தமிழக அரசின் பள்ளிக் கல்விப் பணியில் 11 மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த 8-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய இந்த தேர்வினை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிஎட் பட்டதாரிகள் எழுதினர்.
இந்நிலையில், டிஇஓ தேர்வுக் கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் (www.tnpsc.gov.in) புதன்கிழமை வெளியிடப்பட்டது.
இந்த விடைகள் தொடர்பாக ஏதேனும் விளக்கம் அளிக்க விரும்பும் தேர்வர்கள் ஜூன் 18-ம் தேதிக்குள் ஆவணங்களுடன் தெரிவிக்கலாம் என்றும், இந்த காலக்கெடுவுக்கு பின்னர் வரும் விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
No comments:
Post a comment