இரண்டாம் பருவ பாடப்புத்தகம், நோட்டு, யூனிபார்ம் உள்ளிட்டவைகளை எடுத்துச்செல்ல வரும், தலைமை ஆசிரியர்களிடம், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், கட்டாய வசூலில் இறங்கியுள்ளதால், கடும் அதிருப்தி நிலவுகிறது.
சேலம் மாவட்டத்தில், 1, 111 அரசு மற்றும் நிதியுதவி பெறும் துவக்கப்பள்ளிகளும், 378 நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. இவற்றில், படிக்கும் மாணவ, மாணவியருக்கு, முதல்பருவ தேர்வு முடிந்து, விடுமுறை விடப்பட்டுள்ளது. இரண்டாம் பருவ வகுப்பு, அக்., 5ம் தேதி துவங்குகின்றன. பள்ளி திறக்கும் நாளன்று, விலையில்லா பாடப்புத்தகம், நோட்டு, யூனிபார்ம், கிரையான்ஸ் ஆகியவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அந்தந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களை, பள்ளி தலைமை ஆசிரியர்கள், செப்., 29ம் தேதியன்று வந்து சேகரித்து செல்ல உத்தரவிட்டுள்ளது. பொருட்களை எடுக்க வரும் தலைமை ஆசிரியர்கள், 100 ரூபாய் முதல், 200 ரூபாய் வரை, உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் கொடுத்து செல்ல வேண்டும் என, கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பெயர் கூற விரும்பாத ஆசிரியர் கூறியதாவது: சேலம் ஜங்சனில் இருந்து, உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்துக்கு,