rp

Blogging Tips 2017

பிளஸ் 2 தனித் தேர்வு: ஆக.25 முதல் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 தனித் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை திங்கள்கிழமை (ஆக.25) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் தனித் தேர்வர்கள் தங்களது பிறந்த தேதி, விண்ணப்ப எண்ணைப் பதிவு செய்து, பிளஸ் 2 தனித் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்யலாம்.

ஆசிரியை மீது தாக்குதல் நிர்வாகி உள்பட 6 பேர் மீது கொலை முயற்சி வழக்கு

திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்த ராஜா மனைவி தாரணி (32). இவர் துவாக்குடி அடுத்த தேவராயனேரி நரிக்குறவர் காலனியில் உள்ள திருவள்ளுவர் குருகுல மானிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். பள்ளியை அதே பகுதியைச் சேர்ந்த தொண்டு நிறுவன உரிமையாளர் மகேந்திரன் என்பவர் நிர்வகித்து வருகிறார்.

"நெட்' தேர்வு நடத்தும் பொறுப்பு சி.பி.எஸ்.இ. வசம் ஒப்படைப்பு - தினமணி

கல்லூரிப் பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) நடத்தும் பொறுப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திடம் (சிபிஎஸ்இ) பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஒப்படைத்தது.
கடந்த மாதம் நடைபெற்ற யுஜிசி கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம் வரும் டிசம்பர் மாதத்துக்கான "நெட்' தேர்வை சிபிஎஸ்இ நடத்த உள்ளது.

பல்கலைக்கழக, கல்லூரிப் பேராசிரியர் பணியிடங்களில் சேருவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகையைப் பெறுவதற்கும் "நெட்' தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

இடைநிலை ஆசிரியர்கள் 2,408 பேர் விரைவில் தேர்வு. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

அரசு பள்ளிகளில் பணியமர்த்த இடைநிலை ஆசிரியர்கள் 2ஆயிரத்து 408 பேர் விரைவில் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று அறிவித்துள்ளது

.இடைநிலை ஆசிரியர்கள்தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 12 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. ஆசிரியர் தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே வெளியிட்டது. விரைவில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட இருக்கிறார்கள்.

அரசு வங்கிகளில் கிளார்க் பணியில் சேருவதற்கான IBPS தேர்வு அறிவிப்பு...


இந்தியாவில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கிளார்க் பணியில் சேருவதற்கு Institute of Banking Personnel Selection (IBPS) நடத்தும் பொது எழுத்துத்தேர்வு என்ற தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.
இத்தேர்வு வருடத்துக்கு ஒரு முறை மட்டும் நடத்தப்படும்.CWE Clerks-IV தேர்வு பற்றிய அறிவிப்பை IBPS அறிவித்துள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பதவி: Clerical Cadre (CWE Clerks -IV)

வயதுவரம்பு: 01.08.2014 தேதியின்படி 18-28க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின் படி தளர்வு அளிக்கப்படும்.

நின்று கொண்டே பாடம் எடுக்க வேண்டும் : கிடுக்கிப்பிடி உத்தரவுகளால் தடுமாறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள்



வகுப்பறைகளில் நின்று கொண்டே பாடம் எடுக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்படுவதால் தனியார் பள்ளிகளில் ஆசிரியர், ஆசிரியைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.



தமிழ்நாட்டில் 2011ம் ஆண்டு முதல் சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதனால் அரசு பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் பாடத்திட்டத்தில் எவ்வித வித்தியாசமும் இல்லை. இந்நிலையில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 அரசுத் தேர்வுகளில் மாணவ, மாணவியரை அதிக மதிப்பெண்கள் எடுக்க வைப்பது தான் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வழிவகுக்கும் என்பதால் தனியார் பள்ளிகள் அனைத்தும் மதிப்பெண்களை உற்பத்தி செய்யும் மிஷின்களாக மாணவர்களை மாற்றி வருகின்றன.

போலி சுற்றறிக்கை யு.ஜி.சி., அறிவிப்பு

'நாடு முழுவதும் உள்ள பல்கலைகளில், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் நியமனம் மற்றும் பதவி உயர்வு குறித்து வெளியான சுற்றறிக்கை போலியானது' என, பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை, 15ம் தேதி, எம்.பில்., - பி.எச்டி., மற்றும் எம்.டெக்., படிப்புகளை நடத்தும், அனைத்து அரசு, தனியார், நிகர்நிலை, திறந்தநிலை மற்றும் மத்திய பல்கலைகளில், இணை பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பதவி உயர்வு, நியமனம் தொடர்பாக, யு.ஜி.சி., பெயரில், தோரத் என்பவர் வெளியிட்டதாக, ஒரு சுற்றறிக்கை வெளியாகியிருந்தது. இந்த சுற்றறிக்கை, சில பல்கலைகள், கல்லுாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. 'இந்த சுற்றறிக்கை போலியானது. இதற்கு எவ்வித அங்கீகாரமும் கிடையாது' என, யு.ஜி.சி., தற்போது அறிவித்துள்ளது.

செப்.,6,7ல் அறிவியல் ஆய்வு விருதிற்கான மாநில கண்காட்சி:

"பள்ளி மாணவர் களுக்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதிற்கான மாநில கண்காட்சி, திருச்சியில் செப்.,6,7 தேதிகளில் நடக்கிறது, ”என, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் அய்யம்பெருமாள் தெரிவித்துள்ளார்.

அவரது சுற்றிக்கை: 2013 14ம் ஆண்டிற்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதிற்காக, மாவட்ட அளவில் கண்காட்சி நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களின் படைப்புகள் செப்.,6,7ல் திருச்சி ஷிவானி இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில்

எட்டாம் வகுப்பு தனித் தேர்வு செப்.25-இல் தொடக்கம்:

தனித் தேர்வர்களாக எழுதும் மாணவர்களுக்கான எட்டாம் வகுப்புத் தேர்வு செப்டம்பர் 25-ஆம் தேதி தொடங்கும் என, சென்னையிலுள்ள அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகம் அறிவித்துள்ளது

இளநிலை கல்வியியல் மற்றும் முதுகலை பட்டம் வெவ்வேறு கால அட்டவணையில் பயின்று தேர்ச்சி பெற்றால் - முதுகலை ஆசிரியர் பணிக்கு தகுதி - ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு.

click here TRB LETTER NO. 1358 / ஆ1 / 2012, நாள். 11092012

வெளி மாநில கல்விச்சான்றிதழ்கள் மதிப்பீடு செய்வது குறித்து தமிழக அரசு உத்தரவு!

ஆசிரியர் கல்வி - கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரள மாநிலங்களில் ஆசிரியர் கல்வி பட்டய பயிற்சி பயின்ற மாணவர்களின் சான்றிதழ்கள், தமிழக அரசால் வழங்கப்படும் ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சிக்கு இணையானது என சான்றளிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவு

GO.61 SCHOOL EDUCATION (ERT) DEPT DATED.07.07.2014 - D.T.Ed., EVALUATION FOR OTHER STATE STUDENTS REG ORDER (PAGE 1 TO 4) CLICK HERE...


GO.61 SCHOOL EDUCATION (ERT) DEPT DATED.07.07.2014 - D.T.Ed., EVALUATION FOR OTHER STATE STUDENTS REG ORDER (PAGE 5 TO 8) CLICK HERE...

 

சான்றிதழ் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி?

ஒருவருடைய பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப்பள்ளி மதிப்பெண் சான்றிதழ் எதிர்பாராத வகையில் தொலைந்துவிட்டால் அல்லது தீவிபத்து, வெள்ளம், கரையான் போன்றவற்றால் சிதிலமாகி இழக்க நேரிட்டால் அதன் நகலை பெற முடியும். அதற்கான நடைமுறை வழிகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

* முதலில் மனுதாரர் தங்கள் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் அளிக்க வேண்டும்.

* அடுத்து தொலைத்துவிட்ட விவரத்தை தினசரி பத்திரிகையில் அறிவிப்பு விளம்பரம் செய்ய வேண்டும்.

* இதற்கு குறைந்தது ரூ.500 வரை செலவழிக்க நேரிடும்.

சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளில் கட்டணம் நிர்ணயிக்க குழு: தமிழக அரசுக்கு உத்தரவு


தமிழகத்தில் உள்ள சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான குழுவை, 3 மாதங்களுக்குள் நியமிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக, பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளின் நிர்வாக சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விவரம்:

பெயர் மாற்றம் செய்ய மறுத்த அதிகாரியின் உத்தரவை ரத்து செய்த ஐகோர்ட் கிளை


திருநங்கையின் பள்ளிக் கல்வி சான்றிதழ்களில், பெயர் மாற்றம் செய்ய மறுத்த, அரசு தேர்வுத்துறை அதிகாரியின் உத்தரவை, மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது. மதுரை ஆண்டாள்புரம், ஸ்வப்னா, மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: நான் ஆணாக பிறந்தேன். நாசர் என பெயர் வைத்தனர். உடல்ரீதியாக பெண் தன்மைக்குரிய மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்தேன். மும்பையில் பாலின மாற்றத்திற்குரிய ஆபரேஷன் செய்தேன். திருநங்கை என்பதற்கு அரசு மருத்துவமனை சான்றளித்துள்ளது. தற்போது, மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வியில் எம்.ஏ., படிக்கிறேன். நான், அரசு மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பித்தேன். பள்ளிக் கல்விச் சான்றிதழ்களில் உள்ள பெயருக்கும், தற்போதைய பாலியல் ரீதியான அடையாளத்திற்கும் மாறுபாடு நிலவுவதாகக்கூறி, வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. மனரீதியாக பிரச்னை ஏற்படுகிறது. பெயர் மாற்றம்: நாசர் என்பதற்கு பதிலாக ஸ்வப்னா என, கல்விச் சான்றிதழ்களில் பெயர் மாற்றம் செய்ய பள்ளிக் கல்வி செயலரிடம் விண்ணப்பித்தேன்.

பொதுச்செயலரின் கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டாரக்கூட்டம் அழைப்பு


தினம் ஒரு மூலிகை

ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும். சந்தையில் விலை மலிவாக கிடைக்கும் மூலிகைச்சாறு மற்றும் பழரசங்களில் (செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டவை) எந்த ஒரு சத்துக்களும் கிடைக்காது. நோய்கள் தான் பெருகும். ஒவ்வொரு நாளும் நாம் அருந்த வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு என்னவென்று பார்க்கலாம்.

திங்கள் – அருகம்புல்

ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.
அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

செவ்வாய் – சீரகம்

பயனுள்ளஅரசு மற்றும் அரசு சாரா வெப்சைட்கள் சில- அறிவோம்

நம்மில் பலருக்கு தமிழக அரசின் பல வெப்சைட்டுகள் உள்ளதே என்று தெரியாது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு பலர்

அதை பயன்படுத்தாமலே உள்ளனர் எனலாம்.தமிழக அரசின் பயனுள்ள சில வெப்சைட்களும், மற்றும் பயனுள்ளஅரசு சாரா வெப்சைட்கள் சிலவற்றின் விபரம் கீழே...

சான்றிதழ்கள்
1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?l
an=ta

2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta

3) வில்லங்க சான்றிதழ் http://www.tnreginet.net/igr/
webAppln/EC.asp?tams=0

புதிய பென்ஷன் திட்டத்தின்படி, குடும்ப ஓய்வூதியம் இல்லை

தஞ்சாவூரைச் சேர்ந்த ஆசிரியர் பி.ராஜா என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தமிழ்நாடு மாநில முதன்மை கணக்காளர் அலுவலகத்தில் கிராஜுவிட்டி தொடர்பாக தகவல் கேட்டிருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட விளக்கத்தில், தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978-க்கு உட்பட்ட அரசு ஊழியர்களின் ஓய்வூதிய பயன்கள் தொடர்பான வேலைகளை மட்டுமே தாங்கள் பார்த்து வருவதாகவும் மற்ற திட்டத்தின் (புதிய பென்ஷன் திட்டத்தில்) கீழ் உள்ள ஊழியர்கள் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வரமாட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

8 மாதம் ஆகியும் வெளியிடப்படாத டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முடிவு.

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முடிந்து 8 மாதங்கள் ஆகியும் முடிவுவெளியிடப்படாததால் அரசு வேலையை எதிர்நோக்கியிருக்கும் 6 லட்சம் பட்டதாரிகள் தவிப்பில் உள்ளனர்.துணை வணிக வரி அதிகாரி, சார்-பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, வருவாய் உதவியாளர் உட்பட 19 வகையான பதவிகளில் 1064காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த 5.9.2013 அன்று அறிவிப்பு வெளியிட்டது.

இருபுறமும் சிக்கித் தவிக்கும் மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள்

மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள், நிர்வாக ரீதியான மூவகை கட்டமைப்புக்கும், கவுன்சிலர்களின் உட்கட்சி அரசியலுக்கும், பதில் சொல்ல முடியாமல் தத்தளிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள், 1.4.1990 முதல் அரசு ஆசிரியர்களாக அறிவிக்கப்பட்டனர். அப்போது முதல் இவ்வகை பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்கள், டி.ஆர்.பி. அல்லது பள்ளிக் கல்வித்துறை மூலமே நிரப்பப்பட்டு வருகின்றன.

104-க்கு இல்லை; 82-க்கு ஆசிரியர் பணியா? தி இந்து ‘உங்கள் குரலில்’ டி.இ.டி. தேர்வாளர்கள் புகார்

கடந்த வாரம் வெளியிடப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவில் 104மதிப்பெண் எடுத்த மூத்த பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பணி கிடைக்கவில்லை எனவும், 82 மதிப்பெண் எடுத்த புதியவர்களுக்கு ஆசிரியர் பணி கிடைத்துள்ளதாகவும் தி இந்து ‘உங்கள் குரலில்’ பாதிக்கப்பட்ட தேர்வாளர்கள் புகார் தெரிவித்தனர்.

2013 ஆகஸ்ட் 17, 18 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. இதில் பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் மட்டும் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. 10,736 பேர் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பணிக்கு தேர்வாகிஉள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் 104 மதிப்பெண், 99 மதிப்பெண் எடுத்த பலருக்கு ஆசிரியர் பணி கிடைக்காத நிலையில், 82 மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ஆசிரியர் பணி கிடைத்துள்ளதாக தி இந்து ‘உங்கள் குரலில்’ பாதிக்கப்பட்ட தேர்வாளர்கள் தங்களது மனக்குமுறலை தெரிவித்துள்ளனர்.

தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் விவரம்


1. ஆரோக்கியமேரி, தலைமை ஆசிரியை, செயின்ட் ஆன்ஸ் ஆரம்ப பள்ளி, ராயபுரம், சென்னை.
2. சம்பங்கி, தலைமை ஆசிரியை, அரசு நடுநிலைப்பள்ளி, கந்தனேரி, வேலூர் மாவட்டம்.
3. கந்தசாமி, தலைமை ஆசிரியர், அரசு நடுநிலைப்பள்ளி, கடப்பை, விழுப்புரம் மாவட்டம்.
4. செல்வராஜு, பட்டதாரி ஆசிரியர், ஆனந்தராஜு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி, மரைங்கநாயநல்லூர், நாகை மாவட்டம்.

2 மாதங்களுக்கு ஒரு முறை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் சரிபார்ப்பு.


ஆசிரியர்களின் பணிப் பதிவேடுகளை 2 மாதங்களுக்கு ஒரு முறை சரிபார்த்து உறுதி செய்ய தொடக்க கல்வித் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஊராட்சி, நகராட்சி, அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் அந்தந்த ஒன்றியத்தின் உதவி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த பணி பதிவேடுகளில் ஆசிரியர்களின் விடுப்பு தொடர்பான பதிவுகள் உரிய காலத்தில் மேற்கொள்ளப்படாமல் இருப்பதாக தொடக்க கல்வி இயக்குநருக்கு புகார்கள் சென்றன.

அதன் அடிப்படையில் தமிழக தொடக்க கல்வித் துறை இயக்குநர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:உதவி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிப் பதிவேடு களை உரிய காலத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண் டும்.2 மாதங்களுக்கு ஒரு முறை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் சரிபார்ப்பு

நல்லிணக்க நாள் உறுதிமொழி நாளை காலை 11மணிக்கு மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு

DSE - OBSERVANCE OF SADBHAVANA DIWAS 2014 REG INSTRUCTIONS CLICK HERE...

கிராஜுவிட்டி, குடும்ப ஓய்வூதியம் இல்லாத புதிய பென்ஷன் திட்டம்: 2 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பாதிப்பு

புதிய பென்ஷன் திட்டத்தில் கிராஜுவிட்டி, குடும்ப ஓய்வூதியம் இல்லாததால் தமிழகத்தில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் உள்பட 2 லட்சம் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசுப் பணியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்கு பிறகும், தமிழக அரசுப் பணியில் 2003 ஏப்ரல் 1-க்கு பிறகும் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் புதிய ஓய்வூதிய திட்டத்தின் (என்.பி.எஸ்.) கீழ் சேர்க்கப்படுகின்றனர்.

புதிய பென்ஷன் திட்டத்தின்படி, அரசு ஊழியரின் அடிப்படைச் சம்பளம், தர ஊதியம், அக விலைப் படி ஆகியவற்றில் ஒவ்வொரு மாதமும் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு பங்களிப்பு ஓய்வூதிய நிதியில் (சி.பி.எப்.) சேர்க் கப்படுகிறது. அதே தொகைக்கு இணையான தொகையை அந்த ஊழியரின் கணக்கில் செலுத்து கிறது. இவ்வாறு சேரும் தொகை யில் 60 சதவீதம், அந்த ஊழியர் ஓய்வு பெறும்போது மொத்தமாக வழங் கப்படும். மீதமுள்ள 40 சத வீதத் தொகை, பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு மாதாமாதம் ஓய்வூதியமாக அவருக்கு அளிக்கப்படும்

சுந்தரனார் பல்கலைக்கழகம்-பட்டம்பெற விண்னப்பம் அனுப்பலாம்


பிரதமர் அறிவித்த பள்ளிக் கழிவறை திட்டம் : நிறுவனங்களிடம் இருந்து குவிகிறது நிதியுதவி




இந்திய சுதந்திர தின விழா உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த பள்ளிகளில் கழிவறை அமைப்பதற்கான திட்டத்துக்கு பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து நிதியுதவி குவிகிறது.

பிரதமரின் சுதந்திர தின விழா உரையின் போது, நாட்டில் உள்ள பள்ளிகளில் கழிவறை கட்ட நிதியுதவி செய்யுங்கள் என்று பெரு நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்த அன்றே, ஓரியண்டல் வர்த்தக வங்கி ரூ.2 கோடியை அறிவித்தது.

தற்போது, டாடா நிறுவனம் சுமார் 10 ஆயிரம் பள்ளிகளில் இரு பாலருக்கும் தனித்தனியாக கழிவறைகள் கட்ட 100 கோடி ரூபாய் நிதியுதவி செய்வதாகக் கூறியுள்ளது.

மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி: உயர்நீதிமன்றம் உத்தரவு

3 ஆண்டுகளுக்கு முன்பு பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பணி நீக்கம் செய்யப்பட்ட 13,500 பணியாளர்களுக்கும், வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் , மாற்றுப் பணி வழங்க வேண்டும் என நீதிபதிகள் பால் வசந்தகுமார், சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளது.

RTI :PF PART FINAL CLARIFICATION BY AG

TNTET -2013:New RTI letter -TRB


ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இருந்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்

CLICK HERE - TRB - TNTET - RTI ANSWERS

தொடக்கக் கல்வி - ஆசிரியர்களுக்கு வாகன மற்றும் கணினி முன்பணம் வழங்குதல் சார்ந்த அறிவுரைகள்

DEE - LOAN & ADVANCES - COMPUTER / VEHICLE ADVANCES PROPOSAL SENDING REG INSTRUCTIONS CLICK HERE... 

தொடக்கக் கல்வி - ஊராட்சி / அரசு / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் பராமரித்தல் மற்றும் பதிவுகள் மேற்கொள்ளுதல் சார்பான உத்தரவு

DEE - PU / MUNICIPAL / GOVT TEACHERS' SERVICE REGISTER MAINTENANCE & ENTRIES REG INSTRUCTIONS CLICK HERE... 

சிறந்த பள்ளிகளுக்கு பரிசு: தேர்வு செய்யும் பணி தீவிரம்

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ. 62,000 கோடி ஒதுக்கீடு


பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ. 62,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி.
  தஞ்சாவூர் அருகே வல்லம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான வெற்றி உங்கள் கையில் வழிகாட்டும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்து அவர் மேலும் பேசியது:

ஹரியானா மாநில அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆகிறது


ஹரியானா மாநில அரசு ஊழியர்களுக்கு 25 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அவர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட இருக்கிறதுஎன்று மாநிலமுதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா அறிவித் திருக்கிறார்

ஹரியானா மாநில அரசு ஊழியர்களின் பல்வேறு சங்கங்கள் ஒன்றுபட்டு கடந்த பல ஆண்டுகளாகவே தங்கள் கோரிக்கைகளுக்காகப் போராடி வந்தன. ஹரியானா மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெறவிருப்பதை ஒட்டி, மாநில அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மாநில முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா

9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆக., 26ல் அடைவு ஆய்வு தேர்வு


அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் சார்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும், 9ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, நடப்பு கல்வியாண்டிற்கான அடைவு ஆய்வு தேர்வு, வரும், 26ம் தேதி நடைபெறும் என, கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பள்ளிகளில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின், கல்வித்தர மேம்பாட்டினை அளவிடும் பொருட்டு, அடைவு ஆய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இதில், ஒரு வட்டாரத்திற்கு, மூன்று பள்ளிகள் வீதம் தேர்வு செய்யப்பட்டு, அப்பள்ளிகளில் உள்ள, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆங்கிலம், தமிழ்,

டி.இ.ஓ., உத்தரவை மதிக்காததால் பள்ளி தலைமை ஆசிரியர் 'சஸ்பெண்ட்'


டி.இ.ஓ., உத்தரவை மதிக்காததால், பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை தாலுகா உளுந்தாண்டார்கோயில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியராக சிவானந்தராஜாவும், இளநிலை பட்டதாரி ஆசிரியராக விமலாவும் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களுடைய வருகை பதிவேட்டில் விமலாவின் பெயர் முதலாகவும், சிவானந்தராஜாவின் பெயர் இரண்டாவதாகவும் இருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், டி.இ.ஓ., மதிவாணன், கடந்த மாதம் 4ம் தேதி பள்ளி வந்து விசாரித்து, சீனியாரிட்டி அடிப்படையில் வருகை பதிவேடு எழுதும்படி தலைமை ஆசிரியர் அருள்மொழியிடம் கூறிவிட்டு சென்றார்.

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்குகல்வி அலுவலர் மேல்முறையீடு


கும்பகோணம் பள்ளி தீ விபத்தில், 94 குழந்தைகள் பலியான வழக்கில், கீழ் கோர்ட் விதித்த தண்டனையை எதிர்த்து, மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை, மதுரை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது.

மாணவர்களுக்கு பஸ் பாஸ் கிடைப்பதில் தாமதம்! "ஸ்மார்ட் கார்டு' வழங்க வாய்ப்பு இல்லை


இலவச பஸ் பாஸ் கிடைப்பதில் நிலவும் தாமதத்தால், பள்ளி மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பஸ் பாஸ் "பிரின்ட்' செய்வதற்கான டெண்டர் விடும் பணி
தாமதமானதால், பழைய முறைப்படியே வழங்கப்படுகிறது. இதன் காரணமாக, இந்தாண்டும், "ஸ்மார்ட் கார்டு' வடிவில் வழங்க வாய்ப்பு இல்லாத சூழலே நிலவுகிறது.

தேசிய திறனாய்வு தேர்வு 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வுக்கு 28ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம். தேசிய திறனாய்வுத் தேர்வு இந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி நடக்கிறது.

பள்ளிகளில் கழிவறை கட்ட ரூ.100 கோடி நன்கொடை: டிசிஎஸ்

நாடு முழுவதும் உள்ள மகளிர் பள்ளிகளில் சுகாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, 10,000 கழிவறைகள் கட்ட ரூ.100 கோடி நன்கொடையை மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ் திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

ஆசிரியர் தின கட்டுரைப் போட்டி; ஆக.,30 இறுதி நாள்

வரும் செப். 5 ல் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கட்டுரை போட்டிகளில் பங்கேற்க மாணவர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்கள் ஆகியோருக்கு அறிவியல் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக அறிவியல் இயக்க மாநில கல்வி உபகுழு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாகவும், ஆய்வுக்கு உட்படுத்தும் சிந்தனையை வளர்க்கும் விதமாகவும் கல்வி இருக்க வேண்டும்.
அதற்காக வரும் செப். 5ல் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்கள் பங்கேற்கும் கட்டுரை போட்டி நடத்தப்படுகிறது

ஆசிரியர் பேரணி-ஆகஸ்ட்-05-2014 இதழ் ( தமிழ்நாடுஆசிரியர் கூட்டணியின் அதிகாரபூர்வ இதழ்)

படிக்க இங்கே கிளிக் செய்யவும்

பணி நியமன ஆணைகள், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது

ஓரிரு வாரங்களில் ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஓரிரு வாரங்களில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓரிரு வாரங்களில் ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு


ஆங்கிலவழிக் கல்விக்கு தனி ஆசிரியர்கள் தேவை என்ற கோரிக்கை: கல்வி அதிகாரிகள் நிராகரிப்பு


ஆங்கில வழிக்கல்விக்கு தனி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்' என்ற கோரிக்கை, தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளி ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது. ஆனால், தனி ஆசிரியர்கள் தேவை இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.

பள்ளிக்கல்வித் துறை சார்பில், மாநிலத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தை விரிவுப்படுத்தும் வகையில், கடந்தாண்டு முதல் உயர்நிலைப் பள்ளிகளிலும் துவங்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் 1,141 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.கோவையில் கடந்த இரு ஆண்டு களில், 249 தொடக்க மற்றும்

பொதுத்துறை வங்கிகளில் பெண் பணியாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பணியிட மாற்றம் : அரசு பரிந்துரை


நாட்டிலுள்ள பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றும் பெண்கள் தங்களின் விருப்பத்துக்கு தக்க வாறு பணியிட மாறுதல் பெறுவதற்கு ஆவன செய்ய வேண்டுமென அனைத்து வங்கிகளுக்கும் மத்திய நிதி அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

சமீபத்தில் உருவாக்கப்பட்ட தேசிய மகளிர் வங்கி உள்ளிட்ட 27 பொதுத்துறை வங்கி களுக்கு சொந்தமாக நாடு முழுவதிலும் லட்சக்கணக்கான கிளை வங்கி கள் உள்ளன.இவற்றில் சுமார் 2.5 லட்சம் பெண் பணியாளர்கள் வேலை செய்துவருகின்றனர். திடீர்இடமாற்ற உத்தரவையடுத்து, பெற்றோர் வசிக் கும் இடத்தை விட்டு பிரிந்து தொலைதூர பகுதிகளுக்கு மாற்ற லாகி செல்லும் திருமணமாகாத பெண் பணி யாளர்கள், தாங்கள் பாதுகாப்பற்ற சூழலில்இருப்பதாக உணர்கின் றனர்.

விடைத்தாள் பக்கங்கள் மாயம் அதிகாரிகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரத்தை சேர்ந்த பொன்னுசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என்னுடைய மகன் பிரகாஷ், புதுக்கோட்டை செயின்ட் மேரீஸ் பள்ளியில் படித்தார். கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு எழுதினார். 1080 மதிப்பெண்கள் பெற்றார்

ஓசூர் பேடரப்பள்ளி நடுநிலைப்பள்ளியில் 15.08.32014 அன்றைய 68வது சுதந்திர தின விழா கொண்டாட்ட பதிவுகள்

மா.க.ஆ.ப.நி - கல்விசார் கணினி வளங்கள் தயாரித்தல் சார்பான பயிற்சி பணிமனை 21.08.2014 முதல் 23.08.2014 வரை சென்னையில் நடைபெறவுள்ளது

SCERT - ICT TRAINING FOR TEACHERS FROM 21.08.2014 TO 23.08.2014 @ SIEMAT HALL, CHENNAI REG PROC CLICK HERE...

SCERT - ICT TRAINING PARTICIPANTS LIST CLICK HERE..

மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு: விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து அரசு தேர்வுகள்
மண்டலத் துணை இயக்குனரின் செயலர் ஆசிர்வாதம் செய்திக்குறிப்பு:

web stats

web stats