rp

Blogging Tips 2017

பள்ளிக் கல்வி மானியக் கோர்க்கையின் போது Dr. MH. Jawahirullah MLA அவர்கள் பள்ளிக் கல்வித் தொடர்பாக முன் வைத்த சில பொதுவான ஆலோசனைகள்

2012ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கும் சலுகை

TET ஆசிரியர் தகுதித் தேர்வில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண் சலுகை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை, இந்த அவையில் நானும் மற்ற எதிர்க்கட்சிகளும் எடுத்துரைத்ததை ஏற்று, அந்தச் சலுகை வழங்கப்ட்டது. ஆனால் 2013 லிருந்துதான் அந்தச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்பு 2012 ல் அந்தத் தேர்வு எழுதிய மாணவர்கள் அதிகமான மதிப்பெண் பெற்றிருக்கின்றார்கள். இந்தச் சலுகை இல்லாததால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வரக்கூடிய நிலை இல்லை. எனவே 2012 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் அந்தச் சலுகை வழங்கப்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.

எங்கள் படை தயார்.... தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு கூட்டம்... நாளை ; 20.07.2014 இடம்; டேனிஷ் மிஷன் மேல் நிலைப்பள்ளி , திருவண்ணாமலை. நேரம் ; காலை 10.00.

பள்ளிக்கல்வி - முறையான ஓட்டுநர் உரிமம் பெறாத மாணவ / மானவியர் பள்ளிக்கு இரண்டு சக்கர வாகனம் ஓட்டி வர அனுமதிக்க கூடாது என இயக்குநர் உத்தரவு

CLICK HERE-DSE - STUDENTS WHO R NOT HAVING DRIVING LICENSE SHOULD NOT ALLOWED IN SCHOOL CAMPUS REG PROC

நாளை 20.07.2014 -விஜய் டிவி-நீயா? நானா? "அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள்" -

விஜய் டிவியின் நாளைய 20.07.2014 நீயா? நானா? நிகழ்ச்சியின் தலைப்பு "அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள்" - நிகழ்ச்சி அனைவரும்

காணுங்கள் .

வருமான வரி கணக்கை இணையத்தில் தாக்கல் செய்வது எப்படி? - Tutorial



ஜூலை இறுதி என்றாலே "சீக்கிரம் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்" என்கிற விழிப்பு அனைவரிடமும் இருக்கும். அதற்கென இருக்கும் படிவத்தை முழுதும் நிரப்புவது பெரும்பாடு தான்!! இணையத்தை நாம் பல செயல்களுக்குப் பல வழிகளில் பயன்படுத்துகிறோம். இணையத்தில் மூலம் நமது வருமான வரிக் கணக்கை எப்படி தாக்கல் செய்வது (Efiling of income tax returns) என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

தமிழகத்தில் சமச்சீர் கல்விமுறை முறையாக அமலாகவில்லை பாலபாரதி குற்றச்சாட்டு


உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழகத்தில் சமச்சீர்கல்வி முறை முறையாக அமலாக வில்லை என்று சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத்தலைவர் கே.பாலபாரதி வலியுறுத்தினார்.வியாழனன்று பேரவையில் பள்ளிக்கல்வி, உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கைள் மீதான விவாதத்திற்கு அமைச்சர்கள் பதில் அளித்த பின்னர் இதனை அவர் தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வில் 38ஆயிரம் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 10ஆயிரம் பேரைத்தான் அரசு தேர்வுசெய்ய உள்ளது. அவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ., மெட்ரிக் பள்ளிகளில் தாய்மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும்: தினமணி

சி.பி.எஸ்.இ., மெட்ரிக் பள்ளிகளிலும் தாய்மொழி கட்டாயமாகக் கற்றுத் தரப்பட வேண்டும் என "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் வலியுறுத்தினார்.
சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அமிர்தா வித்யாலயா தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவர் பேசியது:
இந்தியாவின் பெருமையை வெளிநாட்டில் நிலைநாட்ட வேண்டுமானால், அதற்கான நாற்றங்கால் ஆரம்பப் பள்ளிகளில்தான் இருக்கிறது. இந்தப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுப்பதை வேண்டாம் என்று சொல்லவில்லை. அதோடு, வள்ளுவரின் திருக்குறளும், ஒளவையாரின் ஆத்திச்சூடி, மூதுரை, கொன்றை வேந்தன் ஆகியவற்றையும் கற்றுக் கொடுங்கள். அவற்றை மனனம் செய்யச் சொல்லுங்கள்.

மாநில பொதுக்குழு-நாளை திருவண்ணாமலை நகரில்

நாளை -20.07.2014 தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு திருவண்ணாமலை நகரின் மத்தியில் நூறாண்டு விழா கண்ட டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா கட்டிட அரங்கில்சிறப்பாக நடைபெற உள்ளது.
பொதுக்குழுவிற்கு வருவோர் திருவண்ணாமலை பெரியார் சிலை பஸ் நிறுத்தம் இறங்கி வரலாம்
.
காந்தி சிலை ,வி.பி சி தியேட்டர் , சன்னதிதெரு ஆகிய பகுதிகளிலிருந்தும் எளிதாக பள்ளி வளாகத்தை அடையலாம்.
திருவண்னாமலையில்
உலகப்புகழ்பெற்ற அருள்மிகு அண்ணாமலையார் ஆலயம்,
இரமாணாஸ்ரமம்

தங்கள் சொந்த பணத்தை செலவழிக்கும் அங்கன்வாடி பணியாளர்கள்-


நிதி ஒதுக்காததால் தங்கள் சொந்த பணத்தை செலவழிக்கும் அங்கன்வாடி பணியாளர்கள்

அங்கன்வாடி மையங்களுக்கு காய், கனிகள் வாங்க, சமூக நலத்துறை ஐந்து மாதங்களாக பணம் ஒதுக்கவில்லை. இதனால் பணியாளர்கள் தங்கள் ஊதியத்திலிருந்து, காய், கனிகள் வாங்க செலவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சமூக நலத்துறையின் கீழ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவின்றி ஆரோக்கியமாக வளர, கருவுற்ற தாய்மார்களுக்கு மூன்று மாதங்களில் இருந்து சத்துமாவும், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க, ஐந்து வயது வரை சத்து மாவு, இணை உணவு வழங்கப்படுகிறது.

அங்கீகாரமும் இன்றி இயங்கும் பள்ளிகளை மூடும் வழக்கில் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

போதிய அடிப்படை வசதிகள் இன்றி, அங்கீகாரமும் இன்றி இயங்கும் பிரீ ஸ்கூல், பிளே ஸ்கூல் போன்ற பள்ளிகளை மூட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, வில்லிவாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்ரமணியன், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:சென்னையில், பிளே ஸ்கூல், பிரீ ஸ்கூல் என்ற பெயர்களில், 760 பள்ளிகள் முறையான அங்கீகாரம் பெறாமல் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில், விளையாட்டு மைதானம் இல்லை, ஆசிரியர் பற்றாக்குறை என்று பல பிரச்னைகள் உள்ளன.

பள்ளிகளில் மாணவர்கள் -ஆசிரியர்விகிதாச்சாரத்தை மாற்ற எதிர்பார்ப்பு

மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், தொடக்க பள்ளிகளில், மாணவர் - ஆசிரியர் விகிதாச்சாரத்தை மாற்றி அமைத்து, கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும், 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க பள்ளிகள் உள்ளன.50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் பயின்று வருகின்றனர். இந்த தொடக்க பள்ளிகளில், அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் படி, 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரம் கடைபிடிக்கப்படுகிறது.

பள்ளிக்கூடங்களில் முதலுதவி பெட்டி, தீயணைப்பு சாதனம் இருக்க வேண்டும்;



பள்ளிக்கூடங்களில் முதலுதவி பெட்டி, தீயணைப்பு சாதனம் இருக்க வேண்டும்; தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை

பள்ளிக்கூடங்களில் முதலுதவி பெட்டி, தீயணைப்பு சாதனங்கள் தயார் நிலையில் சரியாக இருக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் சுற்றறிக்கை விடுத்துள்ளார்.

தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பி.எட்., மாணவர் சேர்க்கை

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பதிவாளர் (பொறுப்பு) தமிழ்ச்செல்வம் தெரிவித்துள்ளதாவது: இப்பல்கலையில் பி.எட்., (2 ஆண்டுகள்) பட்டப் படிப்பில் காலி இடங்களுக்கு, தற்போது மாணவர் சேர்க்கை நடக்கிறது. தகுதியுள்ளோர், www.msuniv.ac.in மூலம் தகவல் அறிக்கை மற்றும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கட்டணமாக ரூ.650க்கு கேட்பு வரைவோலை இணைத்து 31.7.2014க்குள் விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டும்.

மாணவர்கள் வராததால் 2 அரசுப்பள்ளிகள் மூடல்



ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே, மாணவர்கள் வராததால், 2 அரசு தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டன.

திருவாடானை ஒன்றியத்தில் உள்ள பல அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவ, மாணவிகள் இல்லாததால் பள்ளிகள் மூடப்படுவது தொடர்கிறது. கடந்த மாதம் கிளியூர் பள்ளியும், நேற்று முன்தினம் கீழக்கோட்டை மற்றும் அறிவித்தி ஆகிய 2 கிராமங்களில் உள்ளஅரசு தொடக்கப்பள்ளிகளும்

11 ஆயிரம் புதிய ஆசிரியர்கள் ஆன் - லைன் மூலம் ஆகஸ்ட்டில் பணி நியமனம்



புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள, 11 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள்,ஆகஸ்ட் மாதத்தில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.இதுவரை நடந்த டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வுகள் மூலம், மதிப்பெண் அடிப்படையில், 10,700 பட்டதாரி ஆசிரியர்களை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), தேர்வு செய்ய உள்ளது. இந்த தேர்வு பட்டியல், வரும், 30ம் தேதி வெளியாகிறது.

பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு முதல் முறையாக வயது வரம்பு நிர்ணயம்.

அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் காலிப் பணியிட தேர்வுக்குமுதன் முறையாக வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது பொறியியல் பட்டதாரிகள் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு சமூகப் பிரிவு அடிப்படையில் வயது வரம்புச் சலுகை அளிக்கப்படாததும் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் 139 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) வெளியிட்டது.இதற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க செப்டம்பர் 5 கடைசித் தேதியாகும். எழுத்துத் தேர்வு அக்டோபர் 26-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 1-7-2014 தேதியில் 35 வயதைத் தாண்டியவராக இருக்கக் கூடாது என இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொழில்நுட்ப கல்வி இயக்குநரக அறிவுறுத்தலின்படி இந்த வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறியது:அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடத் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வயது வரம்பு நிர்ணயம் செய்யப்படுவது கிடையாது. அவர்கள் 57 வயது வரை விண்ணப்பிக்கலாம். இதே நிலைதான் அரசு பொறியியல் கல்லூரி உதவிப்பேராசிரியர் பணித் தேர்வுக்கும் இருந்தது.ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த முறை அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணித் தேர்வு செய்யப்பட்டபோதும்கூட இதுபோல் வயது வரம்பு நிர்ணயம் எதுவும் செய்யப்படவில்லை. ஆனால்,இப்போது முதன் முறையாக வயது வரம்பு நிர்ணயம் செய்திருப்பது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.அதுமட்டுமின்றி, அரசுப் பணியிடங்களை நிரப்பும்போது பல்வேறு சமூகப் பிரிவுகளுக்கு, குறிப்பாக பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வரையிலும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரையிலும் வயது வரம்புச் சலுகை அளிக்கப்படுவது வழக்கம். இந்த சமூகப் பிரிவுகளுக்கான சலுகையும், டிஆர்பி அறிவிப்பில் இடம்பெறவில்லை. இதன் காரணமாக என்னைப் போன்று தனியார் பொறியியல் கல்லூரிகளில்பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான அனுபவமிக்க பேராசிரியர்கள் அரசுப் பணிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த வயது வரம்பு நிர்ணயத்தை நீக்க வேண்டும் என்றார்.


இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியது:அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வுக்கு வயது வரம்பு நிர்ணயம் செய்வது தொடர்பாக, தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்துடன் டிஆர்பி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது, அரசு கலை அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வைப்போல், இதற்கும் வயது வரம்பு எதுவும் நிர்ணயம் செய்யக் கூடாது. மேலும் விண்ணப்பதாரர் தனியார் பொறியியல் கல்லூரியில் பணியாற்றிய பணி அனுபவத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் எனவும் பரிந்துரை செய்யப்பட்டது.ஆனால், தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அதை ஏற்க மறுத்துவிட்டது. விதியின்படி, அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 35 வயதைத் தாண்டியிருக்கக் கூடாது என கண்டிப்பாகத் தெரிவித்துவிட்டனர் என்றார்.

பி.எட்., படிப்பு ஓராண்டு தான் உயர்கல்வி அமைச்சர் தகவல்

தமிழகத்தில், பி.எட்., படிப்பு காலம் ஓராண்டுதான்; மாற்றமில்லை,'' என, உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்தார்.சட்டசபையில், பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறை மானிய கோரிக்கை விவாதம்:

ம.ம.க., ஜவாஹிருல்லா:

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில், தேர்வு செய்யப்படுபவர்கள் பட்டியல் வெளிப்படையாக, இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும்.

அமைச்சர் பழனியப்பன்: துணைவேந்தர் நியமனம் என்பது, உரிய குழுக்கள் அமைத்து தான் தேர்வு செய்யப்படுகிறது. பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) விதிமுறைப்படி தான், நியமிக்கப்படுகின்றனர். இதில் ஒளிவு மறைவு என்பது இல்லை.

ஆசிரியர்களுக்கும் ஆடை கட்டுப்பாடு[தலையங்கம்-dailythanthi)


சமீபத்தில் சென்னையில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கட்டிடத்துக்குள் வேட்டி அணிந்து வந்தார் என்ற ஒரே காரணத்துக்காக ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கே அனுமதி மறுக்கப்பட்டது. இது பெரிய பிரச்சினையாக உருவெடுத்து சட்டசபையிலும் எதிரொலித்து, இப்போது முதல்–அமைச்சர் ஜெயலலிதாவே நடவடிக்கை எடுக்கும் கட்டத்துக்கு சென்றுவிட்டது. இந்த சம்பவத்துக்கு பிறகு ஆடை கட்டுப்பாடு என்ற வார்த்தை பிரபலமாகிவிட்டது. சில பல பணிகள் நிமித்தம் சீருடை அல்லது ஆடை கட்டுப்பாடு என்பது காலம்காலமாக உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்தந்த பணிக்கேற்ப நிர்ணயிக்கப்படும் இந்த ஆடைகளை அணிந்தால்தான் அந்த பணியும் சிறக்கும், அதை ஆற்றுவதற்கும்உறுதுணையாக இருக்கும். மேலும், அந்தந்த பணிக்கேற்ற அடையாளம் நிச்சயம் தேவை. அந்த உடையை அவர்கள் அணிந்துவந்தால்தான் ஒரு தனித்துவம் தெரியும். இந்த உடைகளை அவர்கள் அணிந்து வரும்போது அந்த உத்தியோகத்துக்குரிய ஒரு கம்பீரம் தானாகவே வரும்.

அகஇ - ஆங்கில வழி பள்ளிகளின் விபரம் மாவட்டங்களிலிருந்து பெற உத்தரவு

SSA - ABL - ENGLISH MEDIUM SCHOOLS DETAILS CALLED REG PROC CLICK HERE...

SSA - ABL - ENGLISH MEDIUM SCHOOLS DETAILS CALLED REG PROC CLICK HERE...

சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக வெளியிட்ட அறிவிப்புகள்

Announcements of School Education Department 2014-15 - Tamil Version Click Here...

கலை ,அறிவியல் கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர்கள் நியமனம்


நூலகங்களில் சேரும் மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணப்பெட்டி-தமிழக அரசு


எச்.ஐ.வி. பாதிப்பில் இந்தியா 3-ஆவது இடம்: ஐ.நா. தகவல்

உலக அளவில் எச்.ஐ.வி. பாதிப்பு உள்ளவர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 21 லட்சம் பேருக்கு, அதாவது பத்தில் நான்கு பேருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால், எச்.ஐ.வி. பாதிப்பை ஒழிக்கும் திட்டம் வரும் 2030ஆம் ஆண்டு முடிவுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐ.நா.வின் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் கண்காணிப்பு அமைப்பு, வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதிலும் 35 கோடி பேருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு உள்ளது. அவர்களில், 19 கோடி பேருக்கு தங்களுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது பற்றித் தெரியவில்லை.

வருமான வரி கணக்கு தாக்கல்...இன்னும் 14 நாட்கள்தான் இருக்கின்றன ---- முழுமையான வழிகாட்டி!

மாதச் சம்பளக்காரர் கள் முடிந்த 2013-14-ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு (இன்கம் டாக்ஸ் ரிட்டர்ன்) விவரத்தை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31, 2014.

இதற்கு இன்னும் 14 நாட்கள்தான் இருக்கின்றன. கடைசி வாரத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்துகொள்ளலாம் என்று இருந்துவிட்டு, அவசரமாக வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது தவறுகள் ஏற்படக்கூடும். இதைத் தவிர்க்க இப்போதே களமிறங்கிவிடுங்கள்.

வருமான வரிக் கணக்கை எப்படி தாக்கல் செய்ய வேண்டும், எந்த மாதிரியான விஷயங்களையெல்லாம் கவனிக்க வேண்டும் என சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் கோபால் கிருஷ்ண ராஜுவிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

எம்.பி.பி.எஸ்.: ஜூலை 21-இல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு


தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். இரண்டாம் கட்ட கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் வரும் திங்கள்கிழமை (ஜூலை 21) தொடங்குகிறது. தொடர்ந்து ஜூலை 27-ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும்.

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு புதுப்பித்தல் அனுமதி (100 எம்.பி.பி.எஸ். இடங்கள்), திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியின் 50 கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்கள், சேலம் அரசு மருத்துவக் கல்லூரியின் 25 கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்கள் என மொத்தம் 175 இடங்களுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது; இந்தக் கல்லூரிகளிலிருந்து தமிழக ஒதுக்கீட்டுக்கு 149 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைப்பது உறுதியாகியுள்ளது. இந்த இடங்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும்.

கும்பகோணம் பள்ளித் தீ விபத்து வழக்கில் ஜூலை 30-ல் தீர்ப்பு

தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கும்பகோணம் பள்ளித் தீ விபத்து வழக்கில் வரும் 30-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

கும்பகோணம் காசிராமன் தெருவில் இருந்த கட்டட வளாகத்தில் ஸ்ரீ கிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப் பள்ளி, சரஸ்வதி வித்யாசாலா, ஸ்ரீகிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளி ஆகியவை இயங்கி வந்தன. இதில், ஸ்ரீ கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில் 2004 ஆம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தன. தவிர, 18 குழந்தைகள் பலத்தக் காயமடைந்தன.

புதிய பட்டதாரி ஆசிரியர்கள் ஆகஸ்ட் இறுதிக்குள் பணி நியமனம்!



புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள, 11 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள், ஆகஸ்ட் மாதத்தில் பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.

இதுவரை நடந்த டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வுகள் மூலம், மதிப்பெண் அடிப்படையில், 10,700 பட்டதாரி ஆசிரியர்களை டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) தேர்வு செய்ய உள்ளது.

பி.எட்., எம்.எட். படிப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க புதிய வசதி.



பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 29ஒருங்கிணைப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு மற்றும்அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீடு இடங்களுக்கு ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நடத்தும் இந்த கலந்தாய்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சென்னையில், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை ஒற்றைச் சாளர முறையில் நடைபெறவுள்ளது. கலந்தாய்வில் கலந்து கொள்ள இந்தாண்டு முதல் இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 29 இடங்களில் ஒருங்கிணைப்பு

அரசுப் பள்ளிகளின் ஆங்கில வழி பாடப் பிரிவுகளில் புதிதாக 1.06 லட்சம் மாணவர்கள்: அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்.



அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள ஆங்கில வழிப் பாடப் பிரிவுகளில்இந்த ஆண்டு புதிதாக 1 லட்சத்து 6 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற உயர் கல்வி, பள்ளிக் கல்வி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் (தளி), அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளைத் தொடங்கி அரசே ஆங்கில வழிக் கல்வியை ஊக்கப்படுத்தக் கூடாது என்றார்.அப்போது குறுக்கிட்டு அமைச்சர் கே.சி.வீரமணி பேசியது:தமிழகத்தில் ஆங்கில வழிக் கல்வியை எதிர்த்துப் போராடுபவர்களும் அவர்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்க வைப்பதில்லை. ஏழை, எளியவர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளும் ஆங்கிலம் கற்க வேண்டும் என்பதற்காகவே அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.இந்தப் பிரிவுகளில் இந்த ஆண்டு 1 லட்சத்து 6 ஆயிரம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர்.பல பெற்றோர்கள் தங்களது பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிப் பிரிவுகளைத் தொடங்குமாறு கோரி வருகின்றனர்.

மடிக் கணினி:
ராமச்சந்திரன்: அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுயநிதிப் பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கப்படுவதில்லை. ஆனால், அவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. இந்த மாணவர்களுக்கும் மடிக் கணினி வழங்க வேண்டும்.

நடப்பு கல்வி ஆண்டில் 3,459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்; அமைச்சர் கே.சி.வீரமணி அறிவிப்பு.



தமிழகத்தில் பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டில் 3 ஆயிரத்து 459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் பள்ளிக் கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறைஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர்.அவர்களுக்கு பதிலளித்துப் பேசும்போது அமைச்சர் கே.சி.வீரமணி வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களிலுள்ள பள்ளிச் செல்லாப் பெண் குழந்தைகள் மற்றும் இடைநின்ற பெண் குழந்தைகளுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய தரமான கல்வி கற்க வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், 61 கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. விளையாட்டு சாதனம் இந்தப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயின்று, கல்வியைத் தொடராமல் இடைநின்ற 152 பெண் குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ரூ.38 லட்சம் செலவில் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அவர்களின் வயதிற்கேற்ற வகுப்புகளில் அருகில் உள்ள பள்ளிகளில் இடைநிலைக் கல்வியில் சேர்க்கப்படுவார்கள்.

2014-15-ம் கல்வியாண்டில் 100 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.20 லட்சம் செலவில் விளையாட்டுச் சாதனங்கள் வழங்கப்படும். இந்தக் கல்வியாண்டில், கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் 9-ம் வகுப்பு பயிலும் நலிவுற்ற வகுப்பைச் சார்ந்த 32 ஆயிரத்து563 மாணவ மாணவியர்களுக்கு அவர்களின் செயல் திறன்களை மேம்படுத்துவதற்காக ரூ.1.63 கோடி செலவில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.2014-15-ம் கல்வியாண்டில் 32 மாவட்டங்களிலும் அறிவியல் கண்காட்சி ரூ.32 லட்சம் செலவில் நடத்தப்படும்.

சிறப்பு ஆசிரியர் பணியிடம் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடங்கிய இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ், தரமான கல்வி வழங்குவதற்காக, ரூ.5.35 கோடி செலவில்202 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். இந்த ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படும்.நடப்புக் கல்வியாண்டில் தலைமை ஆசிரியர்களின் கல்வி மற்றும் நிர்வாகத்திறனை மேம்படுத்தும் பொருட்டு ஆயிரத்து 140 உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, ரூ.55 லட்சம் செலவில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

3 ஆயிரத்து 459 ஆசிரியர் பணியிடம்:

சென்னை ஐகோர்ட்டின் மதுரைக் கிளையில் தொடரப்படும் பள்ளிக்கல்வித் துறையைச் சார்ந்த வழக்குகளில் நடவடிக்கை மேற்கொள்ள ஒரு சட்ட அலுவலர் பணியிடமும், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்ந்த வழக்குகளில் நடவடிக்கை மேற்கொள்ள ஒரு சட்ட அலுவலர் பணியிடமும், ஆக மொத்தம் புதிதாக இரண்டு சட்ட அலுவலர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.கடந்த மூன்று ஆண்டுகளில் 71 ஆயிரத்து 708 ஆசிரியர் பணியிடங்களை முதல்- அமைச்சர் ஜெயலலிதா அனுமதித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக 2014-15-ம் கல்வியாண்டில்,3 ஆயிரத்து 459 ஆசிரியர் பணியிடங்களும், (முதுகலை ஆசிரியர் 952, பட்டதாரி ஆசிரியர் 2,489, உயற்கல்வி இயக்குனர் 18), 75 ஆசிரியர் சார்ந்த பணியிடங்களும், 340 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் (உதவியாளர் 152, இளநிலை உதவியாளர் 188) நிரப்பப்படும்.

நடமாடும் நூலகம் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் காவலர்களுக்கு விடுமுறைக் காலத்தினைக் கணக்கில் எடுத்துக் கொண்டு ஈட்டிய விடுப்பு ஓராண்டுக்கு வழங்கப்படும். 17 நாட்கள் ஈட்டிய விடுப்பை 30 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும்.

பி.எட் சேர்க்கை : விளம்பர அறிவிப்பு

இவரைப் பார்த்தால் கண்ணகி போல தெரிகிறது... மதுரை ஆசிரியைக்கு உயர்நீதிமன்றம் புகழாரம்.

இந்த ஆசிரியையின் போராட்டத்தைப் பார்த்தால் கால் சிலம்பை எடுத்துக் கொண்டு மதுரை மன்னனிடம் நீதி கேட்டுப் போராடிய கண்ணகி போலத் தெரிகிறது என்று மதுரை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த ஆசிரியையின் பெயர் சங்கீதா. இவர் மதுரை பீபி குளத்தைச் சேர்ந்தவர். சிவகங்கை மாவட்டம் புழுதிப்பட்டியில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியையாக இருந்து வந்தார். இவர் கடந்த 2012ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி நடந்த இடமாறுதலுக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொண்டார். அப்போது மதுரை திருப்பாலை அரசு உயர்நிலைப்பள்ளிக்கு இவருக்கு இடமாறுதல் கிடைத்தது. ஆனால் அரசு உத்தரவு கொடுக்கவில்லை.
தொடங்கியது போராடடம் இதையடுத்து ஆசிரியை சங்கீதா, மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியை சந்தித்து விவரம் கேட்ட போது, சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மூலம் இடமாறுதல் உத்தரவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சங்கீதாவுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடத்தில் 22.8.2012 அன்று கிரிஜா என்பவர் இடமாறுதல் செய்யப்பட்டு நியமிக்கப்பட்டார்.
இதுகுறித்து விவரம் கேட்பதற்காக பலமுறை கல்வி அதிகாரியை சந்தித்துப் பேச முயன்ற போதும், அவரை சந்திக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் சங்கீதா. அதில், தனக்கு திருப்பாலை பள்ளிக்கு இடமாறுதல் உத்தரவு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் சங்கீதாவே நேரில் ஆஜராகி தனக்காக வாதிட்டார்.
இடமாறுதல் கவுன்சிலிங்கில் நடந்த முறைகேடுகள் குறித்து விவரித்ததுடன், இதன்காரணமாக தனது குடும்பம் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்தும் நீதிபதியிடம் கண்ணீர்மல்க முறையிட்டார் சங்கீதா. இதைத்தொடர்ந்து, மனுதாரரின் குற்றச்சாட்டுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர், துணை இயக்குநர் ஆகியோரிடம் இருந்து உரிய விளக்கங்களை பெற்றுத் தெரிவிக்க, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

அரசு பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி!

தமிழக அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இதுகுறித்து அவர் பேசுகையில், ''தமிழகத்தில் தருமபுரி, திருவண்ணாமலை, நாமக்கல், நீலகிரி மற்றும் சேலம் ஆகிய 5 மாவட்ட அரசு பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியில் 4,782 மாணவிகள் பங்கு பெறுவார்கள்.

அரசு பள்ளிகளில் உள்ள அனைத்து காலி பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும்; பள்ளிக்கல்வி அமைச்சர்

இன்று சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறையின் மான்ய கோரிக்கையின் போது தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களும்

விரைவில் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டார்.

''மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை, தற்போதுள்ள, 60லிருந்து, 62 ஆக உயர்த்தும் திட்டம் இல்லை,''

''மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை, தற்போதுள்ள, 60லிருந்து, 62 ஆக உயர்த்தும் திட்டம் இல்லை,'' என, மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்

CTET - SEPT 2014 Notification

Central Teacher Eligibility Test
CLICK HERE-ONLINE ENTRY -CTET
In accordance with the provisions of sub-section (1) of Section 23 of the RTE Act, the National Council for Teacher Education (NCTE) had vide Notification dated 23rd August, 2010 and 29th July, 2011 laid down the minimum qualifications for a person to be eligible for appointment as a teacher in classes I to VIII. It had beeninter alia provided that one of the essential qualifications for a person to be eligible for appointment as a teacher in any of the schools referred to in clause (n) of section 2 of the RTEAct is that he/she should pass the Teacher Eligibility Test (TET) which will be conducted by the appropriate Government in accordance with the Guidelines framed by the NCTE.The rationale for including the TET asa minimum qualification for a person to be eligible for appointment as a teacher is as under:

தினமலர் நாளிதழ் வந்த செய்தியை சுட்டிகாட்டி தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் சுற்று சுவர் பராமரிப்பு /செலவினகள் குறித்து இயக்குநர் உத்தரவு

CLICK HERE-DEE-DIR SEEKS PRIMARY/MID SCHOOLS COMPOUND WALL NEED LIST

வழக்கு - பகுதி நேர துப்புரவு பணியாளர்களால் தங்களது பணியினை வரன்முறைப்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட் வழக்கில் பிறப்பித்த இறுதியாணை நடைமுறைப்படுத்துதல் சார்பு

DEE - PART TIME SWEEPER REGULARISATION REG FINAL JUDGEMENT REG PROC CLICK HERE...

TN GOVT LTR NO.7172/CC3/2014, DATED.14.03.2014 - EMPLOYEES WORKING ON DAILY WAGES - BRINGING INTO REGULAR ESTABLISHMENT ON COMPLETION OF TEN YEARS OF SERVICE REG ORDER & JUDGEMENT COPY CLICK HERE... 

தொடக்கக் கல்வி - சென்னை மண்டல இரயில் கண்காட்சிக்கு அழைத்து செல்ல உத்தரவு

தமிழர் கலாச்சாரத்துக்கு எதிரான கிளப்களுக்கு தடை: பேரவையில் ஜெயலலிதா அறிவிப்பு


தமிழர் கலாச்சாரத்திற்கு எதிராக செயல்படும் தனியார் கிளப்களின் அனுமதி ரத்து செய்யப்படும் என்றும், அதற்கான சட்ட மசோதா நடப்பு கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வாசித்த அறிக்கை:
"வெளிநாடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் எல்லாம் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து கலந்து கொள்வதற்கோ அல்லது உரையாற்றுவதற்கோ எவ்வித தடையும் இல்லாத சூழ்நிலையில், தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் வேட்டி அணிந்து பங்கேற்க தனியார் மன்றம் தடை விதித்திருப்பது அரசமைப்புச் சட்டத்திற்கும், ஜனநாயக மரபுகளுக்கும், தனி நபர் உரிமைக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் எதிரான செயல்.

மானியக் கோரிக்கையில் சத்துணவு ஊழியர்களின் எதிர்பார்ப்பும் - ஏமாற்றமும்


தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் டி.ஆர்.மேகநாதன் வெளி யிட்டுள்ளசெய்திவருமாறு: தமிழக அரசின் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் கீழ் பள்ளி சத்துணவு மையங்க ளில் அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் என்ற பெயரில் 1 லட்சத்து இருபதாயிரத்துக்கும் மேற் பட்ட ஊழியர்கள் 1982ம் ஆண்டு முதல் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக முறையான வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதமின்றி மிகவும் சொற்ப ஊதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர்

வீரம் - வீரம் மற்றும் தைரியத்திற்கான தமிழக அரசின் பெண்களுக்கான "கல்பனாசாவ்லா" விருது 2014 விண்ணப்பங்கள் அனுப்ப கோரி உத்தரவு

CLICK HERE- DEE - 2014 KALPANA CHAWLA AWARD APPLICATION CALLED REG PROC

TNTET கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 31 ஆயிரம்பேரின் நிலை என்ன? அடுத்து வரும் பணி நியமனங்களில் முன்னுரிமை எதுவும் வழங்கப்படாது என தகவல்


ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் மொத்தம் 42 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் சுமார் 11ஆயிரம் பேர் ஜூலை இறுதியில் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மீதமுள்ள 31 ஆயிரம்பேரின் நிலை என்ன, அவர்களுக்கு அடுத்து வரும் பணி நியமனங்களில் முன்னுரிமை வழங்கப்படுமா என்பது தொடர்பாகஆசிரியர்தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறியது:

ஆங்கிலத்தில் ஒவ்வொரு சொல்லிற்கும் பல விளக்கமளிக்கும் இணையதளம்

              இணையதள முகவரி : http://www.wordhippo.com/
இந்த இணையதளத்தில் ஒரு சொல்லைத் தேர்வு செய்து, அந்த சொல்லிற்கு இணையாக வேறு என்ன சொற்களெல்லாம் இருக்கின்றன? இந்த சொல்லிற்கு எதிர்சொற்கள் (Opposite Word)என்னென்ன இருக்கின்றன? அந்த சொல்லைக் கொண்டு எப்படியெல்லாம் வாக்கியங்கள் (Sentense) அமைக்கலாம்? அந்த சொல்லுக்கு இணையாக (டச்சு - Dutch), (பிரெஞ்ச் - French), (ஜெர்மன் - German), (இத்தாலி - Italian), (போர்ச்சுக்கீசு - Portuguese), (ஸ்பானிஷ் - Spanish) போன்ற மொழிகளுக்கு மாற்றம் (Translate)செய்து வரும்

இனி கெசட்டட் ஆபீசர் கையொப்பம் தேவையில்லை; சுய சான்றொப்பமே போதுமானது


அரசுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பங்களிலும் அரசு பதிவு பெற்ற கெசட்டட் ஆபிசர் அல்லது நோட்டரி பப்ளிக் ஆகியோரிடம் கையொப்பம்(அட்டஸ்டேஷன்) பெற வேண்டும் என்பது விதியாக இருந்தது. இது மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் கடும் சிரமமாக இருந்தது.

தாமதமாகும் அரசு பள்ளிகள் தரம் உயர்வு அறிவிப்பு: கல்வி மானியக் கோரிக்கையில் எதிர்பார்ப்பு

தமிழகத்தில் 2014-15 கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் தரம் உயர்வு அறிவிப்பு மற்றும் பள்ளிகள் பெயர் விவரப் பட்டியல், நாளை (ஜூலை 17) நடக்கும் பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கையில் வெளியாகுமா' என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் அல்லது ஜூலை முதல் வாரத்தில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலை பள்ளிகள் விவரம் அறிவிக்கப்படும். ஆனால், நடப்பு கல்வியாண்டிற்கான தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் அறிவிப்பு மற்றும் பெயர் பட்டியல் விவரம் இதுவரை வெளியாகவில்லை. அதேபோல், அனைவருக்கும்

13 சி.இ.ஓ., 40 டி.இ.ஓ. பணியிடங்கள் காலி


தமிழகம் முழுவதும் 13 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், 40-க்கும் மேற்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தலைமையாசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.



தமிழகம் முழுவதும் 66 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களும், 145-க்கும் மேற்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்களும் உள்ளன.

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் (டி.இ.இ.ஓ.), மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் ஆகிய பணியிடங்கள் மாவட்டக் கல்வி அலுவலர் தகுதிக்கு இணையான பணியிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

2015-16 ஆம் ஆண்டிற்கான எண்வகை பட்டியல் ஒப்படைத்தல் மற்றும் தயாரித்தல் சார்பான நிதித்துறை உத்தரவு

Letter No.37897/BG-I/ 2014-1, dated 14th July 2014 - BUDGET 2015-2016 – Submission of Number Statement – Instructions for the preparation of – Regarding order Click Here.

அரசின் ஆதரவோடு, அசுர வேகத்தில், தனியார் பள்ளிகள் வளர்கின்றன. தீர்வு என்ன?


இதற்குத்தீர்வாக, சமூக ஆர்வலர்கள் கூறுவதாவது:இந்த சூழ்நிலை மாறி, அரசு பள்ளிகள் உயிர்பெற வேண்டுமானால், 'அரசு பள்ளியில், மாணவர் சேர்க்கைக்காக, ஆசிரியர்கள் படும் சிரமங்களை, கல்வி அதிகாரிகளும் பங்கிட்டு கொள்ள வேண்டும்.

அரசு பள்ளிகள் மேம்பட, மக்களின் பங்களிப்பும் வேண்டும்' என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.'

தரமான கல்வி, அரசுப் பள்ளிகளில் தான் கிடைக்கும்' என்று, மக்களுக்கு நம்பிக்கை வரும்படி, கல்வித்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி கணக்குகளை தணிக்கை செய்து 2013-14 வரை கணக்குத்தாள்கள் வழங்குவது சார்ந்து மாவட்டங்களிலுள்ள AEEO / AAEEO மற்றும் தணிக்கைத்துறை உதவி இயக்குநர்கள் / ஆய்வாளர்கள் கூட்டமர்வு 18.07.2014 அன்று தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

DEE - PANCHAYATH UNION / MUNICIPAL TEACHERS 2013-14 TPF STATEMENT REG AEEO / AAEEO & AUDIT DEPUTY DIRECTOR / INSPECTOR JOINT SESSION MEETING ON 18.07.2014 @ CONCERN DISTRICTS PROC CLICK HERE...

20.07.2014--ல் திருவண்ணாமலை- தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு- அழைப்பு

TRB TNTET New Weightage, Provisional Mark List Published.


TRB TNTET New Weightage, Provisional Mark List Now Published TRB Official Website.

For View TNTET Provisional Selection list notification - Click Here
For View TNTET New Weightage Individual Query - Click Here

கல்விக்கண் திறந்த வள்ளலை நன்றியுடன் நினைவு கூர்வோம்

தமிழ்த் தாய் வாழ்த்து

CLICK HERE TO VIEW

காமராஜர் பற்றி நான் இயற்றிய பாடல் எனது குரலொலியில் -Vijayalakshmi Raja

   

எனது குரலொலியில் கேட்க

கல்விக்கண் திறந்த வள்ளல் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் மற்றும் பயனுள்ள சுவைமிக்க செய்திகள்

 
காமராஜர் திரைப்படம் காண CLICK HERE

காமராஜர் வாழ்க்கை வரலாறு, விளக்கப்படம் CLICK HERE



காமராஜ் மறைந்த அன்று வந்த பத்திரிக்கைகள் அரிய தொகுப்பு: CLICK HERE TO VIEW
காமராஜரின் அரிய புகைப்படங்கள்:CLICK HERE TO VIEW
காமராஜர் வாழ்வில் ஏற்பட்ட சுவையான அனுபவங்கள்: கல்வி வளர்ச்சி நாளில் மாணவர்களுக்கு சொல்ல உதவும்(மிகவும் பயனுள்ள 66 பக்க புத்தகம்) CLICK HERE TO VIEW

2013-2014 TNTET தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்று சரிபார்த்ததில் தகுதியானோர் விவரம் வெளியீடு

TRB - DIRECT RECRUITMENT OF B.T ASSISTANTS 2012-13 NOTIFICATION CLICK HERE... 

TRB - TNTET - PAPER-II - INDIVIDUAL QUERY CLICK HERE.



2012-ல் தேர்ச்சி பெற்று அரசுப் பணிக்கு தெரிவு செய்யப்படாதவர்கள் விவரம் சரிபார்க்கலாம்.2013-ல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்று சரிபார்த்ததில் தகுதியானோர் விவரம் வெளியீடு2014-ல் சிறப்பு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற் சான்று சாரிபார்த்ததில்தகுதியானோர் விவரம்...பணியிடத்திற்கு தகுதியானோர் விவரம் www.trb.tn.nic.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.தேர்வர்கள் தங்களது விவரங்களை இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.விவரத்தில் திருத்தம் இருப்பவர்கள் மட்டும் நேரில் வர வேண்டிய மையம், தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.www.trb.tn.nic.in- என்ற இணையதளத்தில் அனைத்து விவரங்களையும் அறியலாம்.

தொடக்கக் கல்வி - ஊராட்சி / அரசு / நகராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 30.06.2013 முதல் 31.12.2014 வரை பணி ஓய்வு பெற்ற / ஓய்வு பெற உள்ளவர்கள் விவரம் கோரி உத்தரவு

DEE - RETIREMENT VACANCY DETAILS CALLED FROM 30.06.2013 TO 31.12.2014 REG PROC CLICK HERE...

தமிழ்நாடு திருத்திய ஊதியம் 2009 - ஆறாவது ஊழியக் குழு - திருத்திய ஊதியத்தில், ஊதிய மறு நிர்ணயம் அனுமதித்தல் சார்பான தெளிவுரை

GOVT (FIN) LTR NO.31761 / CMPC / 2014-1, DATED.27.06.2014 - PERMISSION FOR EXERCISING RE-OPTION TO COME OVER TO THE REVISED SCALES OF PAY - FURTHER CLARIFICATION CLICK HERE...

1.1.2004 பிறகு ஓய்வு பெறுவோருக்கு புதிய ஓய்வூதிய காலத் திட்டத்தின்படி எவ்வளவு ஓய்வூதியத்தை வழங்கலாம் என்பதை அரசுக்குப் பரிந்துரை செய்ய உள்ளது; 7வது ஊதியக் குழு

மத்திய அரசு ஊழியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஏழாவது ஊதியக் குழுவின் முதலாவது கூட்டம் தில்லியில் வரும் ஜூலை 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. நீதிபதி அசோக் குமார் தலைமையில் இக்
கூட்டம் நடைபெறவுள்ளது. குழுவின் உறுப்பினர்கள் விவேக் ரே, ரதின் ராய், மீனா அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.


மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம், படிகள், சலுகைகள் உள்ளிட்டவற்றை நிர்ணயிப்பது தொடர்பாக அரசுக்குப் பரிந்துரைக்க நீதிபதி அசோக் குமார் தலைமையிலான ஊதியக் குழுவை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நியமித்தது. இக்குழுவின் பரிந்துரை 2016-17 நிதியாண்டில் அமல்படுத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

10,726 பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம் தொடர்பான அறிவிக்கை வெளியீடு.

புதிய ஆசிரியர்கள் நியமனம்:10,726 பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம் தொடர்பான அறிவிக்கை வெளியீடு.காலிப்பணியிட விவரங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனம் செய்யப்படவுள்ளனர்.
தமிழ் - 782,
ஆங்கிலம் - 2822,
கணிதம் - 911,
இயற்பியல் - 605
வேதியியல் - 605,
தாவரவியல் - 260,
விலங்கியல் - 260 காலிப்பணியிடங்கள் உள்ளன.
வரலாறு - 3592,
புவியியல் - 899-ல் காலிப் பணியிடங்கள் உள்ளதாக தேர்வு வாரியம்

பள்ளிக்கல்வி - 2014ம் ஆண்டில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் ஜுலை 15ஐ கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட அரசு அனுமதித்து உத்தரவு. மாவட்டந்தோறும் சிறந்த மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.100000/-ம், உயர்நிலைப் பள்ளிக்கு ரூ.75000/-ம், நடுநிலைப் பள்ளிக்கு ரூ.50000/-ம், தொடக்கப் பள்ளிக்கு ரூ.25000/-ம் வழங்க அரசு உத்தரவு

பள்ளிக்கல்வி - 2014ம் ஆண்டில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் ஜுலை 15ஐ கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட அரசு அனுமதித்து உத்தரவு. மாவட்டந்தோறும் சிறந்த மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.100000/-ம், உயர்நிலைப் பள்ளிக்கு ரூ.75000/-ம், நடுநிலைப் பள்ளிக்கு ரூ.50000/-ம், தொடக்கப் பள்ளிக்கு ரூ.25000/-ம் வழங்க அரசு உத்தரவு

கேரளத்தில் 742 ஒப்பந்த தமிழ் ஆசிரியர்கள் பணி நீக்கம்



கேரள மாநிலத்தில் பணிபுரிந்து வந்த 742 ஒப்பந்த தமிழ் ஆசிரியர்களை அம்மாநில அரசு திடீரென பணி நீக்கம் செய்துள்ளது.

கேரள மாநிலத்தில் காசர்கோடு, பாலக்காடு, இடுக்கி, திருவனந்தபுரம் மாவட்டங்களில் மொழி சிறுபான்மையின மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இதில் காசர்கோடு மாவட்டத்தில் கன்னட மொழி பேசுவோர் அதிக அளவில் வசிக்கின்றனர். மற்ற 3 மாவட்டங்களிலும் கணிசமான அளவுக்கு தமிழ் மொழி பேசுவோர் உள்ளனர். இப்பகுதிகளில் அதிக அளவில் தமிழ் வழி கல்விக் கூடங்களும் இயங்கி வருகின்றன. கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் ஏராளமான தமிழ் மக்கள் உள்ளனர்.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள்-ஜூலை 15- கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடிட அரசாணை 97 நாள் -12.07.2014 & தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை

CLICK HERE-G.O 97-DT 12.07.2014-CELEBRATE FORMER CHIEF MINISTER BIRTHDAY ON 15.07.2014 IN ALL SCHOOLS REG

CLICK HERE-DEE 18274/J2/14-DIR SEEKS TO CELEBRATE FORMER HONBLE MINISTER KAMARAJ BIRTHDAY PRO REG

ஆசிரியர் தகுதி தேர்வில் தேறாத ஆசிரியர்களுக்கு 'கெடு!': அடுத்த ஆண்டு ஆகஸ்டுக்குள் 'பாஸ்' ஆக வேண்டும்

கடந்த, 2010 ஆகஸ்ட், 23ம் தேதிக்குப் பின், ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள், டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வில் தேர்ச்சி பெற விதிக்கப்பட்ட, 5 ஆண்டு காலக்கெடு, அடுத்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்துடன் முடிகிறது. தனியார் பள்ளிகளில் பணியாற்றும், 1 லட்சம் ஆசிரியரில், 30 ஆயிரத்திற்கும்மேற்பட்டோர், டி.இ.டி., தேர்வை முடிக்காமல் பணியாற்றுவதால், அவர்களின் வேலை, கேள்விக்குறியாகி உள்ளது.

ஜூலை 23-இல் ஏழாவது ஊதியக் குழுக் கூட்டம்

மத்திய அரசு ஊழியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஏழாவது ஊதியக் குழுவின் முதலாவது கூட்டம் தில்லியில் வரும் ஜூலை 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. நீதிபதி அசோக் குமார் தலைமையில் இக் கூட்டம் நடைபெறவுள்ளது. குழுவின் உறுப்பினர்கள் விவேக் ரே, ரதின் ராய், மீனா அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம், படிகள், சலுகைகள் உள்ளிட்டவற்றை நிர்ணயிப்பது தொடர்பாக அரசுக்குப் பரிந்துரைக்க நீதிபதி அசோக் குமார் தலைமையிலான ஊதியக் குழுவை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நியமித்தது. இக்குழுவின் பரிந்துரை 2016-17 நிதியாண்டில் அமல்படுத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க திருவண்ணாமலை சி.இ.ஓ., வேண்டுகோள்

மாணவர்களிடம் கனிவான முறையில் நடந்து, அவர்களுக்கு, பயிற்சி அளித்து, அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாமில், சி.இ.ஓ., பொன்னையன் வலியுறுத்தினார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, மேற்கு ஆரணி, பெரணமல்லூர், அனக்காவூர் ஆகிய பகுதிகளில் செயல்படும், 68 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, இரு நாள் பயிற்சி வகுப்பு, ஆரணி வட்டார வளமையத்தில் நடந்தது.

web stats

web stats