rp

Blogging Tips 2017

தொடக்கக் கல்வி - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 7அம்சக் கோரிக்கையை நடைபெறும் போராட்டத்தால் எந்த பள்ளியும் மூடப்படக்கூடாது எனவும், அனைத்து பள்ளிகளுக்கும் மாற்றுப்பணி மூலம் ஏற்பாடுகள் இயக்குனர் உத்தரவு

DEE - TESTF 2 DAYS STRIKE ON 25.2.2014 & 26.2.2014 REG DEE INSTRUCTIONS CLICK HERE...

டிட்டோஜாக் போராட்டத்தில் பங்கேற்போரின் விபரம் அடங்கிய படிவம்

TETOJAC - DETAILS OF PARTICIPANTS REG FORM CLICK HERE...

 

டிட்டோஜாக் போராட்ட சுவரொட்டி


7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு உயர்வு

தமிழக பிரிவைச் சேர்ந்த ஏழு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். இது குறித்து தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் வெளியிட்ட உத்தரவு:

பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு மார்ச் 2014ல் எழுதவுள்ள மாணவர்களுக்கான தேர்வு எண் மற்றும் பெயர் (SSLC NOMINAL ROLL MARCH 2014) பட்டியல் வெளியீடு

மார்ச் 2014ல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவ / மாணவியர்களின் தேர்வு எண் மற்றும் பெயர் பட்டியல் WWW.TNDGE.IN என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட USER ID / PASSWORDஐ
கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அ.தே.இ - பொதுத் தேர்வுகள் - மேல் நிலை மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் சார்பாக ஆய்வு அலுவலர்கள் கூட்டம் 25.2.2014 அன்று சென்னையில் நடைபெற உள்ளது, கூட்டத்தில் அலுவலர்கள் தவறாமல் கலந்துகொள்ள இயக்குனர் உத்தரவு

DGE - HSC / SSLC PUBLIC EXAM MARCH / APRIL 2014 REG INSPECTIONS OFFCERS MEETING ON 25.02.2014 REG PROC CLICK HERE...

தொடக்கக் கல்வி - 2013-14 - பகுதி - II திட்டத்தின் கீழ் நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வுக் கூடங்களை நிறுவது சார்பான உத்தரவு

DEE - ESTABLISHMENT OF MATHS LEARNING LAB IN MIDDLE SCHOOLS REG PROC CLICK HERE...

6 கட்டங்களாக தேர்தலை நடத்த முடிவு மக்களவைத் தேர்தல் அறிவிப்பு 10 நாட்களில் வெளியாகிறது!

மக்களவைத் தேர்தல் தேதியை 10 நாட்களில் வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் மற்றும் அதிகாரிகள் மக்களவைத் தேர்தல் தொடர்பான இறுதிகட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
சில தினங்களுக்கு முன் தேர்தல் கட்டுப்பாடுகள் தொடர்பாக, அரசியல் கட்சித் தலைவர்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனையில் ஈடுபட்டது. தொடர்ந்து மாநில தலைமைச் செயலர்கள், காவல்துறை தலைவர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையர்கள் அடுத்த 3 மாதங்களில் வரஉள்ள பள்ளி, கல்லூரி தேர்வுகள் மற்றும் பண்டிகைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

உறுதியாக தொடக்கக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடக்கும்-தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் செ முத்துசாமி

தொடக்கக்கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த தொடர்ந்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி அவர்களின் முயற்சிக்கு பலன். இன்று இயக்குனர்.சென்ற வருட முன்னுரிமைப்பட்டியல் படி தேர்ந்த்தோர் பட்டியல் தாயாரித்து வெளியிட இயக்குனர் நடவடிக்கை

தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி / தமிழ் ஆசிரியர் பதவி உயர்விற்கு 01.01.2013 நிலவரப்படி தகுதியுடைய தேர்ந்தோர்ப் பட்டியல் தயாரித்து வெளியிட இயக்குனர் உத்தரவு

DEE - DEE ORDERED TO ALL OFFICIALS PREPARE BT / TAMIL PANDIT PROMOTION PANEL AS ON 01.01.2013 & RELEASE THE FRESH PANEL AS PER 10+2+3 / 11+1+3 REG PROC CLICK HERE...

 

தொடக்கக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு தாமதம் ஏன்? பொதுச்செயலர் செ முத்துசாமி தகவல்

இடைநிலை மற்றும் தகுதிவாய்ந்த  தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வும் இன்றைய நடுநிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர் கலந்தாய்வுடன் நடத்தப்படும் என பெரிதும் ஆவலாக எதிபார்க்கப்பட்டது.இதுகுறித்து நமது பொதுச்செயலர் திருமிகு செ முத்துசாமிஅவர்கள் ஏற்கனவே தொடக்கக்கல்வி இயகுனரிடம் முறையிட்டது அனைவரும் அறிந்ததே,

வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்


அவசர அறிவிப்பு - NMMS Exam Time Changed.

EXAM CONDUCTED IN AFTERNOON INSTED OF FORE NOON AS ALREADY ANOUNCED NMMS - தேசிய திறனாய்வுத் தேர்வு 22.02.2014 அன்று நடைபெறுதம் நேரம் கீழ்கண்டவாறு மாற்றப்படுகிறது.

முதல் தாள் (Mental Ability Test) - 2.00 PM to 3.30 PM

இடைவேளை (Break Time) -3.30 PM to 4.00 PM

இரண்டாம் தாள்(Scholastic Aptitude Test ) - 4.00 PM to 5.30 PM

NMMS EXAM தேர்வு நடைபெறும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே காலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது தற்போது பிற்பகல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DEE-பதவிஉயர்வு கலந்தாய்வு.... 2011 - 12ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 65 நடுநிலைப்பள்ளிகளில் தொடக்கக்கல்வித்துறையின் கிழ் உள்ள 55 நடுநிலைப்பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் பதவி உயர்வும், அதனால் ஏற்படும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்குமான கலந்தாய்வு, 01.01.2013 தேதிய பேணலின் அடிப்படையில் நாளை(22.02.2014) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டதாரி பதவி உயர்வு குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை

click here to download the DEE proceeding

த.ப.க.சா.நி.பணி - அரசு/நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை / சிறப்பாசிரியர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் - பதவி உயர்வு அளிக்க தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் 01.01.2013 அன்றைய நிலவரப்படி வெளியிடுதல் சார்பு

CLICK HERE TO DOWNLOAD - DSE - 7703/C5/E1/12/DATED.21.02.2014 DIRECTOR PROC REG

CLICK HERE-TAMIL PANEL LIST

CLICK HERE-ENGLISH PANEL LIST

CLICK HERE-MATHS PANEL LIST

CLICK HERE-SCIENCE PANEL LIST

CLICK HERE-SOCIAL PANEL LIST

டிட்டோஜாக் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்ட வழிகாட்டு நெறி முறைகள்

55 நடுநிலைப்பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் பதவி உயர்வும், அதனால் ஏற்படும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்குமான கலந்தாய்வு,

2011 - 12ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 65 நடுநிலைப்பள்ளிகளில் தொடக்கக்கல்வித்துறையின் கிழ் உள்ள 55 நடுநிலைப்பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் பதவி உயர்வும், அதனால் ஏற்படும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்குமான கலந்தாய்வு, 01.01.2013 தேதிய பேணலின் அடிப்படையில் நாளை(22.02.2014) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டதாரி பதவி உயர்வு குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை.

டிட்டோஜாக் சுற்றறிக்கை!


திட்டமிட்டபடி டிட்டோஜாக் போராட்டம் தொடரும்

* 24.02.2014 அன்று மாலை 5மணிக்கு மாவட்ட அளவில் வேலை நிறுத்த ஆயுத்தக் கூட்டம் நடைபெறும். இதில் டிட்டோஜாக் இணைப்பு சங்கங்களின் மாவட்ட/ வட்ட நிரவாகிகள் பங்கேற்பு

* 25.02.2014 அன்று முதல் 28.02.2014 அன்று முடிய பிரச்சாரம் மற்றும் ஆசிரியர் சந்திப்பு கூட்டம் நடைபெறும்.

* 02.03.2014 அன்று மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெறும்.

* 03.02.2014 அன்று டிட்டோஜாக் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் சென்னையில் சந்திப்பது என முடிவெடுக்கப்பட்டது.

டிட்டோஜாக் - பள்ளிக்கல்வித்துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை முடிவு, திட்டமிட்டப்படி போராட்டம் தொடரும் - டிட்டோஜாக் அதிரடி முடிவு

டிட்டோஜாக் தலைவர்கள் இன்று காலை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. அனைத்து கோரிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு கோரிக்கைக்கும் தனித்தனியாக அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. ஆயினும் நிதிச் சார்ந்த கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்க முடியாது எனவும் அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பிரச்சனைகள் எனில் உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதாகவும், நிதிச்சார்ந்த தீர்வுகள் உடனடியாக தீர்க்க இயலாது எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அடுத்தக்கட்ட முடிவு குறித்து விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு. செ. முத்துசாமி தெரிவித்தார். பள்ளிக்கல்விச் செயலாளருடனான சந்திப்பின் போது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொறுப்பாளர்களும் உடன் இருந்தனர். மூன்று நபர்க் குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட டிட்டோஜாக் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை நிதித்துறை செயலாளருடன் பேசி வெளியிட ஆவணச் செய்வதாக பள்ளிக்கல்விச் செயலர் தெரிவித்தாக தெரிவித்தார்

அரசுத் தரப்பில் கால அவகாசம் வேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு, திட்டமிட்டப்படி போராட்டம் தொடரும் - டிட்டோஜாக் அதிரடி முடிவு


நேற்று தொடக்கக் கல்வி இயக்குனர் அளவில் நடைபெற்ற கூட்டத்திலும், இன்று நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் மதிப்புமிகு சபிதா அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாமல் நிறைவடைந்தது. இதையடுத்து சென்னையில் கூடிய டிட்டோஜாக் உயர்நிலைக் குழு கூட்டத்தில் முதலமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் செய்யும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வருகிற மார்ச்-6ல் திட்டமிட்டபடி மிகப்பெரிய ஒரு நாள் வேலை நிறுத்தத்தை வெர்றிகரமாக நடத்த டிட்டோஜாக் முடிவு செய்துள்ளது.

ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாளை சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது

2013-14ம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இடைநிலை ஆசிரியர் பதவியில் இருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான
கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நாளை காலை 10மணி முதல் நடைபெற உள்ளது.
பதவி உயர்வு மூலம் நிரப்ப எதிர்ப்பார்க்கப்படும் முன்னுரிமைப் பட்டியல் விவரம்:
தமிழ் - 179வரை

ஆசிரியர்களின் பி.எட்., கல்வித் தகுதியை பறிக்க முடிவு

டி.இ.டி., தேர்ச்சி பெற்று, அரசுப் பணி கிடைக்காமல் காத்திருப்போர், அடுத்த பணி நியமனத்தில் முன்னுரிமை கோர முடியாது

"ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்று, அரசுப் பணி கிடைக்காமல் காத்திருப்போர், அடுத்த பணி நியமனத்தில், முன்னுரிமை கேட்க முடியாது. மதிப்பெண்  அடிப்படையில் தான், ஆசிரியர் பணி நியமனம் இருக்கும்' என, ஆசிரியர் தேர்வு வாரிய  (டி.ஆர்.பி.,) வட்டாரம் தெரிவித்தது. 

டி.இ.டி., தொடர்பான, அரசின் அறிவிப்புகள் அனைத்தும்,மாறி மாறி வருவதால், இந்த விவகாரத்தில், முதல்வர் அவசரப்பட்டு விட்டதாகவும், தங்களை,அரசு அறிவிப்புகள் குழப்புவதாகவும், தேர்வு எழுதியவர்கள் கூறுகின்றனர். தேர்வு எழுதியவர்களின் கேள்விக் கணைகளைச் சமாளிக்க முடியாமல், டி.ஆர்.பி., சிக்கித் தவிக்கிறது.கடந்த ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில், 27 ஆயிரம் பேரும், சமீபத்தில், முதல்வர் அறிவித்த, 5 சதவீத
மதிப்பெண் சலுகையின் காரணமாக, 47 ஆயிரம் பேரும், தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு: 10 ஆயிரம் பேர் பார்டரில் பாஸ்

ஆசிரியர் தகுதித் தேர்வில் 10 ஆயிரம் பேர், குறைந்தபட்ச அளவான 82 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் 26 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ச்சி பெற்றனர். 

அப்போது தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதம் (150-க்கு 90 மதிப்பெண்) ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.அதன்பின்னர், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மட்டும் 5 சதவீதம் சலுகை அளித்து,தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக குறைக்கப்பட்டது.அதன்படி, குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 150-க்கு 82.5 வரும், ஆனால், தகுதித்தேர்வில் ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண்தான் வழங்கப்படும். அரை மதிப்பெண் வழங்க வாய்ப்பு இல்லை

18 மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதையொத்த பணியிடங்களுக்கான பதவி உயர்வு / பணி மாறுதல் நிரப்பி அரசு உத்தரவு

தமிழகத்தில் காலியாக உள்ள 18 மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதையொத்த பணியிடங்களை பத்வி உயர்வு / பணி மாறுதல் மூலம் நிரப்பி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
*மதுரை முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திரு.சீனிவாசன் அவர்கள் சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

டிட்டோஜாக் - பள்ளிக்கல்வித்துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை முடிவு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த நிலைபாடு விரைவில் அறிவிப்பு

டிட்டோஜாக் தலைவர்கள் இன்று காலை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. அனைத்து கோரிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு கோரிக்கைக்கும் தனித்தனியாக அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. ஆயினும் நிதிச் சார்ந்த கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்க முடியாது எனவும் அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது

தலைமைச்செயலகத்தில் கல்வித்துறை செயலர் மதிப்பிமிகு சபிதா அவர்களுடன் டிட்டோஜாக் தலைவர்கள் பேச்சுவார்த்தை முடிந்தது

தலைமைச்செயலகத்தில் கல்வித்துறை செயலர் மதிப்பிமிகு சபிதா அவர்களுடன் டிட்டோஜாக் தலைவர்கள் பேச்சுவார்த்தை முடிந்தது.
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க இன்று மாலைடிட்டோஜாக் உயர்மட்டகூட்டம் நடைபெறுகிறது.
மூன்று நபர் கமிட்டியின் அறிக்கையை வெளியிட நடவடிக்கை எடுப்பதாக   கல்வித்துறை செயலர்  ஒப்புதல்


டிட்டோஜாக் - இன்று மாலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு, ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என அறிவிப்பு



இன்று நடைபெற்ற டிட்டோஜாக் உயர்மட்டக் குழு கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டது.
* 24.02.2014 அன்று மாலை 5மணிக்கு மாவட்ட அளவில் வேலை நிறுத்த ஆயுத்தக் கூட்டம் நடைபெறும். இதில் டிட்டோஜாக் இணைப்பு சங்கங்களின் மாவட்ட/ வட்ட நிரவாகிகள் பங்கேற்பு
* 25.02.2014 அன்று முதல் 28.02.2014 அன்று முடிய பிரச்சாரம் மற்றும் ஆசிரியர்

நிதித்துறை - படிகள் - மலை பகுதிகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு படியை (HILL & WINTER ALLOWANCES) அடிப்படை ஊதியத்தில் 10% வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு

G.O No. 47 Dt: February 20, 2014 - Allowances – Hill Allowance and Winter Allowance to employees working in places declared as Hill Stations – Enhancement – Orders – Click Here...

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமை செயலகத்தில் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்கள்

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 593பேர்களுக்கு முதுகலை தமிழ் ஆசிரியர் பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா 2 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார். மேலும், தமிழ்நாடுப் பாடநூல் மற்றும் கல்வியியல்

மாலை டிட்டோஜாக் அவசர கூட்டம் இன்று (20.2.2014) கல்வித்துறை செயலருடன் நாளைய சந்திப்பு பற்றி விவாதம்

டிக்டோஜாக்-2013-ன் முதல் வெற்றி ~

தொடக்கக்கல்வி இயக்குநருடன் டிட்டோஜாக் சந்திப்பு நிறைவடைந்தது.

மாலை டிட்டோஜாக் அவசர கூட்டம் இன்று (20.2.2014)

காலை டிட்டோஜாக் நிர்வாகிகளை தொடக்கக்கல்வி இயக்குநர் முனைவர் இளங்கோவன் நேரடியாக அழைத்து 7 அம்ச
கோரிக்கைகள் குறித்து விரிவாகபேசினார்.


மத்திய அரசு ஊழியர்களுக்கான டி.ஏ.வை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க முடிவு..!


மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 10 சதவீதம் அளவுக்கு உயர்த்துவதுடன் 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் இந்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது. மார்ச் மாதம் அறிவிக்கப்படும் உயர்வு ஜனவரி 1 ல் இருந்தும், செப்டம்பர் மாத உயர்வு ஜுலை 1 ல் இருந்தும் அமல்படுத்தப்படும். கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படி 90 சதவீதமாக உயர்ந்தது. மார்ச் மாதம் தேர்தல் தேதி

இன்றைய டிட்டோஜாக் பேச்சுவார்த்தை நிகழ்வுகள் -பாகம்-1

இன்று காலை தொடக்கக் கல்வி இயக்குனருடன் டிட்டோஜாக் மாநில பொருப்பாளர்களுடன் சந்திப்பு நடைபெற்றது. அப்பொழுது 7அம்ச கோரிக்ககள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது என்றும், அப்பொழுது இயக்குனர் போராட்டத்தை கைவிட கோரிக்கை வைத்தார். ஆனால் சங்க பொறுப்பாளர்கள் மறுத்துவிட்டனர் எனவும் தெரிவித்தார். மேலும்

இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் கல்வித்துறை செயலர் மற்றும் நிதித்துறை செயலர் ஆகியோருடன் பேசி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்து இன்று மாலைக்குள் அறிவிப்பதாக கூறியுள்ளார் என்று நமது பொதுச்செயலர் திரு.செ.முத்துசாமி  அவர்கள் தெரிவித்தார்

டிட்டோஜாக் பொறுப்பாளர்களுடன் நாளை காலை 10 மணிக்கு கல்வித்துறை செயலர் பேச்சுவார்த்தை டிட்டோஜாக் பொறுப்பாளர்கள் சென்னையில் முகாம்

இயக்குனரின் பேச்சு வாரத்தையில் முடிவு எட்டப்படாதால் இயக்குனர் அவர்கள் கல்வித்துறை முதன்மை செயலர் அவர்களை சந்தித்து காலையில் நடந்த பேச்சு வார்ததை குறித்து விளக்கினார்.பின்னர் கல்வித்துறை முதன்மை செயலர் மதிப்புமிகு சபிதா அவர்கள் நாளை காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் டிட்டோஜாக் பொறுப்பாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த ஒப்புதல் அளித்து டிட்டோஜாக் பொறுப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார் என பொதுச்செயலர் செ. முத்துசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்

டிட்டோஜாக் பொறுப்பாளர்களுடன் தொடக்கக் கல்வி இயக்குனர் சந்திப்பு, கோரிக்கை குறித்து முடிவு எட்டப்படாததால் பொறுப்பாளர்கள் சென்னையில் முகாம்


இன்று காலை தொடக்கக் கல்வி இயக்குனருடன் டிட்டோஜாக் மாநில பொறுப்பாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்பொழுது 7அம்ச கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது என்றும், அப்பொழுது இயக்குனர் போராட்டத்தை கைவிட கோரிக்கை வைத்தார். ஆனால் சங்க பொறுப்பாளர்கள் மறுத்துவிட்டனர்.

Central Government is expected to ask the seventh pay commission to consider merging 50% dearness allowance

In a bid to woo central government employees ahead of General Elections, the UPA government is expected to ask the seventh pay commission to consider merging 50% dearness allowance with basic pay of the employees.
This will form part of the terms of reference (ToR) for the Commission, to be considered by the Cabinet this week. The Commission may suggest interim relief as well.
Officials said the ToR of the Pay Commission categorically states that a proposal in this regard should be actively considered.
The hikes will be all the more appealing as the Centre is expected to increase the dearness allowance by 10% to 100% by the end of February. Usually, the DA is merged with the basic pay when the former goes beyond 50%. However, DA is 90%, but it has not been merged so far.
Assuming an employee gets Rs 100 as basic pay and Rs 100 as DA at present, the basic will rise to Rs 150, even if 50% allowance is merged. .

புத்தகம் கொண்டு வராததை, ஆசிரியர் கண்டித்ததால், தீக்குளித்த பள்ளி மாணவன்



புத்தகம் கொண்டு வராததை, ஆசிரியர் கண்டித்ததால், தீக்குளித்த பள்ளி மாணவன், ஆபத்தான நிலையில், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தேனி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்த முத்து மகன் விக்னேஷ்குமார்,14. இவர் அங்குள்ள தனியார் பள்ளியில், 9 ம் வகுப்பு படிக்கிறார். ஆங்கிலம், கணக்கு புத்தகங்கள் கொண்டு வராததால், வகுப்பாசிரியர் கண்டித்து, மாணவனை வகுப்பறைக்கு வெளியே

சரியாக பணிக்கு வராத ஆசிரியர் "சஸ்பெண்ட்'


பள்ளிக்குச் சரியாக வராமல் இருந்த, பணப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கணித ஆசிரியர், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம், பணப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர், திருமூர்த்தி, 45. இவர், சரியாக பள்ளிக்கு வருவதில்லை என, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு புகார் வந்தது. நேற்று முன்தினம்,

முறைப்படி அரசாணை வெளியீடு: மாநிலத்தின் 11வது மாநகராட்சியாக தஞ்சையும், 12வது மாநகராட்சியாக திண்டுக்கல்லும் உதயம்:

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, தூத்துக்குடி,  சேலம்,  வேலூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய 10 மாநகராட்சிகள் உள்ளன. தஞ்சை,  திண்டுக்கல் நகராட்சிகள்  மாநகராட்சியாக அந்தஸ்து உயர்த்தப்படும் என கடந்த ஆண்டு  ஏப்ரல் 10ம் தேதி சட்டசபையில் முதல் வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து  அதற்கான பணிகள் தொடங்கின. மாநிலத்தின் 11வது மாநகராட்சியாக தஞ்சையும், 12வது  மாநகராட்சியாக திண்டுக்கல்லும் நேற்று தரம்  உயர்த்தப்பட்டது. இதற்கான அரசாணையை  தஞ்சை நகராட்சி தலைவர் சாவித்ரி கோபாலிடமும், திண் டுக்கல் நகராட்சி தலைவர்  மருதராஜுவிடமும் முதல்வர் ஜெயலலிதா  நேற்று வழங்கினார். இதையடுத்து, தற்போதைய நகராட்சி தலைவராக இருக்கும் சாவித்ரி கோபால் தஞ்சை  மாநகராட்சியின்  முதல் மேயராகவும், திண்டுக்கல் நகராட்சி தலைவராக இருக்கும்  மருதராஜ், திண்டுக்கல் மாநகராட்சியின்  முதல் மேயராகவும் அவர் பதவியேற்க  உள்ளனர்.

தேர்தல் ஆணையம் அதிரடி... விரைவில் ஓய்வுபெற உள்ள ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த தடை!

நாட்டின் 15வது நாடாளுமன்றத்தின் பதவி காலம் வரும் மே மாதம் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து 16-வது நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடத்த விரிவான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இது தொடர்பாக அரசியல் கட்சிகள், மாநில தேர்தல் அதிகாரிகள் உட்பட அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார்.இதற்கிடையில், நாடாளுமன்ற தேர்தல் பணிக்கு தேவைப்படும் மனித வளம் குறித்த விவரங்கள் சேகரிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. சொந்த மாவட்டத்தில் பணியாற்றுவோர், ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுக்கு மேலாக பணியாற்றி வருவோர் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்.


1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்
முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன்
சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே
ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான்
தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை.
அதற்கு என் நிழலே போதும்!

ராஜிவ்காந்தி கொலை வழக்கு : குற்றம் சுமத்தப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய முதல்வர் உத்தரவு

ராஜிவ் காந்தி  கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட  4 பேரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் நேற்று ரத்து செய்து ஆயுள் தண்டனையாக

முதுகலை தமிழ் பாட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, 21ம் தேதி, நடைபெறுகின்றது..

முதுகலை தமிழ் பாடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, 593 பேருக்கு 21.02.14- வெள்ளிக்கிழமை கலந்தாய்வு நடைபெறுகின்றது. பணி நியமன உத்தரவு வழங்கப்படுகிறது.

முதுகலை ஆசிரியர் நியமனத்தில் உச்சகட்ட கலாட்டா: அறிவித்தது 2,895 பணியிடம்; நியமனம் 583 தான்


ஆசிரியர் தேர்வு வாரியம் - டி.ஆர்.பி., அறிவித்த, 2,895 முதுகலை ஆசிரியர்களில், 583 தமிழ் ஆசிரியர்கள் மட்டும், இன்று பணி நியமனம் செய்யப்படுகின்றனர். இதர பாட ஆசிரியர்கள் நியமனம், தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது.

கடந்த ஆண்டு ஜூலையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., போட்டி தேர்வை நடத்தியது. வழக்கமாக, மூன்று மாதங்களுக்குள், ஒட்டு மொத்த தேர்வுப் பணிகளை முடித்து, இறுதி தேர்வு பட்டியலை வெளியிடும், டி.ஆர்.பி.,க்கு, சமீப காலமாக, நேரம் சரியில்லையோ என்னவோ, தொடர்ந்து, பல்வேறு வழக்குகளில் சிக்கி, படாதபாடு படுகிறது.

ஊராட்சி பள்ளியில் குப்பை: மாணவர்கள் அள்ளும் அவலம்

சேகரமாகும் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்காமல், மாணவர்களை கொண்டு அப்புறப்படுத்தும் அவலம், மாமல்லபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அரங்கேறியது.

துர்நாற்றம்:
மாமல்லபுரத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி வளாகத்தில் சேகரமாகும் கழிவுகள், மரங்களிலிருந்து உதிரும் இலைகள் ஆகியவை குவிந்து, குப்பை அதிகரித்து வருகிறது. சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வருகிறது.பொதுவாக, பள்ளியில் சேகரமாகும் குப்பையை அகற்ற, தனிப் பணியாளரை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம்

மாறும் குழந்தைகளின் பழக்கவழக்கங்கள்: பெற்றோர்களே எச்சரிக்கை


வீட்டின் சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துகொள்ளும் குழந்தைகளின் குண நலன்களில் பெரிய வித்தியாசங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. வீட்டின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப பெற்றோருக்கு உறுதுணையாக இருந்து, தங்கள் ஆசைகளை கட்டுப்படுத்தி கட்டுப்பாடுடன் வாழும் நிலை மாறுகிறது.

குழந்தைகள், தங்கள் பெற்றோர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக இருந்தாலும் மற்ற குழந்தைகளைப் போன்று உடைகள், ஆடம்பரப் பொருட்கள், தொழிநுட்ப வசதிகள், பொழுதுபோக்கு போன்றவற்றை தங்களுடையதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற என்ணம் அதிகரித்து வருகிறது. "இரண்டு உடையை மட்டும் வைத்துக்கொண்டு கல்லுரிக்காலத்தை முடித்தேன், ஒரே சீருடையை மட்டும் வைத்துக்கொண்டு பள்ளிக்கு செல்வேன்" என்பது கடந்த

முதுகலை ஆசிரியர் நியமனத்திற்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு முடிந்து இறுதி தேர்வு பட்டியல் வெளியீடு

PROVISIONAL SELECTION LIST AFTER REVISED CERTIFICATE VERIFICATION
(Zoology, Geography, Home Science, Physical Education Director Grade-I, Bio-Chemistry Subject)
Zoology Geography Home Science Physical Education Director Grade I Bio-Chemistry

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012–2013- Subject- Zoology, Bio-chemistry, Geography, Physical Edn. Director Grade-1 and Home Science horizontal rule

CLICK HERE FOR PROVISIONAL SELECTION LIST AFTER CERTIFICATE VERIFICATION - INDIVIDUAL QUERY

தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் வெளியிட்டுள்ள 2013-2014 ஆண்டுக்காண நாட்காட்டியில் பள்ளியில் பராமரிக்கப்பட வேண்டி ய பதிவேடுகள் பட்டியல்


டி.இ.ஓ. தேர்வு முறையில் தற்போது மாற்றம் கொண்டுவரப் பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதிப் பள்ளிகள் என ஏறத்தாழ 56 லட்சம் பள்ளிகள் உள்ளன. இதில் ஐந்தரை லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். கிட்டத்தட்ட ஒன்றரைக் கோடி மாணவ-மாணவிகள் பயில்கின்றனர். பள்ளிகளில் கற்பித்தல் பணியை ஆசிரியர்கள் மேற்கொள்ளும் அதேநேரத்தில், பள்ளிகளின் நிர்வாகப் பணிகளைக் கல்வித் துறை அதிகாரிகள் கவனித்துக்கொள்கிறார்கள்.

ஒன்றிய அளவில் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை உதவித் தொடக்கக் கல்வி அதிகாரிகளும் (ஏ.இ.இ.ஓ.), மாவட்ட அளவில் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளும், அதேபோல், உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளுக்கு கல்வி மாவட்ட அளவில் (67 கல்வி மாவட்டங்கள்) மாவட்டக் கல்வி அதிகாரிகளும் (டி.இ.ஓ.), ஒட்டு மொத்தமாக மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும் சி.இ.ஓ. எனப்படும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் கவனிக் கின்றனர். உதவித் தொடக்கக் கல்வி அதிகாரி, மாவட்டக் கல்வி அதிகாரி ஆகிய பதவிகள், பதவி உயர்வு மூலம் மட்டுமின்றி நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.

பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் ஒய்வு பெற்ற மற்றும் இறந்த பணியாளர்களுக்கு EXGRATIA வழங்குவது சார்பான அரசாணைகள் வெளியீடு

G.O. No.41 Dt: February 14, 2014 - Exgratia payment to families of deceased Contributory Provident Fund/non - pensionable establishment beneficiaries – Revision – Order Click Here...

G.O. No. 42 Dt: February 14, 2014 - Pension – Sanction of further instalment of Dearness Allowance to the Ex-gratia beneficiaries – Order Click Here...

20.02.2014 - டிட்டோஜேக் நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துதல் சார்பு - இயக்குநர் அழைப்பு கடிதம்.(தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி)

முதுகலை ஆசிரியர்களுக்கு முதல்வர் நியமனம், நாளை வழங்குகிறார்


பார்வையற்ற ஆசிரியர்களுக்கு ஏப்.28-ல் சிறப்பு தகுதித்தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

பார்வையற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 28-ம் தேதி சிறப்பு தகுதித்தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 
பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் 55 சத வீதம் மற்றும் அதற்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். 

வீட்டுக்கடன் தவணை: சீக்கிரம் கட்டி முடிப்பது நல்லதா?

இன்று வீட்டுக்கடன் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்தியாவில் மொபைல் போன் எண்ணிக்கைக்கு அடுத்தது வீட்டுக்கடன் வைத்திருப்பவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

வேலைக்குச் சேர்ந்தவுடன் எல்லோரும் தவறாமல் செய்வது வீட்டுக்கடன் வாங்குவது. வீட்டுக்கடன் பொதுவாக 20 வருடம் என எடுத்துக்கொண்டால், ஒரு லட்சத்திற்கு மாதம் 1,000 ரூபாய், 10.5% வட்டி விகிதத்தில் வரும். வட்டி மேலும் கீழும் சென்றாலும் சராசரியாக 10% நீண்ட கால அடிப்படையில் வரும்

Flash NEWS-தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் டிட்டோஜாக் அமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு.-பொதுச்செயலர் செ மு அறிவிப்பு

தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களுடன் (டிட்டோஜாக் மற்றும் தொடக்கப்பள்ளிஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட 7 சங்கங்களுடன்) வரும் 20-02-2014 அன்று காலை 10 மணியளவில் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள்  அதன் முக்கிய 7 கோரிக்கைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்த  அழைப்பு.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியிம் பொதுச்செயளரும் மூத்த பொதுச்செயளாலர் திரு செ.முத்துசாமி இயக்குனரிடம் தொலைபேசியில் பேசும் போது,தொடக்கப்பள்ளி ஆசிரியர்  (டிட்டோஜாக் மற்றும் தொடக்கப்பள்ளிஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட 7 சங்கங்களுடன்) சங்கபொறுப்பாளர்கள் அனைவரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்த அரசு  கூறியுள்ளதாக கூறினார் .மேலும் முறையான அழைப்புக்கடிதம் இன்று மாலை அனைத்து சங்கங்களுக்கும் அனுப்பபடுகிறது.என்றும் தெரிவித்தார் .மேலும்
இயக்குனர் அவர்களைத்தொடர்ந்து கல்விதுறை செயலர் மற்றும் அமைச்சர் அவர்கள் தலைமையில் பேச்சு தொடர வாய்ப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படு வதாக பொதுச்செயலர் முத்துசாமி தெரிவித்தார்.
மேலும் நமது சங்கத்துக்கான அழைப்பை  தலைமை நிலையச் செயலர் திரு சாந்தகுமார் நேரடியாகப்பெற இயக்குனரகம் விரைந்துள்ளார்

தொடக்கக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது .இது குறித்து தமிழ்நாடு அசிரியர் கூட்டணியின் பொதுச்செயளாலர் திருசெ.முத்துசாமி அவர்கள் தகவல்


தொடக்கக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது
இது குறித்து தமிழ்நாடு அசிரியர் கூட்டணியின் பொதுச்செயளாலர் திருசெ.முத்துசாமி அவர்கள் நேற்று மாலை தொடக்கக்கல்வி இயக்குனர் திரு இளங்கோவன் அவர்களுடன் சுமார் 45 நிமிட நேரம் கோரிக்கை வைத்து அது குறித்து விவாதித்தார்

அப்போது இயக்குனர் அவர்கள் திரு முத்துசாமியிடம்

இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் 2013-14ம் கல்வியாண்டுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நிலுவையில் இருந்ததால் பதவி உயர்வு வழங்கபடாமல் இருந்தது.

17/02/2014 அன்றைய டிட்டோஜாக் நடவடிக்கைகள் -டிட்டோஜாக் அறிக்கை

இங்கே கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யவும்

பள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட CEO / ADDL CEO / DEO / DEEO / IMS ஆய்வுக் கூட்டம் மதிப்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் / செயலாளர் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது

DSE - HON'BLE SCL EDN MINISTER, SECY & ALL CEO / ADDL. CEO / DEO / DEEO / IMS REVIEW MEETING WILL BE HELD ON 25.02.2014 REG PROC CLICK HERE...

பொது பணிகள் - மாற்றுத்திறனாளிகள் நலம் - 3% இடஒதுக்கீடு அரசு நியமனங்களில் கடைபிடித்தல் - மாற்றுத்திறனாளிகளுக்கு தனி பதிவேடு பராமரிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

GO.130 PERSONNEL AND ADMINISTRATIVE REFORMS (S) DEPT DATED.01.11.2013 - 3% RESERVATION FOLLOWED IN GOVT APPOINTMENTS - MAINTAIN SEPARATE REGISTER REG ORDER CLICK HERE...

பொது பணிகள் - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயமாக நிழற்பட அடையாள அட்டை (ID CARD) அணிய உத்தரவு

GOVT LTR NO.39627/G/E2/2014, DATED.09.01.2014 - GOVT EMPLOYEES / TEACHERS MUST WEAR EMPLOYEE ID ON DUTY TIME - IMPLEMENTATION REG PROC CLICK HERE..

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு சார்பான வழக்கு மார்ச் 3ம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைப்பு

TATA இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு சார்பான வழக்கு இன்று பிற்பகல் 3.30மணியளவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 21ம் எண் நீதிமன்றத்தில் நீதியர்சர் இரவிசந்திரபாபு அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அரசுத் தரப்பு வழக்கறிஞ்சர் சார்பில் அவகாசம் கோரப்பட்டது

SSA :கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்களுக்கு திறனறித்தேர்வு.


கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்களுக்கு திறனறித்தேர்வு click here...
N

மத்திய இடைக்கால பட்ஜெட்- 2014-15 (முழு விவரங்கள்) தனிநபருக்கான வருமான வரியில் மாற்றமில்லை

திருக்குறளை மேற்கொள்காட்டி பட்ஜெட் பேச்சை நிறைவு செய்தார் ப.சி. அரிசிக்கான சேவை வரி நீக்கம் வருமான வரி விகிதங்களில் மாற்றம் இல்லை காங்கிரஸ் கூட்டணி அரசின் 10 ஆண்டுகால சராசரி வளர்ச்சி 6.2 சதவீதமாகும் பாஜக கூட்டணி அரசின் (1999-2004) வளர்ச்சி விகிதம் 5.9 சதவீதம் தான் மருத்துவ சேவைகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு கல்விக் கடன்களுக்கு வட்டிச் சலுகை வழங்கப்படும்.
*பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட் 10% அதிகரித்து ரூ. 2.24 லட்சம் கோடியாக உயர்வு

*மருத்துவ சேவைகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு

*எஸ்யூவி வகை வாகனங்களுக்கு வரி 20% குறைப்பு

*மொபைல் சாதனங்களுக்கான உற்பத்தி வரி குறைப்பு

*வாகனத்துறையில் உற்பத்தி வரி 12%-ல் இருந்து 10% ஆக குறைப்பு

*வீட்டு வசதிக்கு ரூ8 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்ககங்கள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைபெறவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது பள்ளிகள் சுமுகமாக நடைபெற ஆசிரியர் பயிற்றுநர்களை பயன்படுத்தி கொள்ள உத்தரவு

TEACHERS ASSOCIATION STRIKE - DEPUTE BRTE / CRTEs TO SCHOOLS REG PROC CLICK HERE...

50%டி.ஏ மெர்ஜெர் அல்லது இடைக்கால நிவாரணம்

50% DA MERGE OR INTERIM RELIEF FOR CENTRAL GOVERNMENT EMPLOYEES
As everyone knows the Central Government has constituted the 7th Pay Commission and named its Chairmen recently. The decision of the government to constitute the 7th CPC has triggered many expectations among the central government employees. Among them was the merger of 50% DA with basic pay as done in the 5th CPC. But the 6th CPC did not recommended anything like that. It is understood that the employees are eagerly awaiting for an economic relief from the soaring prices of essential commodities. There are instances of announcing interim relief (I.R) to the employees apart from DA by a newly constitute pay commission prior to their implementations in the past.

http://www.govtempdiary.com/2014/02/50-da-merge-or-interim-relief-for-central-government-employees/

இன்று இடைக்கால பட்ஜெட்டில் மிகப்பெரிய அறிவிப்புகள் இருக்காது: பா. சிதம்பரம்


2014-15ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இந்த இடைக்கால பட்ஜெட்டில் மிகப் பெரிய அறிவிப்புகள் எதையும் எதிர்பார்க்க வேண்டாம் என நிதியமைச்சர் பா. சிதம்பரம் கூறியுள்ளார்.

அரசு பள்ளிகளில் கரையும் நிலையில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் : தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசு பள்ளிகளில், தொழிற்கல்வி பாடப் பிரிவுகள், பல ஆண்டுகளாக முடக்கப்பட்டு இருப்பதால், அடுத்த ஓரிரு ஆண்டுகளில், இந்த பாடப் பிரிவுகள் காணாமல் போகும் நிலை உருவாகி உள்ளது. கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள், பிளஸ் 2 படிப்பிற்கு பின், சுயதொழில் செய்ய வழிவகை செய்யும், இந்த பாடப்பிரிவுகளுக்கு, உரிய முக்கியத்துவம் அளிக்க, தமிழக அரசு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தமிழக மாணவரின் கண்டுபிடிப்பு குறித்து அமெரிக்க பல்கலை மாநாட்டில் விவாதம்

அமெரிக்காவின் லாங்வுட் பல்கலையில் நடந்த அறிவியல் உச்சி மாநாட்டில், தமிழகத்தை சேர்ந்த மாணவர் டெனித் ஆதித்யாவின் கண்டுபிடிப்பு குறித்து விவாதம் நடந்தது. மாநாட்டாளர்களின் கேள்விகளுக்கு, அம்மாணவர், "டெலி கான்பரன்சிங்' மூலமாக விளக்கம் கொடுத்தார்.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பிளஸ் 1 மாணவர் டெனித்ஆதித்யா,16. தொடர்ந்து பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து வருகிறார் இவர், கடந்த இரண்டு ஆண்டிற்கு முன், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் கப், பிளேட், கேரிபேக் போன்றவைகளுக்கு மாற்றாக, வாழை இலையிலான கப், பிளேட், பை போன்றவைகளை தயார் செய்வதற்கு, வாழை இலையை பதப்படுத்தி பல ஆண்டு உபயோகிக்கும் தொழில்நுட்பத்தை

அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில், 90 சதவீதம், விரிவுரை யாளர் பணியிடங்கள் காலி!

"அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில், 90 சதவீதம், விரிவுரை யாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன' என, ஆசிரியர் சங்க கூட்டமைப்பினர் தெரிவித்தனர். காரைக்குடியில், அரசு மற்றும் உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள், ஆசிரியர் சங்க கூட்டமைப்பு சார்பில், ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடந்தது.

பிஸ்கட் பற்றிய சில தகவல்கள்


ஆண்ட்ராடு இயங்குதளத்தில் இருக்க வேண்டிய சில பயனுள்ள apps கள்-- முதல் பகுதி


ஆண்ட்ராடு இயங்குதளத்தில் இருக்க வேண்டிய apps களின் தொகுப்பு 1:

1. AVG ANTIVIRUS

முற்றிலும் இலவசமான சிறிய அளவு மெமரி கொண்ட சிறந்த ஆண்டிவைரஸ். வைரஸ்களை தடுப்பதிலும் ஏற்கனவே உள்ள வைரஸ்களையும் அழிப்பதில் சிறந்த ஆண்ட்டிவைரஸ். சந்தேகத்திற்குரிய இணையதள முகவரிகளை முன்எச்சரிக்கை கொடுத்து தடுத்து நிறுத்துகிறது.மேலும் பல antivirus இருந்தாலும் இலவசமாக கிடைப்பதில் இது சிறந்தது என்று நினைகிறேன்

இதனுடைய தரவிறக்கும் சுட்டி :
https://play.google.com/store/apps/details?id=com.antivirus&feature=search_result#?t=W251bGwsMSwxLDEsImNvbS5hbnRpdmlydXMiXQ..

2. MEMORY BOOSTER

மொபைல்களில் தேவையின்றி இயங்கிகொண்டிருக்கும் மென்பொருட்களை தடுத்து நிறுத்த உதவும் இந்த மென்பொருள் மிக அவசியமானவை. நாம் பயன்படுத்தாமல் தானாகவே இயங்கும் மென்பொருட்கள் நம்முடைய RAM மெமரியை அடைத்து கொண்டு மொபைல்களின் வேகத்தை குறைக்கும். இந்த மென்பொருள் கொண்டு நாம் RAM மெமரியை கிளீன் செய்து மொபைல்களின் வேகத்தை அதிகரிக்கலாம்.நான் பயன்படுத்துகிறேன் வேணும் என்றால் மட்டும் தரவிரக்குங்க்பா

லிங்க் : https://play.google.com/store/apps/details?id=imoblife.memorybooster.lite&feature=search_result#?t=W251bGwsMSwxLDEsImltb2JsaWZlLm1lbW9yeWJvb3N0ZXIubGl0ZSJd

3. APPS 2 SD

மொபைல்களில் நிறுவும் மென்பொருட்கள் போன் மெமரியில் இருந்து மெமரி கார்ட்களுக்கு தானாகவே மாற்ற உதவுவதில் மிக சிறந்த மென்பொருள். தேவையின்றி மொபைல்களில் அமர்ந்து கொள்ளும் பைல்களையும் அகற்றும் சக்தி கொண்டது.இது பயன்படுத்துவது நல்லது

கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும்-திமுக மாநாட்டில் வலியுறுத்தல்


கல்வி கசப்பாக இருந்தாலும்,பலன் அளிக்கும்


புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி 18-இல் தர்னா

புதிய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய ஒழுங்குமுறை மற்றும் அபிவிருத்தி சட்டத்தையும் ரத்து செய்யக்கோரி சென்னையில் ஓய்வூதியர்கள் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) தர்னா போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இது குறித்து மத்திய - மாநில அரசு, பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநிலத் தலைவர் என்.எல்.சீதரன், செயலாளர் ஏ.சுந்தரம் உள்ளிட்டோர் சென்னையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்படும்


12 லட்சம் பேர் எழுதிய குரூப்-4 தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

குரூப்-4 தேர்வு

தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்கள் 5 ஆயிரத்து 556 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பொறுப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைத்தது.

தேவை, கல்வி முறையில் ஒரு மாற்றம்! – என்.முருகன் ஐ.ஏ.எஸ். (ஓய்வு) thanks thuglaq

நாட்டின் மிகப் பெரிய பொக்கிஷம் குழந்தைகள் என்பது, உலகெங்கும் ஒத்துக் கொள்ளப்பட்ட விஷயம். அவர்களின் தரம் மற்றும் வளர்ச்சிதான் ஒரு நாட்டின் எதிர்கால வளத்தை நிர்ணயம் செய்கிறது என்பதை எல்லோரும் ஒத்துக் கொள்கிறோம்.

இந்தியாவின் இன்றைய மக்கள் தொகை சுமார் 122 கோடி. அதில், சரி பாதி 50 சதவிகிதம் 25 வயதிற்கு கீழ் உள்ள இளைஞர் மற்றும் சிறுவர்கள். மீதி 50-ல் 65 சதவிகிதம் 35 வயதிற்கு உட்பட்டவர்கள்.

கோடிக்கணக்கான சிறுவர்களை உள்ளடக்கிய நம் நாட்டில், இவர்களது தரமான வளர்ச்சிக்கு அடிப்படையான அம்சங்களை நாம் உருவாக்கி வளர்த்துள்ளோமா?

இடைநிலை ஆசிரியர் சம்பள முரண்பாட்டினை நீக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, இரண்டு வாரத்தில் பதில் அளிக்க அரசுக்கு வாய்ப்பு !!!

SSTA சார்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சென்ற ஆண்டே தொடுக்கப்பட்ட வழக்கினை யாவரும் அறிவீர்கள்.அந்த வழக்கினை விசாரணைக்கு மீண்டும் கொண்டு வருவதில் சரியான நீதிமன்ற நடைமுறைப்படி முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்திலும் தன் கணக்கினை கனகச்சிதமாக, உண்மையை மூலதனமாக, மேலும் உச்சநீதிமன்ற அனுபவத்தை கொண்டு

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண்களில் மாற்றம், இடஒதுக்கீட்டுப் பிரிவினர் அதிர்ச்சி?

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்தில்வெயிட்டேஜ் மதிப்பெண் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. பட்டதாரிஆசிரியர்களைப் பொருத்தவரை பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட் மற்றும் டிஇடி தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களைக் கணக்கிட்டு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியர்களைப் பொருத்தவரை பிளஸ்2 , டி.டி.எட்., மற்றும் டி.இ.டி தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களைக் கணக்கிட்டு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.
தற்போது அரசாணை எண்: 29 நாள் : 14.02.2014பள்ளிக்கல்வி (டிஆர்பி) துறை வெளியிடப்பட்ட அரசாணையில் இடஒதுக்கீட்டுப்பிரிவினர் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 82 முதல் 89 மதிப்பெண் வரை எடுத்தாலே தேர்ச்சிஎன தமிழக அரசு அறிவித்து அரசாணை பிறப்பித்துள்ளது. 

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்திய ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா


ராஜஸ்தான் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான, வசுந்தரா ராஜே, அரசு பள்ளிகளில் சென்று திடீர் ஆய்வு நடத்தியதுடன், மாணவர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு, அவர்களுக்கு பாடமும் நடத்தினார்.

ராஜஸ்தானில், முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான, பா.ஜ., ஆட்சியில் உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், காங்., படுதோல்வி அடைந்தது. பா.ஜ., இதுவரை இல்லாத அளவு பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று, வசுந்தரா ராஜே முதல்வராக

மாவட்டக் கல்வி அதிகாரி தேர்வில் மீண்டும் மாற்றம் முதன்மைத் தேர்வில் கல்வியியல் பாடம் நீக்கம்

பள்ளிக்கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) பணியிடங்கள்75 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், 25 சதவீதம் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. பதவி உயர்வில் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 40 சதவீத இடங்களும், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 35 சதவீத இடங்களும் ஒதுக்கப்படுகின்றன.

பள்ளிகளில் புதிய வகுப்பறைகள்: இனி, 'பொதுப் பணித்துறைக்கு நிதி வழங்கப்பட்டு, புதிய வகுப்பறைகள் கட்டப்படும்'

தமிழகத்தில், 1,851 பள்ளிகளில், புதிய வகுப்பறைகள், கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், மத்திய, -மாநில அரசுகளின் பங்களிப்புடன், அரசு பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள் கட்டுவதற்கு, நிதி ஒதுக்கீடு

இடைநிலை ஆசிரியர்களுக்கு, 15 ஆண்டு கழித்தே வேலை வாய்ப்பு?

''தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு, 2013 - -14 க்குள் வேலை உத்தரவாதம் கிடைக்காவிடில், குறைந்தது, 15 ஆண்டு கழித்தே வாய்ப்பு இருக்கும்'' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆசிரியர் தேர்வில் 'வெயிட்டேஜ்' வழங்கும் முறைக்கு எதிர்ப்பு:பள்ளி கல்வி துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

பட்டதாரி ஆசிரியர் தேர்வில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கும் முறைக்கு, எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மனுக்களுக்கு, இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, பள்ளி கல்வித் துறைக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'வெயிட்டேஜ்' மதிப்பெண்:சென்னை, ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த, பிரியவதனா என்பவர், தாக்கல் செய்த மனு:நான், பி.ஏ., ஆங்கில இலக்கியத்தில், 64.5 சதவீதம், பி.எட்., படிப்பில், 82 சதவீதம் பெற்றுள்ளேன். எம்.ஏ., ஆங்கில இலக்கியத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளேன்.கடந்த ஆண்டு, ஆகஸ்ட்டில் நடந்த, ஆசிரியர் தகுதி தேர்வில், 104 மதிப்பெண் பெற்றேன். கடந்த மாதம் நடந்த, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றேன்; நியமனத்துக்காக காத்திருக்கிறேன்.

வாகனத்திருட்டு இனி இருக்காது.!!! ???மாணவரின் அரிய கண்டுபிடிப்பு,,சாதித்த தமிழ் மாணவன்


வாகனத்திருட்டு இனி இருக்காது.!!! ???

டூவீலரில் 3 ஜி கருவி மூலம் 80 சதவிபத்துகளை குறைக்கலாம்:

மாணவரின் அரிய கண்டுபிடிப்பு,,சாதித்த தமிழ் மாணவன்

விருதுநகரில் நடந்த,37வது மாநில அளவிலான ஜவகர்லால் நேரு அறிவியல் கண்காட்சியில் இடம்
பெற்ற மானாமதுரை மாணவர் மணிகண்டனின்
புதிய கண்டுபிடிப்பான "3 ஜி' வாகன கட்டுப்பாட்டு கருவியால், 80 சதவீத விபத்துகளை குறைக்க முடியும்.உலகில், ஆண்டுக்கு 12 லட்சம் பேர்
சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர்.


டூவீலர்களால் 75 சதவீத விபத்துகள்
அதிகரித்துள்ளன. இதை கட்டுப்படுத்தும் விதமாக, சிவகங்கை மாவட்டம்,மானாமதுரை ஓ.வி.சி., மெட்ரிக்
பள்ளி மாணவர் வி.ஆர். மணிகண்டன்,ஜி.எஸ்.எம்., தொழில்நுட்பத்திலான கருவி மூலம், "3 ஜி' வாகன

ஆசிரியர் பணி நியமனம் தாமதமாகும், புதிய நியமனம் ஜூன் மாதம் நடைபெறும்


ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் குறைப்பதில் அரசு எடுத்த தாமத முடிவால் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனமும் தாமதமாகும். பிளஸ்2 பொதுத் தேர்வு முடிந்த பின்னர் சான்றிதழ் சரிப்பார்ப்பு நடக்கும். அதன் பின்னர் வெயிட்டேஜ் மதிப்பெண் நிர்ணயித்து ஜூன் மாதம் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.இதனால் அரசு வேலை நம்பி வேலை வாய்ப்பை இழந்த ஆசிரியர்கள் அல்லாடி வருகின்றனர்.

இந்த முறை நடைபெற்ற தேர்விலும் பல குளறுபடிகள் ஏற்பட்டது. குறிப்பாக வினாத்தாளில் பல தவறுகள் இருந்தன. இதனால் பலர் வழக்கு தொடர்ந்தனர். எனவே தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த பிரச்சனைகளை கடந்து ரிசல்ட் வெளியானது. வழக்கமாக ரிசல்ட் வெளியான சில மாதங்களில் பணி நியமனம் வழங்கப்படும். ஆனால் இந்த முறை ரிசல்ட் வெளியான பின்னர் பலர் வழக்கு தொடர்ந்தனர். இதனால் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் பாதித்தது.


web stats

web stats