்குவரத்து தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழக அரசுப் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, தீபாவளி சமயத்தில், 20 நாட்களுக்கு முன்பாக, முன்பணம் வழங்கப்படும்; இது, சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்.

தேவைப்படும் தொழிலாளர்களுக்கு, கோட்டம் மற்றும் கிளை அலுவலகம் மூலம், தொகை வழங்கப்படும். நடப்பாண்டு இதுவரை, அறிவிப்பு வெளியாகவில்லை. முன் பணத்தை, முன்கூட்டியே வழங்கினால் மட்டுமே, கடைசி நேர நெரிசல், விலைவாசி அதிகரிப்பு ஆகியவற்றில் இருந்து தப்ப முடியும் என்பது, தொழிலாளர்களின் கருத்தாக உள்ளது. கோவை கோட்ட, ஏ.ஐ.டி.யு.சி., சங்க பொதுச் செயலர் சண்முகம் கூறுகையில், ''முன்பணத்தை முன்கூட்டியே வழங்குவதால், நிறைய தொழிலாளர்கள், பண்டிகையை சிரமம் இன்றி கொண்டாட முடிகிறது. இத்தொகையை விரைவில் வழங்க வேண்டும்,'' என்றார். 

அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் : கல்வி இயக்குநர் உத்தரவு

தொடக்க கல்வி இயக்குனர், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது: ஆதார் அட்டை பெற இதுவரை பதிவு செய்யாத மாணவர்களை அந்தந்த பள்ளிகளுக்கு அருகில் நடந்துவரும் சிறப்பு முகாம்களுக்கு அழைத்துச் சென்று ஆதார் அட்டை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மூலமாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். தங்களது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் ஆதார் அட்டை பெற்றுவிட்டார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்தப் பணியின் முன்னேற்ற அறிக்கையினை, தலைமை ஆசிரியர்களிடம் இருந்து பெற்று, தொடக்க கல்வி அதிகாரிகள் தொகுத்து வைக்க வேண்டும். இந்தப் பணி மிக முக்கியத்துவம் வாய்ந்ததால், இதில் தனி கவனம் செலுத்தி, மாவட்டங்களில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் அட்டை பெற்று 100 சதவீதம் இலக்கை அடைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

G.O No. 103 Dt: April 01, 2013 GENERAL PROVI DENT FUND – Withdrawal from the General Provident Fund – Maximum limit – Amendments to rule 15-B of General Provident Fund (Tamil Nadu) Rules – Issued – Notified GPFல் இருந்து 9 இலட்சம் வரை எடுத்துக்கொள்ளலாம்


நெட்' தேர்வு 2017 | விண்ணப்பிக்க நவ.16 கடைசி நாள். விண்ணப்பத்தை அக்டோபர் 17 முதல் ஆன்-லைனில் சமர்ப்பிக்கலாம்.தேர்வு நாள் 22-01-2017.

நெட்' தேர்வு அறிவிப்பு: விண்ணப்பிக்க நவ.16 கடைசி நாள்.
Online Application Form Submission: 17:10:2016 to 16:11:2016 | Last date of submission of Fee through online generated Bank Challan: 17:11:2016 | Correction in Particulars of application form on the website: 22:11:2016 to 29:11:2016 | NET Jan 2017 Exam Date : 22-01-2017.

பிளஸ் 2 தேர்வு எழுதுவோர் பட்டியல், தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வு துறை உத்தரவு

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பில் படிக்கும் மாணவர்கள் பற்றிய விவரங்களை கணினியில் பதிவு செய்து பட்டியல் தயாரிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தசரா விடுமுறைக்கு பிறகு, வரும் 13ம் தேதி பள்ளிகள் வழக்கம் போல செயல்படும். அடுத்த  ஆண்டு மார்ச் மாதம் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் தேர்வுத் துறை இறங்கியுள்ளது. இதையடுத்து, அனைத்து அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர் பற்றிய விவரங்களை திரட்டுவதற்கான ஏற்பாடுகளை தேர்வுத்துறை செய்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு எழுதுவோரின் பெயர், பெற்றோர் பெயர்,

போக முடியாத தூரத்தில் 'வாங்க பழகலாம்' திட்டம்

எங்க ஊருக்கு வாங்க... பழகலாம்' திட்டத்தில், நீண்ட துார பள்ளிகளை இணைப்பதால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. செயல்வழி கற்றல் திட்டத்தின் ஒரு பகுதியாக, அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், இரு பள்ளி மாணவர்களை பழகவிட்டு, படிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 
ஒரு கிராமத்து பள்ளி மற்றும் நகர பள்ளியை இணைத்து, ஒருவர் பள்ளிக்கு ஒருவர் சென்று, இரு பள்ளி மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்தப்படும். இத்திட்டத்தில் சேர, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளும் ஆர்வமாக முன்வந்தன. ஆனால், 30 கி.மீ.,க்கு மேல் துாரத்தில் உள்ள, இரு பள்ளிகளை இணைத்து, எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள் உத்தரவிட்டதால், பல பள்ளிகள், திட்டத்தில் இருந்து விலகி வருகின்றன.
இதுகுறித்து, ஆசிரியர் கள் சிலர் கூறியதாவது: 'வாங்க பழகலாம்' திட்டத்தில், எட்டாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். ஒவ்வொரு பள்ளியும், முதலில் இரு நாட்களும், பின், ஒரு நாள் வீதம் ஆறு முறையும், மற்ற பள்ளிகளுக்கு சென்று, அங்கு உள்ள மாணவ, மாணவியருடன், அந்த பகுதியை சுற்றி பார்க்க வேண்டும். இதனால், கிராமப்புற மாணவர்கள், நகரங்களையும்; நகர்ப்புற மாணவர்கள், கிராமங்களையும் அறிந்து கொள்ள முடியும். 
இதில், நீண்ட துாரத்தில் உள்ள பள்ளிகளை இணைப்பதால், போக்குவரத்து மற்றும் உணவுக்கு அதிக செலவாகும். நீண்ட துார பயணத்தால், மாணவ, மாணவியரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும். குறைந்த துாரத்தில் உள்ள நகர பள்ளிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்; அருகில் இல்லாவிட்டால் மட்டும், தொலைவில் உள்ளபள்ளிகளை இணைக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர். 

நாளை விடுப்பு எடுக்க அரசு ஊழியர்களுக்கு தடை

பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதால், அரசு ஊழியர்கள், நாளை விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறுடன், ஆயுத பூஜை, விஜயதசமி மொகரம், பண்டிகை முன்னிட்டு, அரசுஊழியர்களுக்கு, இன்று வரைஐந்து நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், அரசு அலுவலகங்களில், பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே, நாளையும், நாளைமறுநாளும், அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்க, அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

இதுகுறித்து, அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த மாத இறுதியில், உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதனால், அரசு நலத் திட்ட பணிகள் நிறுத்தப்பட்டன. இம்மாதம், 17, 19ல், நடக்கவிருந்த தேர்தலுக்கு, உயர் நீதிமன்றம் தடை விதித்ததால், நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டன. இதனால், திட்ட பணிகள் முழு வீச்சில் துவங்க உள்ளன.

இந்த சூழலில், ஆயுத பூஜை, விஜயதசமி, மொகரம் என, தொடர்ந்து விடுமுறை இருந்ததால், பலர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். அவர்களில் பலர், வியாழன், வெள்ளியும் விடுப்பு எடுத்து கொள்வதாக, தொலைபேசியில் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே, காலி பணியிடங்களால், ஒருவரேபலரது வேலையை செய்யவேண்டியுள்ளது. வியாழன், வெள்ளி விடுப்பு எடுத்தால், அரசு உதவியை எதிர்பார்த்து, அலுவலகம் வரும் மக்கள் பாதிக்கப்படுவர். எனவே, இரு நாட்களும் விடுப்பு எடுக்கக்கூடாது; கண்டிப்பாக அலுவலகம் வர வேண்டும் என, ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமருக்கு விடுமுறையே கிடையாது: மத்திய அரசு தகவல்

.  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு, 'பிரதமர் எப்போதும் பணியில்தான் இருப்பார். அவருக்கு விடுமுறையே கிடையாது' என மத்திய அரசு பதிலளித்துள்ளது. 
  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பிரதமரின் விடுமுறைக்கான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் என்னென்ன என கோரப்பட்டது. மேலும் முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், அடல் பிஹாரி வாஜ்பாய், தேவகவுடா, ஐ.கே. குஜ்ரால், பி.வி. நரசிம்மராவ், சந்திரசேகர், வி.பி. சிங், ராஜீவ் காந்தி ஆகியோர் எடுத்த விடுப்புகளின் விவரம் குறித்தும் கேட்கப்பட்டது. இதற்கு பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது. 

முதல்வரின் இலாகாக்கள் அனைத்தும் நிதி அமைச்சருக்கு மாற்றப்பட்டது..... ஆளுநர் அறிவிப்பு.

Flash news : முதல்வர் ஜெயலலிதா வகித்து வந்த இலாக்காக்ககளை நிதியமைச்சர் ஓபிஎஸ் கவனிப்பார்: ஆளுநர் மாளிகை அறிவிப்பு

முதல்வர் ஜெயலலிதா வகித்து வந்த இலாக்காக்ககளை நிதியமைச்சர் ஓபிஎஸ் கவனிப்பார் என்று ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.  
ஜெயலலிதா வகித்து வந்த பொது நிர்வாகம், உள்துறை உள்ளிட்ட துறைகளை ஓ.பன்னீர் செல்வம் கனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பில், ''முதல்வர் ஜெயலலிதா வசம் உள்ள பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை இலாகாக்கள் நிதியமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் ஆலோசனையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டங்களுக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார்.

இலாகா இல்லாமல், ஜெயலலிதா தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிப்பார். முதல்வர் ஜெயலலிதா நலம் பெற்று திரும்பும் வரை இந்த ஏற்பாடு தொடரும்'' என்று அறிவித்துள்ளார்.

ENGLISH SONGS-HOOT HOOT


ENGLISH SONGS-PHONETICS RHYMES12345


ENGLISH SONGS LITTLE DROPS OF WATER


ENGLISH SONGS-VOWELS OF ALPHAPETS



'ஆல் பாஸ்' திட்டம் ரத்து? : அக்., 25ல் ஆலோசனை

எட்டாம் வகுப்பு வரையிலான, 'ஆல் பாஸ்' திட்டத்தை மாற்றி அமைப்பது குறித்து, வரும், 25ல், டில்லியில், மாநில கல்வித்துறை அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட உள்ளது

பொம்மலாட்டம் நடத்தி பாடம்; ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டம்!!

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பொம்மலாட்டம் வாயிலாக, எளிய முறையில் கதை சொல்லி, கற்பிப்பது குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்கம்

பிஎஸ்சி (அக்ரி) படிப்பு - அட்மிஷனுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வேளாண்துறை கல்லூரிகளின் மாணவர்கள் சேர்க்கைக்கான கடைசித் தேதி
ஆகஸ்ட் 3௦-ஆம் தேதியோடு நிறைவடைந்து விட்டது.

பி.எட். கல்லூரிகளுக்கான வழிகாட்டுதலில் மாற்றங்கள் செய்ய என்.சி.டி.இ. முடிவு

ஆசிரியர் கல்வியியல் (பி.எட்.) கல்லூரிகளுக்கான -2014 வழிகாட்டுதலில் மாற்றங்களைக் கொண்டுவர தேசிய ஆசிரியர் கல்வியியல் கல்விக் கவுன்சில் (என்.சி.டி.இ.) முடிவு செய்துள்ளது.
இதற்காக பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துக்களையும், பரிந்துரைகளையும் என்.சி.டி.இ. வரவேற்றுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டுதலை என்.சி.டி.இ. கடந்த 2014 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது.

மொபைல் போனில் பாட்டு கேட்ட ஆசிரியர்கள் : கல்வி துறை 'நோட்டீஸ்.

அரசு பள்ளிகளில், மொபைல் போனில் பாட்டு கேட்ட தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, கல்வித் துறை, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

'அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், வகுப்பு நேரத்தின் போது, ஆசிரியர்கள் மொபைல்போன் பயன்படுத்தக் கூடாது; மொபைல் போன் எடுத்து வந்தாலும், தலைமை ஆசிரியர்களிடம் கொடுத்து விட வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால், பல அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள், வகுப்பறைகளில், மொபைல் போன் பயன்படுத்துவதும், அதன் மூலம் பாட்டு கேட்பது, 'வாட்ஸ் ஆப்'பில் சாட்டிங் செய்வது என, பொழுதை கழிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

பணிக்கு செல்லாமல் 'ஓபி' அடிக்கும் சங்க நிர்வாகிகள் : அதிரடி ஆய்வு நடத்த அதிகாரிகள் திட்டம்.

அரசு பள்ளிகளில், பணிக்கு செல்லாமல், 'ஓபி' அடிக்கும் சங்க நிர்வாகிகள் பட்டியல் தயாரிக்க, கல்வித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அவர்கள் பணியாற்றும் பள்ளிகளில், திடீர் ஆய்வும் நடத்தப்பட உள்ளது.அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஐந்து லட்சம் ஆசிரியர்கள் சார்பில், 30க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்கங்கள் உள்ளன. அதிக செல்வாக்கு : வருவாய் துறை ஊழியர் சங்கங்களைப் போல, ஆசிரியர் சங்கங்களும் வலுவாக உள்ளன. இந்த சங்கங்கள் நினைத்தால், பள்ளிகளை இயக்கவும், மூடவும் முடியும் என்ற நிலை உள்ளது. ஆசிரியர்களுக்கான இடமாறுதல்,

சிறப்பு ஆசிரியர் தொழில்நுட்ப தேர்வு : 30 ஆண்டு கால 'சிலபஸ்' மாற்றம்.

சிறப்பு ஆசிரியர்களுக்கான தொழில்நுட்ப தேர்வில், 30 ஆண்டு கால பழமையான பாடத்திட்டம், வரும் கல்வி ஆண்டில் மாற்றப்படுகிறது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், கலை, ஓவியம், தையல், இசை, கணினி அறிவியல், கைவினை, தோட்டக்கலை உள்ளிட்ட பாடங்களுக்கு, சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அரசு பள்ளிகளில், 16 ஆயிரம் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களும், 5,000த்துக்கும் மேற்பட்ட நிரந்தர ஆசிரியர்களும் உள்ளனர். இதில் சேர, பிளஸ் 2 முடித்து, அரசு தேர்வுத் துறை நடத்தும், தொழில்நுட்ப தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பின், மாநில கல்வியில் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும், டி.டி.சி.,

SC/ST அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு வருமானச் சான்று தொகை கணக்கிடும் போது DA மற்றும் HRA கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது என்பதற்கான செயல்முறை கடிதம்*

உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போகுமா?

தமிழகத்தில், வட கிழக்கு பருவமழை துவங்கவுள்ளது. இதனால்,உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போகும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை, 17, 19ம் தேதிகளில் நடத்த, மாநில தேர்தல் கமிஷன் முடிவு செய்தது; போட்டியிட, 4.97 லட்சம் பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆனால், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு,சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. 

EMIS COMMON POLE DECLARATION REPORT

OCTOBER & NOVEMBER TRAINING SCHEDULE


  • 22-10-16 CRC for Primary & Upper Primary
  • 24-10-16--BRC Level Tamil Training for Upper Primary Teachers only

  • 05-11-16-- Primary CRC

  • 07-11-16 & 08-11-16 2days BRC level Science Training for Primary Teachers only

  • 12-11-16 -- CRC for Upper Primary

அரசின் கொள்கையை விமர்சித்தால் ஒழுங்கு நடவடிக்கை... பாயும்!: ஊழியர் சங்கங்களுக்கு மத்திய அமைச்சகம் கடும் எச்சரிக்கை

'மத்திய அரசையோ, அதன் கொள்கை களையோ விமர்சித்தால், அரசு ஊழியர் சங்கங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என,மத்திய அரசு எச்சரித்துள்ளது.

ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை செயல்படுத்துவதற் கான மென்பொருளை தயாரிக்க, ஜி.எஸ்.டி.என்., என்றழைக்கப்படும், சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க் என்ற தனியார் நிறுவனம் அமைக் கப்பட்டு உள்ளது.

CPS MISSING CREDIT


  •  வலைதளத்தில்
  • http://218.248.44.123/auto_cps/public என்ற இணையப் பக்கத்தில் 
  • உங்களது  CPS கணக்கை லாக்இன் செய்தால் தற்போது இடது பக்கத்தில் புதிய ஆப்சனாக மிஸ்சிங் கிரிடிட் (MISSING CREDIT) உள்ளதை கிளிக் செய்தால் 2015-2016 ல் உங்களது கணக்கில் உள்ள மிஸ்சிங் கிரிடிட் தொகை மற்றும் டோக்கன் நம்பருடன் வரும்.
  • அந்த CPS பிடித்தம் செய்த தொகை சரியானதாக இருந்தால் அக்ரி 
  • ( AGREE ) புள்ளியை கிளிக் செய்யவும்.
  • தொகை தவறானதாக இருந்தால் டிஸ்அக்ரி
  • (DIS AGREE) என்று கிளிக் செய்யவும்.
  • உங்களின் DDO மாற்றம் இருப்பின் அலுவலகத்தில் தெரியப் படுத்தவும்.

"ஸ்பீடு' முக்கியம் ,ஆதார் பதிவிட்டால் மட்டுமே "ஸ்மார்ட்' கார்டு வரும் !!!

"ஸ்பீடு' முக்கியம்!ஆதார் பதிவிட்டால் மட்டுமே "ஸ்மார்ட்' கார்டு வரும்:வரும், 31ம் தேதிக்குள் "ஸ்கேன்' செய்ய அவகாசம்!!!

ஆதார் விவரங்களை பதிவு செய்த கார்டுதாரர்களுக்கு மட்டுமே,"ஸ்மார்ட்' கார்டு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்; வரும், 31க்குள், ஆதார் "ஸ்கேன்' செய்து கொள்ளும்படி, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சர்ச்சைக்குரிய பள்ளிகளின் தேர்வு மையம் ரத்து:தேர்வு துறையின் புதிய களையெடுப்பு.

பிளஸ் 2 தேர்வில் சர்ச்சைக்குள்ளான பள்ளிகளின் தேர்வு மையங்களை ரத்து செய்ய, அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில், அரசு தேர்வுத்துறை மூலம், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், ஒவ்வொரு ஆண்டும், 18 லட்சம் பேர் வரை பங்கேற்கின்றனர். தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கட்டுப்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் புதுப்புது கட்டுப்பாடுகளை தேர்வுத்துறை விதிக்கிறது; இருப்பினும்,

அக்.12-ம் தேதி மொகரம்: தமிழ்நாடு தலைமை காஜி அறிவிப்பு

அக்.12-ம் தேதி மொகரம்: தமிழ்நாடு தலைமை காஜி அறிவிப்பு--தமிழ்நாட்டில் அக்டோபர் 12-ம் தேதி மொகரம் கடைப்பிடிக்கப்படும் என மாநில தலைமை காஜி சலாஹுதீன் முஹம்மது அய்யூப் அறிவித்துள்ளார்.
கர்பாலா போரில் முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி கொல்லப்பட்டதை நினைவுகூர்ந்து ஷியா பிரிவு முஸ்லிம்களால் துக்க தினமாக மொகரம் அனுசரிக்கப்படுகிறது.

web stats

web stats