rp

Blogging Tips 2017

தனியார் பள்ளி கற்பித்தல் மானியம் விடுவித்தல்-இயக்குனர் செயல்முறைகள்

தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு : TN Schools Attendance மேம்படுத்தப்பட்ட செயலி V 2.1.9 மூலம் ஆசிரியர் வருகையை எவ்வாறு பதிவு செய்வது?

அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு:

TN Schools Attendance மேம்படுத்தப்பட்ட செயலி V 2.1.9 மூலம் ஆசிரியர் வருகையை எவ்வாறு பதிவு செய்வது?

தற்போது மேம்படுத்தப்பட்ட TN Schools Attendance V 2.1.9 செயலியில் தலைமை ஆசிரியர்களுக்கு தனியாக, பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் கொடுக்கப் பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர்கள் TN Schools Attendance செயலியில், Log Out செய்ய வேண்டும்.

பின்னர் Google தேடு பொறி மூலம், EMIS இணைய தளத்திற்கு சென்று பள்ளி DISE எண் மற்றும் EMIS கடவுச் சொல் இட்டு உள்ளே செல்ல வேண்டும்.

ஆசிரியர்கள் (Staff Details) பகுதிக்கு செல்லவும்.

CPS பிடித்தம்- அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 01.04.2003 முதல் இந்நாள் வரை பிடித்தம் செய்யப்பட்ட CPS சந்தா தொகை விபரம் வழங்கக் கோரி சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு மாவட்டக் கருவூல அலுவலருக்கு கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலாளர் கடிதம் - நாள்: 08.02.2019



CLICK HERE TO DOWNLOAD 


ஒருங்கிணைந்த கல்வி திட்டமான 'சமக்ர சிக் ஷா' நிதியின் வரவு செலவு குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி பள்ளி கல்வி துறைக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்மன்

ஒருங்கிணைந்த கல்வி திட்டமான 'சமக்ர சிக் ஷா' நிதியின் வரவு செலவு குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி பள்ளி கல்வி துறைக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டம் சமக்ர சிக் ஷா; இத்திட்டத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு ஆய்வக பொருட்கள் நுாலக புத்தகங்கள் வாங்கவும் பள்ளி நிர்வாக செலவுக்கும் நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த நிதி தலைமை ஆசிரியர்களுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது.ஆனால் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியின் தேவைக்கு ஏற்ப ஆய்வக பொருட்கள் நுாலக புத்தகங்கள் வாங்க உயர் அதிகாரிகள் அனுமதிப்பதில்லை.

: 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

நடப்பாண்டில் 5 மற்றும் 8ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கிடையாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

 ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொது தேர்வு குறித்து எந்த ஆணையையும் பிறப்பிக்கவில்லை என கூறினார். கோபிசெட்டிபாளையம் அருகே நம்பியூரில் மின்சார துணை மின் நிலைய கட்டுமான பணியை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். அதன் பிறகு பேசிய அவர், பொதுத்தேர்வு குறித்து துறை ரீதியான பணிகள் நடந்து வருவதாகவும், இது தொடர்பாக அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என தெரிவித்தார். மேலும் இந்த வருடம் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு இல்லை எனவும் தெரிவித்தார். ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற விதிமுறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழக அரசு, தற்போது மத்திய அரசின் முடிவை ஏற்று அதற்கான பணியைத் தொடங்கியுள்ளது.

DGE - SSLC PUBLIC EXAM 2019 - NR CORRECTION TODAY LAST DATE!

HSC 2 year Hall ticket Puplished and இயக்குநர் செயல்முறை

DEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி - "பிரதமர் விருது - 2019" - தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு - இயக்குனர் செயல்முறைகள்

SPD - RTE - தொடக்க/நடு நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் விவரங்கள் கோரி இயக்குனருக்கு கடிதம் - SPD Letter

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று விழுக்காடு அகவிலைப்படி உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இதன்மூலம் 9 லிருந்து 12 விழுக்காடாக உயர்ந்தது

5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கு பொது தேர்வு -இந்த் ஆண்டு முதலே அமலாகிறது.ceo செயல்முறைகள்

SPD - RTE - தொடக்க/நடு நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் விவரங்கள் கோரி இயக்குநருக்கு கடிதம் - SPD Letter

NCERT இந்த மூன்று சிறுபுத்தகங்களை வெளியிட்டுள்ளது. (இணையப் பாதுகாப்பு , ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளிப் பாதுகாப்பு)

NCERT இந்த மூன்று சிறுபுத்தகங்களை வெளியிட்டுள்ளது.

 இணையப் பாதுகாப்பு  , ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளிப்பாதுகாப்பு என்பனவற்றை இந்நூல்கள் பேசுகின்றன.  மக்கள்மத்தியில் விழிப்புணர்வை உருவாக்குவதற்கு தயவுசெய்துபரப்புங்கள்

பள்ளி பாதுகாப்பு
CLICK HERE TO DOWNLOAD 

மாணவர்கள்
CLICK HERE  TO DOWNLOAD  

ஆசிரியர்கள்
CLICK HERE TO DOWNLOAD  

Any desk என்கிற mobile app ஐ உங்கள் மொபைல் ல் dowm load பண்ண வேண்டாம். RBI எச்சரிக்க செய்திருக்கிறது!!

DSE PROCEEDINGS-ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்களுக்கு ஆண்டிற்கு 15 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கலாம் என தெளிவுரை வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! நாள்: 07-02-2019

ஆசிரியர் கூட்டுறவு சங்கத்தில் பெறப்படும் கடன் மீதான தொகைக்கு காப்பீடு செய்யும் தொகையை வருமான வரி 80C-ன் கீழ் கழித்தம் செய்து கொள்ளலாம் என்பதற்கான பதிவாளர்-சென்னை அவர்களின் சுற்றறிக்கை...


கணினி பாடப்பிரிவு இல்லாத அரசுமேல்நிலைப்பள்ளியில் கணினி பாடப்பிரிவு கொண்டுவருவது குறித்து அரசு பரீசீலித்து வருகின்றது..CM CELL RPLY.

அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச புகார் : போலீசார் விசாரிக்க கட்டுப்பாடுகள்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான லஞ்ச புகார்களை விசாரிக்க, முன் அனுமதி பெற வேண்டும்' என, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது, லஞ்ச புகார் வந்தால், லஞ்ச ஒழிப்பு போலீசார், நேரடியாக வழக்கு பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. பரஸ்பர அடிப்படையில் மட்டும், சம்பந்தப்பட்ட துறை தலைமையிடம், அனுமதி பெற்று வந்தனர். இந்நிலையில், மத்திய அரசின் புதிய சட்டத்தை பின்பற்றி,

தமிழகத்தில், பள்ளி மற்றும் கல்லுாரிகளில், ஆண்டு இறுதித் தேர்வுகள்,எப்போது துவங்கி, எப்போது நிறைவடைகின்றன என்ற விபரத்தை, தமிழக அரசிடம், தேர்தல் கமிஷன் கேட்டுள்ளது

தமிழகத்தில், பள்ளி மற்றும் கல்லுாரிகளில், ஆண்டுஇறுதித் தேர்வுகள், எப்போது துவங்கி, எப்போது நிறைவடைகின்றன என்ற விபரத்தை, தமிழக அரசிடம், தேர்தல் கமிஷன் கேட்டுள்ளது.
லோக்சபா தேர்தல், விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. மார்ச் முதல் வாரத்தில், தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில், ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடத்தும்படி, அ.தி.மு.க., சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழகத்தில் உள்ள, பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், ஆண்டு இறுதித் தேர்வு, பருவத் தேர்வு போன்றவை, எப்போது துவங்கி, எப்போது நிறைவடைகின்றன என்ற விபரத்தை, தமிழக அரசிடம், தேர்தல் கமிஷன் கேட்டுஉள்ளது. தேர்வுகளை பொறுத்து, தேர்தல் தேதியை முடிவு செய்ய, தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது

G.O Ms 26 - PG Computer Instructor Post Created | கணினி பயிற்றுநர் பணியிடம் முதுகலை ஆசிரியர் இணையான பணியிடமாக மாற்றி அரசாணை வெளியீடு


'கம்ப்யூட்டர் சயின்ஸ்' ஆசிரியர் கல்வி தகுதியை மாற்றியது அரசு

அரசு பள்ளிகளில், 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' ஆசிரியர்களுக்கான கல்வி தகுதியை மாற்றி, தமிழக அரசு, புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.அரசு பள்ளிகளில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.ஆறு முதல், 10ம் வகுப்பு வரை பாடம் நடத்த, பட்டப் படிப்புடன், பி.எட்., முடித்திருக்க வேண்டும். அத்துடன், ஆசிரியர் தகுதி தேர்வான, 'டெட்' தேர்ச்சி கட்டாயமாகும்.பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு, 'டெட்' தேர்ச்சி அவசியம் இல்லை. ஆனால், முதுநிலை பட்டப் படிப்புடன், பி.எட்., முடித்திருக்க வேண்டும்.தமிழகத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில், 1998ல், அறிமுகம் செய்யப்பட்ட, கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ற, கணினி அறிவியல் படிப்புக்கு, முதலில்,

வருமான வரி கணக்கில், போலி விபரங்கள் இன்றி, தாக்கல் செய்யுமாறு, ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அறிவுரை


வருமான வரி கணக்கில், போலி விபரங்கள் இன்றி, தாக்கல் செய்யுமாறு, ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஒவ்வொரு நிதி ஆண்டும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பிப்., இறுதியில், தங்களின் ஆண்டு வருவாய் மற்றும் செலவு கணக்கை செலுத்துவர். இதற்கான விபரங்கள், அந்தந்த துறை தலைமை வழியே தாக்கல் செய்யப்படும்.இதில், ஒவ்வொருவரும், தங்கள் பெயரில் உள்ள சேமிப்பு கணக்குக்கான கழிவு, பிள்ளைகளின் கல்வி கட்டணம் மற்றும் வீட்டு கடன் குறித்து, விபரங்கள் தாக்கல் செய்வர். அந்த கணக்கின் அடிப்படையில், டி.டி.எஸ்., என்ற, வருமான வரி பிடித்த தொகை,

SBI - INCOME TAX BANK CHALLAN

CLICK HERE-SBI - INCOME TAX BANK CHALLAN (PDF) 

வாக்காளர் சிறப்பு முகாம் 📓பிப்ரவரி 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது. 📓இதுவரை வாக்காளராக இல்லாதோர் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும்.


நேற்றைய ஜாக்டோ ஜியோ ஒருங்கினைப்பாளர்கள் கூட்ட முடிவுகள்


INCOME TAX 2019 - U/s 80 DDB சில குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டும் இந்த 40 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை தங்களுடைய மருத்துவ செலவு கணக்கை காண்பிக்கலாம்.

*80DDB SELECTED DISEASES ONLY*

Neurological Diseases where the disability level has been certified to be of 40% and above —

(a) Dementia

(b) Dystonia Musculorum Deformans

(c) Motor Neuron Disease

(d) Ataxia

(e) Chorea

(f) Hemiballismus

(g) Aphasia

(h)Parkinsons Disease

Income Tax - RECEIPT OF HOUSE RENT Under Section 1 (13 – A) of Income Tax Act

50 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் காலியாக இருந்த 50 கல்வி மாவட்டங்களுக்கு தற்போது பதவி உயர்வு மூலம் மாவட்டக் கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறையில் மொத்தம் 128 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 50 பணியிடங்கள் நிரப்பப்படாமல் கடந்த சில மாதங்களாக காலியாக இருந்தன. அந்தப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என  தலைமை ஆசிரியர்கள்,  கல்வியாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.  இந்நிலையில்,  பதிவு மூப்பு அடிப்படையில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 50 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு வியாழக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.  இதற்கான நடவடிக்கையை பள்ளிக் கல்வித்துறை இயக்ககம் மேற்கொண்டுள்ளது. கடந்த 7 மாதங்களாக காலியாக இருந்த மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் முழுவதுமாக நிரப்பப்பட்டுள்ளதால் பொதுத்தேர்வுகளுக்கான முன்னேற்பாடுகளும்,  பள்ளி ஆண்டுத் தேர்வுகளுக்கான பணிகளும் தடையின்றி நடைபெறும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

DEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீளப் பணி அமர்த்த தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

_Flash News : JACTTO GEO - Suspension Cancel DSE Proc - பள்ளிக்கல்வி - உயர்/மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் சஸ்பெண்ட் உத்தரவு மட்டுமே ரத்து - இயக்குனர் செயல்முறைகள்_*


ஆசிரியர் கோரிக்கை நிறைவேற்ற பரிந்துரை : பள்ளி கல்வி அதிகாரிகள் அறிக்கை

பள்ளி கல்வித் துறை சீராக செயல்பட, 'ஜாக்டோ - ஜியோ'வின் நிதிச்சுமை இல்லாத கோரிக்கைகளை நிறைவேற்றும்படி, அரசுக்கு பள்ளி கல்வி அதிகாரிகள் பரிந்துரை அனுப்பியுள்ளனர்.தமிழகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, பலகட்ட போராட்டங்கள் நடந்தன.இதில், ஜன., 22 முதல், 30 வரை நடந்த, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம், அரசு பணிகளை ஸ்தம்பிக்க வைத்தது. தொடக்க பள்ளிகள் முற்றிலும் முடங்கின.ஊதிய முரண்பாடுகளை சரி செய்வது, ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, 21 மாதங்களுக்கான, ஊதிய உயர்வு நிலுவை தொகை வழங்குவது, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உட்பட, ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த போராட்டம் நடந்தது. ஆனால், அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகளால், போராட்டம் முடிவுக்கு வந்தது.இருப்பினும், அரசு தரப்பில் எந்த பேச்சும் நடத்தாமல், வேலை நிறுத்தத்தை முடிக்க வைத்ததால், ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அதிருப்தியில் உள்ளனர்.

Pension - Contributory Pension Scheme - Rate of Interest for the financial year 2018-2019 With effect from 1-1-2019 to 31-3-2019 -orders issuced

சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு பட்டியலை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து.

 சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு பட்டியலை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து.632 உடற்கல்வி சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு பட்டியலை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்தது உயர்நீதிமன்ற கிளை. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நான்கு வாரத்தில் பணி நியமன ஆணை வழங்கவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 'ஆண்ட்ராய்டு செயலி' வாயிலாக, வருகை பதிவை மேற்கொள்ள வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித் துறை உத்தரவு

 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 'ஆண்ட்ராய்டு செயலி' வாயிலாக, வருகை பதிவை மேற்கொள்ள வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித் துறை உத்தரவு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 'ஆண்ட்ராய்டு செயலி' வாயிலாக, வருகை பதிவை மேற்கொள்ள வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

SPD PROCEEDINGS-பள்ளிகளில் இந்த கல்வியாண்டு ( 2018-19) ஆண்டு விழா கொண்டாடுதல் - நெறிமுறைகள் வெளியிட்டு நிதி ஒதுக்கி உத்தரவு - செயல்முறைகள்!

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் அவசர பொதுக்குழு கூட்டம் வரும் 16ஆம் தேதி நாமக்கல்லில் நடைபெறும்


தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் அவசர பொதுக்குழு கூட்டம் வரும் 16ஆம் தேதி நாமக்கல்லில் நடைபெறும்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் அவசர பொதுக்குழு கூட்டம் வரும் 16ஆம் தேதி நாமக்கல்லில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட உடன் அதுகுறித்து வாட்ஸப்பில் பல கருத்துக்களை தெரிவித்தனர். இதுகுறித்து குறித்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தலைவர் என்ற முறையில் முத்துசாமி ஆகிய நான் மிகவும் பெருமகிழ்ச்சி அடைகின்றேன் .

அன்புத் தம்பிகள் பலர் பொதுக்குழுவை எங்கள் பகுதியில் நடத்துங்கள் என தனது விருப்பங்களை தெரிவித்தனர். சுற்றுலாத்தலமாகவும் நடத்த வேண்டும் என்றுசிலர் கேட்டுக் கொண்டனர்.

 சங்கத்தின் பால் மாறாத பற்றும் நன்மதிப்பும் கொண்டவர் மட்டுமல்லாது சங்க வளர்ச்சியில் அக்கறை கொண்டோர் பலர் இதுகாரும் ஓரிரு பொது குழுக்களில் மட்டும் கலந்து கொண்டவர்களும் கருத்து தெரிவித்தது மகிழ்ச்சியோடு வரவேற்கத்தக்கது
.
 இக் கருத்து கூறிய அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் நாமக்கல் பொதுக்குழுவிற்கு தவறாது கலந்துகொண்டு தனது கருத்துக்களை எடுத்து உரைக்க வேண்டுகிறோம்.

 மேலும் எப்பொழுது எந்தெந்த காலகட்டத்தில் தாங்கள் குறிப்பிட்ட பகுதியில் நடத்தலாம் என்பதை தெரிவிக்க வேண்டுகிறோம் . 

அதன் அடிப்படையில் வரும் காலங்களில் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு பொதுச் செயலாளர் அவர்கள் தலைவர் மற்றும் பொருளாளர் உடன் கலந்து பேசி எங்கு எப்போது கூட்டங்களை நடத்தலம் என  பட்டியலிட்டு அறிவிக்கலாம் .

எனவே கருத்து கூறிய அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று அன்போடு அழைக்கின்றேன். இயக்கத்தின் பால் பேரன்பு கொண்டு தங்கள் பணியினையும்,சங்கப்பணியினையும் சிறப்புடன் செய்யும் உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி என்பதில் அகமகிழ்வோம்.

 பெருமையுடன் 
உங்கள்

 செ முத்துசாமி,ExMLC 
மாநிலத் தலைவர் 
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

CM CELL Reply - மாற்றுப் பணியில் வேறு பள்ளிகளுக்கு பணியமர்த்தப்படும் ஆசிரியர்களுக்கு பேருந்து கட்டணம், தினப்படி மற்றும் இதர படிகள் உண்டு !!

CM CELL Reply - மாற்றுப் பணியில் வேறு பள்ளிகளுக்கு பணியமர்த்தப்படும் ஆசிரியர்களுக்கு பேருந்து கட்டணம், தினப்படி மற்றும் இதர படிகள் உண்டு !!

2019 - பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாடுதல் - நெறிமுறைகள் வெளியிட்டு நிதி ஒதுக்கி உத்தரவு - செயல்முறைகள்


கிராமப்புறங்களில் அதிவேக இணையதள சேவை கிடைப்பதில் சிரமம்: செல்போன் செயலி வருகைப்பதிவு செய்ய முடியாமல் ஆசிரியர்கள் அவதி

கிராமப்புறங்களில் அதிவேக இணையதள சேவை கிடைப்பதில் சிரமம் இருப்பதால், மாணவர் வருகைப்பதிவை குறித்த நேரத்தில் மேற்கொள்ள முடியாமல் ஆசிரியர்கள் அவதிப்படுகிறார்கள். 

தமிழக பள்ளிக்கல்வி துறையில் தேர்வுமுறை, பாடத்திட்டம் மற்றும் நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. 

 அந்த வகையில் மாணவர், ஆசிரியர்கள் வருகைப்பதிவை கண்காணிக்க ‘டிஎன் ஸ்கூல்ஸ்’ என்ற செல்போன் செயலியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு அறிமுகம் செய்தது. 

வருவாய் மாவட்டத்தில் பணிபுரியும் வட்டாரக் கல்வி அலுவலர்களில் சார்ந்த சிறுபான்மை மொழி தெரிந்த வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வருவாய் மாவட்டத்தில் உள்ள சார்ந்த மொழி வழி சிறுபான்மை பள்ளிகளை ஆண்டாய்வு மற்றும் பள்ளி பார்வை மேற்கொள்ள சிறப்பு அதிகாரம் வழங்கி ஆணையிடுமாறு சார்ந்த மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கு தொடக்ககல்வி இயக்குனர் உத்தரவு.

தமிழகம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர் பெயர் திருத்தம் செய்ய பிப்ரவரி 16 வரை இறுதி அவகாசம்: மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தங்கள் பெயர்களை திருத்தம் செய்ய வரும் 16ம் தேதி வரை இறுதி அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளவும், கூடுதலாக மாணவர்களின் பெயரை சேர்க்கவும் அவசியம் ஏற்படின்  நீக்கம் செய்யவும் ஜனவரி மாதம் 27ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தநிலையில் 10ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு பள்ளி  தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் பெயர் பட்டியலை இஎம்ஐஎஸ் இணையதளத்தில் இருந்து தலைமை ஆசிரியர்கள்  பதிவிறக்கம் செய்துகொள்ள அரசு தேர்வுகள் இணை இயக்குநர் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட பெயர் பட்டியலில் பள்ளியின் பெயர், மாணவர்களின் பெயர், முகப்பெழுத்து, பிறந்த தேதி மற்றும் பயிற்று மொழி ஆகியவற்றில் திருத்தம் ஏதுமிருப்பின்  அவற்றையும், மாணவர்களின் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் ஆகிய விபரங்களையும் மேற்கொள்ள பிப்ரவரி 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு எச்சரிக்கை அங்கீகாரம் பெறப்படாத புதிய பள்ளிகளின் பெயரில் மாணவர்களின் விபரம் பதிவேற்றம் செய்யக்கூடாது. அப்பள்ளிகள் மற்றொரு பள்ளியில் தங்கள் அறிவுரைப்படி மாணவர்களின் பெயரை  கூடுதலாக பதிவு செய்ய வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

JACTTO - GEO : தமிழக அரசு வெளியிட்ட பட்ஜெட் 2019 குறித்து ஜாக்டோ ஜியோ செய்தி அறிக்கை!

e - Pay Slip Working Now - Annual Statement For Income tax Purpose

Click Here - To Download Your Annual e-Payslip


பள்ளிகளில் attendence app மூலமாக ஆசிரியர்கள் வருகை பதிவுகளை தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ளுதல் மற்றும் attendence appஇல் எவ்வாறு ஆசிரியர்கள் வருகை பதிவுசெய்யும் முறை

Teachers Attendance App Monitoring reg - STEP BY STEP METHOD


CLICK HERE

Teachers Attendance App Monitoring reg - SPD PROCEEDINGS!!








அரசாணை எண்: 19 பள்ளிக்கல்வி நாள்:07.02.19-வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு பணியிடமாக மாற்றி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு!

CLICK HERE TO DOWNLOAD

3 முதல் 8ம் வகுப்பு மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு! - பட்ஜெட்டில் அறிவிப்பு

3 முதல் 8ம் வகுப்பு மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு! - பட்ஜெட்டில் அறிவிப்பு பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும்பெண் குழந்தைகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2019-20 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.


துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எட்டாவது முறையாக இன்று தமிழக பட்ஜெட்டைதாக்கல் செய்தார். அதன்படி அவர் சட்டப்பேரவையில்பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். அதில், தமிழகத்தில் கடந்த ஆண்டில்பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,000 ஆக குறைந்துள்ளது.எனவே பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்க ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அத்திட்டத்திற்கு 48.70கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இதன்மூலம் மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்குரொக்கப்பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட் 2019 உரை (full pdf file tamilversion)

click here to download 


தமிழக பட்ஜெட் 2019 - பள்ளிக்கல்வித்துறை முக்கிய அம்சங்கள்! தமிழக பட்ஜெட் 2019 - பள்ளிக்கல்வித்துறை முக்கிய அம்சங்கள்!

* பள்ளி கல்வித்துறைக்கு 2019-20-ம் ஆண்டில் ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு

* தொடக்கநிலை வகுப்புகளில் நிகர மாணவர் சேர்க்கை விகிதம் 99.8 ஆக உயர்வு

* பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது

* இலவச பாடப்புத்தகங்கள், காலணிகள், புத்தகப் பைகள் வழங்க ரூ.1,657 கோடி ஒதுக்கீடு

* நபார்டு உதவியுடன் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் கட்ட ரூ.381 கோடி ஒதுக்கீடு

* ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்திற்க ரூ.2,791 கோடி ஒதுக்கீடு

* முதல் முதல்முறையாக பட்டதாரி மாணவ, மாணவியருக்கு கல்வி கட்டணம் வழங்க ரூ.460 கோடி ஒதுக்கீடு

மாணவர்கள் பொதுத்தேர்வில் கலந்துகொள்ள குறைந்தபட்சம் 75% வருகைப்பதிவு இருக்க வேண்டும் என்பதற்கான முதல்வரின் தனிப்பிரிவு பதில்.

ஓய்வூதிய திட்டம்:*பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது தொடர்பாகவும், ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பாகவும் பரிசீலிக்கப்படும் என, தமிழக பட்ஜெட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு.*

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஸ்ரீதர் குழு அறிக்கை , சித்திக் குழு அறிக்கை பரிசீலனையில் உள்ளது*

*- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்*

✍ *பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது தொடர்பாகவும், ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பாகவும் பரிசீலிக்கப்படும் என, தமிழக பட்ஜெட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு.*

💰💰அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் நலனுக்காக 55,399 கோடி ரூபாயும், ஓய்வூதிய பலன்களுக்காக 29,627 கோடி ரூபாய் ஒதுக்கீடு*
💰💰பள்ளிகளில் 3 முதல் 8ஆம் வகுப்பு வரை பெண்குழந்தைகள் கல்வி ஊக்கத் திட்டத்திற்கு ரூ.47.7 கோடி ஒதுக்கீடு*

4.10.2018 அன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கான பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை திரும்பி தர உத்தரவு


இடைநிலை ஆசிரியர் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் போது சிறப்புப்படி ₹ 2000/- த்தை சேர்க்க முடியாது என்பதற்கான கருவூலக்கடிதம்..


-சென்னை உயர்நீதி மன்ற உத்தரவின் பேரில் இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு TRB வெளியீடுTRB - SPECIAL DIRECT RECRUITMENT FOR SHORTFALL (SC & SCA / ST).,BT ASSISTANTS - 2019

CLICK HERE

DSE PROCEEDINGS-புதுமையான விதத்தில் சிறப்பாகச் செயல்படும் பள்ளிகளுக்கு புதுமைப் பள்ளி விருது வழங்குதல் சார்ந்து ஆணை வெளியிடப்படுகிறது.

'ஜாக்டோ - ஜியோ' கோரிக்கைகள் ஆய்வு

சென்னை: 'ஜாக்டோ - ஜியோ' கோரிக்கைகளில், நிதி பிரச்னை இல்லாத அம்சங்களை ஆய்வு செய்யும் பணி துவங்கியுள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், ஒன்பது நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இந்த போராட்டம், அரசு மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு, ஆசிரியர்கள் பல்வேறு விமர்சனங்களையும், போராட்ட யுக்திகளையும் கையாண்டனர்.வாபஸ்ஆனால், அரசின் பல கட்ட நெருக்கடிகள் மற்றும் எச்சரிக்கைகளால், வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து, கோரிக்கைகளை அரசிடம் தெரிவிக்கும் வகையில், ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள், இரண்டு நாட்களாக, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து, மனு அளித்து வருகின்றனர்.இதை தொடர்ந்து, ஜாக்டோ - ஜியோவின் கோரிக்கைகளில், அரசின் நிதி சுமையை பாதிக்காத, நியாயமான கோரிக்கைகளை ஆய்வு செய்ய, தமிழக அரசு திட்டமிட்டுஉள்ளது. அதிகாரிகள்நிதித்துறை, பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி துறை அதிகாரிகள், இந்த ஆய்வை துவக்கி உள்ளனர்.ஆசிரியர்களுக்கான கோரிக்கைகள் என்ன; அவற்றின் நிலை; எந்த ஆண்டு முதல் இந்த கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன; இவ்வளவு ஆண்டுகளாக கோரிக்கைகள் நீடிக்க காரணம் என்ன என, ஆய்வு செய்யப்படுகிறது. கோரிக்கைகளின் தன்மை மற்றும் அதன் நியாயமான அம்சங்களை, தமிழக அரசுக்கு, ஒவ்வொரு துறையும் பரிந்துரை செய்ய உள்ளதாக, அரசு வட்டாரங்கள் தெரிவித்தன

வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் - உச்சநீதிமன்றம் உத்தரவு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஆதார் கட்டாயம் தேவை என சுப்ரீம் கோர்ட்டு செப்டம்பர் மாதம் 26-ம் தேதி உத்தரவிட்டது. இதற்கிடையே ஸ்ரேயா சென், ஜெயஸ்ரீ சத்புட்டே ஆகிய இருவர் 2018–19 மதிப்பீட்டு ஆண்டுக்கான வரிமான வரி கணக்குகளை ஆதார், பான் எண் இணைக்காமல் தாக்கல் செய்யலாம் என டெல்லி ஐகோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது.

வருமான வரி சட்டத்தின் பிரிவு 139 ஏஏ, வருமான வரி கணக்கு தாக்கலின் போது, ஆதார் எண்ணுடன் ‘பான்’ எண் என்று அழைக்கப்படுகிற வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறுகிறது.

 மத்திய அரசு மேல்முறையீடு குறித்து விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஆதார் எண்ணுடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் என உத்தரவிட்டுள்ளது.

ஆதார் பற்றிய வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது என்பதை கருத்தில் கொண்டுதான் டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்பின்னர் இது தொடர்பான வருமான வரிச்சட்டம் பிரிவு 139 ஏஏ செல்லுபடியாகத்தக்கது என்று சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்தது. அதை கருத்தில் கொண்டு, வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

வேண்டுகோள்.*அன்பான ஆசிரிய போராளிகளே!!*--*செ. முத்துசாமி. Ex.MLC..* *மாநிலத் தலைவர்* *தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி*

வேண்டுகோள்.
*அன்பான ஆசிரிய போராளிகளே!!*
ஆரம்ப காலம் முதல் நமது அனைத்து சலுகைகளும் போராடிதான் பெற்று வருகிறோம். போராட்டங்களில் வெற்றி தோல்வி என்பது மாறி மாறி தான் வரும். போராட்டங்களும் போர்களங்களும் என்றும் மாறாது.நாம் இதுநாள் வரை கையில் எடுத்த கோரிக்கைகள் தோல்வி அடைந்தது இல்லை என்பதுதான் வரலாறு.தற்போது நமது கோரிக்கைகள் மிகவும் முக்கியத்துவமும் நியாயமும் மிக்கது.சற்று காலதாமதம் ஏற்படுமே தவிர இக்கோரிக்கைகள் நிச்சயம் வென்றெடுக்கப்படும். போராட்டத்தில் கலந்துகொண்டு கைதாகி சிறை சென்று தற்போது தற்காலிக பணிநீக்கத்தில் உள்ள ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் , மற்றும் 17B நடவடிக்கை மூலம் பணியிட மாற்றம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள போராளிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை மீண்டும் பாதிப்பின்றி பணியமர்த்த மாநில ஜாக்டோ ஜியோ தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எந்தவித கலக்கமும் வேண்டாம். விரைவில் பாதிப்பின்றி நீங்கள் பணிக்கு திரும்ப மாநில ஜாக்டோ ஜியோ நடவடிக்கை மேற்கொள்ளும் என்ற உறுதியை தெரிவித்துக் கொள்கிறேன். அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் மாநில ஜாக்டோ ஜியோ வின் அதிகாரப்பூர்வ தகவலை தவிர வேறு வகையான செய்திகளை பொதுத்தளத்தில் பரப்பி ஆசிரியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். மேலும் நீதிமன்றம் குறித்து அரசு மற்றும் அலுவலர் குறித்து விமர்சிக்க வேண்டாம். அமைச்சர்களுடனும் அதிகாரிகளுடனும் ஜாக்டோ ஜியோ பேசுவது குறித்து மாற்றியோ, திரித்தோ, அதிகப்படியாகவோ, பொதுத்தளங்களில் பதிவிட வேண்டாம். இவ்வாறு நாம் விமர்சிப்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மையாக அமையாது. அருள்கூர்ந்து ஆவேசம் கொண்ட விமர்சனங்களை பொதுத்தளங்களில் வெளியிடுவதை நிறுத்திக்கொள்ள அன்போடு வேண்டுகிறேன்.
*செ. முத்துசாமி. Ex.MLC..*
*மாநிலத் தலைவர்*
*தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி*
posted from Bloggeroid

போராட்டத்தில் கலந்து கொண்டு பணிக்கு வராத ஆசிரியர்கள் / அரசு ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய கருவூல முதன்மை செயலாளர் உத்தரவு


ஜாக்டோ - ஜியோ போராட்டத்தை ஒடுக்க அரசு செலவழித்த தொகை எவ்வளவு?- அதிர்ச்சித் தகவல்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது, 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்துவது, அரசுத் துறைகளில் பின்பற்றப்பட்டு வரும் மதிப்பூதியம், தொகுப்பூதிய முறைகளை நீக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த வாரம் தமிழகம் முழுவதும் 10 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றதால் அரசுப் பள்ளிகள் இயங்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். முதல்வர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர்களின் கோரிக்கைகளை ஏற்று போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற்றனர் அரசு ஊழியர்கள்.

ஆங்கிலத்திலும் இனி தமிழ்நாடு! தமிழக அரசு ஏற்பாடு

தமிழில் உள்ளதைப் போலவே ஆங்கிலத்திலும் 'தமிழ்நாடு' என பெயர் மாற்றும் வகையில், தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள், ஆங்கிலத்தில், வேறு மாதிரியாக உள்ளன. அவற்றை தமிழில் உள்ளதைப் போலவே மாற்ற வேண்டும் என தமிழறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், பாண்டியராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

நடவடிக்கையை திரும்ப பெறுங்க! : 'ஜாக்டோ - ஜியோ' வேண்டுகோள்

: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை திரும்ப பெறும்படி முதல்வருக்கு 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பு வேண்டு கோள் விடுத்துள்ளது.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான 'ஜாக்டோ - ஜியோ' நிர்வாகிகள் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர் ஸ்வர்ணாவை நேற்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
 முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தும் மனு கொடுத்துள்ளனர்.
மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது
:முதல்வரின் வேண்டுகேளை ஏற்றும் எதிர் காலத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையிலும் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றோம்.பின் பணிக்கு சென்ற போது அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் முதல்வரின் வேண்டுகோளை நிறைவேற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்
.பணிக்கு சென்ற ஆசிரியர்களை வேறு பள்ளியில் சேரும்படி உத்தரவிட்டுள்ளனர். வழக்கு நிலுவையில் இருப்பதால் பணியில் சேர மறுக்கும் நிலை உள்ளது.
தற்காலிக பணி நீக்கம் ஒழுங்கு நடவடிக்கை எனக்கூறி பணி வழங்க மறுக்கும் நிலை உள்ளது.
 இதை உடனடியாக கைவிட வேண்டும். மாறுதல் பணியிட உத்தரவு வழங்கப்பட்டிருந்தால் அதை திரும்பப் பெற வேண்டும்.வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீதான அனைத்து நடவடிக்கைகளையும் திரும்பப் பெற வேண்டும்.
 அரசு ஊழியர்கள் மற்றும் அரசுக்கு உள்ள உறவினை சுமூகமாக்கி பணித்திறன் மேம்பட உதவ வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறை செயலர் அறையிலேயே மாண்புமிகு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களையும் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர்கள் சந்தித்த நிகழ்வு கோரிக்கைகளை கனிவுடன் முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச்சென்று சாதகமான பதில் தருவதாக உறுதி

பிப்.8-இல் குடற்புழு நீக்க தினம்: தமிழகத்தில் 2.26 கோடி குழந்தைகளுக்கு மாத்திரைகள் வழங்க ஏற்பாடு

மாநிலம் முழுவதிலும் சுமார் 2.26 கோடி குழந்தைகளுக்கு வரும் வெள்ளிக்கிழமை (பிப்.8) குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பொது சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.தேசிய குடற்புழு நீக்க நாள் ஆண்டுதோறும் பிப்ரவரி 10-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.  அன்றைய தினத்தில் நாடு முழுவதிலும் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறாருக்கு அல்பெண்டசோல் எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுவது வழக்கம்.ஆனால், இம்முறை பிப்ரவரி 10-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால், அன்று பள்ளி, கல்லூரிகள் செயல்படாது.

JACTTO-GEO members submitted memorandum to State Govt.

5, 8ம் வகுப்புக்கான, 'ஆல் பாஸ்' திட்டம் நிபுணர் கருத்தை கேட்க அரசு முடிவு

சென்னை: கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான, 'ஆல் பாஸ்' திட்டத்தை மாற்ற, பொது கல்வி வாரியத்தை கூட்டி, தமிழக அரசு முடிவு செய்ய உள்ளது.'மத்திய அரசின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 14 வயது வரை, இலவச கல்வி வழங்க வேண்டும்' என, அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்கனவே உத்தரவிடப்பட்டது. இந்த சட்டத்தை பின்பற்றி, அனைத்து மாநிலங்களிலும், எட்டாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களும், 'பாஸ்' செய்யப்பட்டனர்.இந்த, 'ஆல் பாஸ்' முறையால், ஒன்பது, 10ம் வகுப்புகளுக்கு வரும் பல மாணவர்கள், அவரவர் மாநில மொழி அல்லது தாய்மொழியில் கூட, எழுதப் படிக்க தெரியாமல் திணறுகின்றனர். இது குறித்து, மத்திய அரசு தரப்பில் நிபுணர் குழு அமைத்து, ஆய்வு நடத்தப்பட்டது.இந்த ஆய்வின் முடிவில், எட்டாம் வகுப்பு வரையிலான, ஆல் பாஸ் திட்டத்தை நிறுத்த பரிந்துரை செய்யப்பட்டது. இது குறித்து, மத்திய அரசின் சார்பில், சட்ட திருத்த மசோதா உருவாக்கி, ஜனவரி, 2ல், பார்லிமென்டின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டது.இதைத் தொடர்ந்து, சட்ட திருத்தத்துக்கான மத்திய அரசின் அரசாணை, கடந்த வாரம் வெளியானது. அதில், தேர்வே நடத்தாமல், ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களை, அடுத்த வகுப்புகளுக்கு தேர்ச்சி பெற வைக்கக்கூடாது.

ஜேக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை..

ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்களுடனான சந்திப்பு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது செ.முத்துசாமி, மாநிலத் தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

அன்புத் தோழமைகளுக்கு இனிய வணக்கம்.

நமது ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இன்று

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் மாண்புமிகு ஜெயக்குமார்
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் மதிப்புமிகு சரவணா
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதிப்புமிகு பிரதீப் யாதவ் மற்றும்

*பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன்*

ஆகியோரை சந்தித்து ஜாக்டோ ஜியோ போராட்ட காலங்களில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

அதை ஏற்றுக் கொண்ட *கல்வி அமைச்சர் கனிவுடன் பரிசீலித்து அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்வதாக உறுதி அளித்துள்ளார்*

மேலும் புதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்கள் அனைவரும் மிகுந்த ஒத்துழைப்போடு பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

எனவே கூடிய விரைவில் நாம் எதிர்பார்க்கும் நல்ல செய்தி கிடைக்கும் என்று நம்பிக்கை கொள்வோம்.

தகவல்
*செ.முத்துசாமி, Ex. M.L.C,*
மாநிலத் தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி.

posted from Bloggeroid

EMIS இல் Strike Details பதிவு செய்ய உத்தரவு*



2019 INCOME TAX EXCEL FILE (WITHOUT MACRO)

CLICK HERE TO DOWN LOAD

LKG & UKG தொடர்பான இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்


2019 - இடைக்கால மத்திய பட்ஜெட்*வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 2.50 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்வு*

*2019 - இடைக்கால மத்திய பட்ஜெட்*வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 2.50 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்வு*

*வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வால் 3 கோடி பேருக்கு பலன்*

*நிலையான கழிவு 40,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்வு*

*ரூ.2 கோடி வரையிலான வருவாய்க்கு நீண்டகால மூலதன ஆதாய வரியிலிருந்து விலக்கு- பியூஷ் கோயல்*

*டெபாசிட்டில் கிடைக்கும் ரூ.50 ஆயிரம் வரையிலான வருவாய்க்கு இனி வரி இல்லை*

*இனிமேல் வீட்டுக்கடனுக்கான வட்டிசலுகை 2வீடுகளாக உயர்த்தப்படும்*

*இதுவரை ஒரு வீட்டுக்கடனுக்கான வட்டிக்கு மட்டுமே வரி விலக்கு தரப்பட்டது*

*வீட்டு வாடகைக்கான வரி விலக்கு 1,80000 ரூபாயிலிருந்து 2,40000 ரூபாயாக அதிகரிப்பு*

posted from Bloggeroid

18/04/2014ல் மரணமடைந்த ஆசிரியருக்குபிடிக்கப்பட்ட CPS தொகை முடிவுசெய்து ஒப்படைக்க ஆணை- ஓய்வூதியம் ஏதுமில்லை

மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு 2 மதிப்பெண்கள் அளிக்கும் முறை - அடுத்த கல்வியாண்டில் அறிமுகம்

மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் 2 மதிப்பெண்கள் அளிக்கும் முறை வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்த உள்ளதாகத் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நாடு முழுவதும் பொறியியல் படிப்புப் படித்த 80 இலட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளதாகவும், தமிழகத்தில் ஒரு இலட்சத்து 68ஆயிரம் பேர் பொறியியல் படிப்பு முடித்துவிட்டு வேலையில்லாமல் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், மரம் வளர்க்கும் மாணவருக்கு ஒரு பாடத்துக்கு 2 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 12 மதிப்பெண்கள் வழங்கும் முறையை அடுத்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்

பள்ளி நாட்காட்டி பிப்ரவரி 2019

3 BEO சஸ்பெண்ட் - CEO அதிரடி உத்தரவு

புதுக்கோட்டை  மாவட்டத்தில் உயர் அதிகாரிகளின் உத்தரவினை செயல்படுத்தாத மற்றும் கீழ்ப்படியாத கந்தர்வக்கோட்டை வட்டார கல்வி அதிகாரிகள் அலெக்சாண்டர், வெங்கடாசலம்  மற்றும் அரிமளம் வட்டாரக்கல்வி அதிகாரி ஞானக்கனி ஆகிய 3 பேரையும் , மாவட்ட  முதன்மை கல்வி அதிகாரி வனஜா சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்.  இந்த சம்பவம் வட்டார கல்வி அதிகாரிகள் மற்றும் அலுவர்கள் மத்தியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு கட்டாயத் தேர்ச்சி: சட்டத் திருத்தம் மத்திய அரசிதழில் வெளியீடு.*

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி நடைமுறைக்கான சட்டத் திருத்தம் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாயக் கல்வித் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கும் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்து அதற்கான சட்டத் திருத்தத்தை அண்மையில் கொண்டுவந்தது.

இந்த திருத்தச் சட்டம் இப்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது, 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களையும் கட்டாயத் தேர்ச்சி செய்யும் முறை அமலில் உள்ளது. இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும், 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்றும், மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாகக் கூறிவந்தது. இது குறித்த அறிவிப்பையும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், இந்த நடைமுறையால் கிராமப்புற மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்றும், பெரும்பாலான குழந்தைகள் கல்வியைப் பாதியிலேயே நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்றும், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் கருத்துத் தெரிவித்திருந்தன. அதே நேரத்தில் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை நடைமுறையில் கொண்டுள்ள தமிழகம், இந்த புதிய மாற்றத்தை மேற்கொள்ளக்கூடாது எனவும், 8-ஆம் வகுப்பு வரையில் இலவசக் கல்வி அளிக்க வேண்டும் எனவும் கூறிவந்தது. இருப்பினும், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 8-ஆம் வகுப்பு வரை கட்டாயமாக தேர்ச்சி பெறச் செய்வதினால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுகிறது.

அதனால், 8 ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு கட்டாயம் வைக்க வேண்டும் என தொடர்ந்து கூறிவந்தார். இந்நிலையில், கடந்த 11-ஆம் தேதியிட்ட மத்திய அரசின் அரசிதழில் இத்தகவல் வெளியாகியுள்ளது. அதில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு ஆண்டின் இறுதியில் கட்டாயத் தேர்வு நடத்தப்பட வேண்டும். இதில் தோல்வியடையும் மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில், தேர்வு முடிவு வெளியான இரண்டு மாதங்களில் உடனடித் தேர்வு நடத்தவேண்டும்.

அதிலும் மாணவர் தோல்வியடைந்தால் அவர்களை அடுத்த வகுப்புக்கு அனுமதிக்காமல், 5 அல்லது 8-ஆம் வகுப்பிலேயே மீண்டும் தொடர அனுமதிக்கவேண்டும். அதே நேரம், ஒரு மாணவர் தொடக்கக் கல்வியை முடிக்கும் வரை, எந்தக் காரணம் கொண்டும் அவரை பள்ளியைவிட்டு வெளியில் அனுப்பக் கூடாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறையில் தமிழில் நடைபெறும் தேர்வுகளில் வடமாநிலத்தவர் தேர்வாவது எப்படி? - நீதிபதி கேள்வி

தமிழில் நடைபெறும் தேர்வுகளில் வடமாநிலத்தவர் தேர்வாவது எப்படி  என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 2014 ரயில்வே தேர்வின்போது சான்றளிப்பவர் கையெழுத்து இல்லை எனக் கூறி, தமிழர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும், சான்றளிப்பவரின் கையெழுத்து இல்லாத நிலையிலும் வட மாநிலத்தவர் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதாகவும் மனுதாரர் தெரிவித்திருந்தார். புகைப்படம் ஒட்டியும், ஒட்டாமலும் 2 விதமான தேர்வு அனுமதிச் சீட்டுகள் வழங்கி மோசடி நடைபெற்றதாகவும், பல கோடி ரூபாய் அதிகாரிகளுக்கு கைமாறி வட மாநிலத்தவர்கள் வேலைவாய்ப்பை பெற்றதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது. விசாரணையின் போது தபால் துறையிலும் இதேபோன்ற முறைகேடு புகார் எழுந்ததாக கூறிய நீதிபதி, தமிழில் நடைபெறும் தேர்வுகளில் வடமாநிலத்தவர் தேர்வாவது எப்படி? என கேள்வி எழுப்பினார். இதனை சாதாரணமான ஊழலாக எடுத்துக் கொள்ள முடியாது என்ற அவர், இதேமுறையில் வடமாநிலங்களில் தமிழர்கள் தேர்வாகியிருந்தால் தேசியப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் என்றார். இந்த வழக்கில் பதில் அளிக்க சி.பி.ஐ. தரப்பில் அவகாசம் கோரப்பட்டதையடுத்து விசாரணையை அவர் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தார்.
********************

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பிப்ரவரி 4-ல் ஊதியம்

ஜாக்டோ-ஜியோ போராட்டம் எதிரொலியாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் பிப்.4-ஆம் தேதி வழங்கப்படவுள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, கருவூலத் துறையிலிருந்து வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட சம்பளப் பட்டியல் திரும்பப் பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு அவர்கள் வேலைக்கு வராத நாள்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு, திருத்தப்பட்ட சம்பளப் பட்டியல் வங்கிகளுக்கு அனுப்பும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஈடுபடாதவர்கள் என அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் அனைவருக்கும் ஜனவரி மாத ஊதியத்தை 31-ஆம் தேதி அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. திருத்தப்பட்ட சம்பளப் பட்டியல் அனுப்பப்பட்டு அனைத்து ஊழியர்களுக்கும் ஜனவரி மாதத்துக்கான சம்பளம் பிப்.4-ஆம் தேதி வழங்கப்படும்.

பள்ளி கல்வி துறை அதிகாரிகள் ,ராமேசுவர முருகன் , அறிவொளி, லதா, சங்கீதா, சித்ரா, அமலன் ஆகியோர் மீது வழக்கு!!

பள்ளி கல்வி துறை அதிகாரிகள் ,ராமேசுவர முருகன் , அறிவொளி, லதா, சங்கீதா, சித்ரா, அமலன் ஆகியோர் மீது வழக்கு!!

*பள்ளி கல்வி துறை இயக்குனர் ராமேசுவர முருகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை  நடத்திய சோதனையில் தகவல்.

*உலகமெல்லாம் தமிழ் திட்டத்துக்கு அரசு ஒதுக்கிய நிதியை சுருட்டியதாக குற்றச்சாட்டு.
*கனவு ஆசிரியர், தேன் சிட்டு பத்திரிகை நடத்தியதில் பல லட்சம் மோசடி என வழக்கு* 

*'EDUSAT' செயற்கைகோள் வாங்கியதிலும் முறைகேடு செய்ததாகவும் வழக்குப்பதிவு .

G.O 151- DATE- 31.10.2018- PUBLIC SERVICES -ISSUING OF ABATEMENT ORDERS/ ORDERS OF DROPPING OF ACTION CONSEQUENT ON THE DEATH OF THE GOVERNMENT SERVANTS/ TRIBUNAL FOR DISCIPLINARY PROCEEDINGS CRIMINAL CASE IS PENDING -SIMPLIFYING THE PROCEDURE -ORDERS -ISSUED








G.O 173 -DATE-19.12.2018- PUBLIC SERVANTS -ALLEGATION OF CORRUPTION -PETITIONS RECEIVED-GUILDLINESS ISSUED


G.O 173 -DATE-19.12.2018- PUBLIC SERVANTS -ALLEGATION OF CORRUPTION -PETITIONS RECEIVED-GUILDLINESS ISSUED

  


  



 


web stats

web stats